Skip to main content

நாடார் சரஸ்வதி பொறியியல் கல்லூரி மாணவிக்கு பணி நியமன ஆணை

தேனி, மே.5-
தேனி நாடார் சரஸ்வதி பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி மாணவ மாணவிகள் கத்தார் மேக்னிபுரோ டெ டெக்னாலஜி (Magnipro Technology services) பன்னாட்டு நிறுவனம் ஆன்லைன் வாயிலாக நடத்திய டெக்னிக்கல் தேர்வு சுற்று மற்றும் HR தேர்வில் கலந்து கொண்டனர். 
இந்த தேர்வில் கணினி அறிவியல் பொறியியல் துறையின் இறுதியாண்டு மாணவி T.மமிதா செக்யூரிட்டி ஆபரேசன் சென்டர் அனாலிஸ்ட் (Security operation Center Analyst) பணிக்கு ஆண்டுக்கு ரூ.28,00,000/- (இருபத்து எட்டு இலட்சம்) ஊதியத்துடன் தேர்வு செய்யப்பட்டார். 

மேலும் இந்த மாணவி கத்தார் மேக்னிபுரோ டெக்னாலஜி நிறுவனம் 45 நாட்கள் வழங்கிய பயிற்சியில் (Internship) பங்கு பெற்றது குறிப்பிடத்தக்கது. தேர்ந்தெடுக்கப்பட்ட 
இந்த மாணவிக்கு தேனி மேலப்பேட்டை இந்து நாடார்கள் உறவின்முறையின் தலைவர் T.ராஜமோகன், உபதலைவர் P.P.கணேஷ், பொதுச்செயலாளர் M.M.ஆனந்தவேல், பொருளாளர் M.பழனியப்பன், ஆட்சிமன்ற குழு உறுப்பினர்கள், கல்லூரியின் செயலாளர்கள் A.ராஜ்குமார், A.S.R.மகேஸ்வரன், இணைச்செயலாளர் S.நவீன்ராம். கல்லூரியின் நிர்வாகக்குழு உறுப்பினர்கள். கல்லூரியின் முதல்வர் டாக்டர்.C.மதளைசுந்தரம். கல்லூரியின் துணை முதல்வர்கள் டாக்டர்.N.மாதவன். டாக்டர்.M.சத்யா, வேலைவாய்ப்புதுறை அலுவலர் டாக்டர்.C.கார்த்திகேயன், கணினி அறிவியல் பொறியியல் துறையின் தலைவர் டாக்டர்.].மதளைராஜ் மற்றும் பேராசிரியர்கள் பாராட்டி பணிநியமன ஆணையை வழங்கி சிறப்பித்தனர்.
............................
நாகராஜ், தலைமை நிருபர் 





Comments