Skip to main content

நாடார் சரசுவதி பொறியியல் கல்லூரியில் 11-ம் ஆண்டு பட்டமளிப்பு விழா

தேனி, மார்ச்.30-

தேனி அருகே உள்ள நாடார் சரசுவதி பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் 11-ம் ஆண்டு பட்டமளிப்பு விழா 29.3.2025 அன்று நடைபெற்றது. விழாவிற்கு தேனி மேலப்பேட்டை இந்து நாடார்கள் உறவின்முறை தலைவர் ராஜமோகன் தலைமை தாங்கினார். உபதலைவர் கணேஷ், பொதுச்செயலாளர் ஆனந்தவேல், பொருளாளர் பழனியப்பன், கல்லூரி செயலாளர்கள் ராஜ்குமார், மகேஸ்வரன், இணைச்செயலாளர் நவீன்ராம் ஆகியோர்கள் முன்னிலை வகித்தனர். 
கல்லூரி முதல்வர் மதளைசுந்தரம் வரவேற்புரையாற்றி கல்லூரியின் கடந்த ஆண்டின் செயல்பாடுகள் மற்றும் சாதனைகள் பற்றி எடுத்துரைத்து பட்டதாாரி மாணவர்களுக்கு வாழ்த்துரை வழங்கினார்.

விழாவில் மைசூர் யூனிட் டெக்னாலஜி இன்போசிஸ் -இணைத்தலைவர் பிரதீப் சிவகாமிநாதன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் மூலம் உலகம் எவ்வாறு இயங்குகின்றது என்றும், எதிர்காலத்தில் மனிதர்களின் வாழ்க்கை செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் மூலமே பயணிக்க கூடிய சமுதாய சூழல் உருவாகும் என்றும், UPI போன்ற நிதி சார்ந்த தொழில்நுட்பத்தின் மூலம் பொருளாதார வளர்ச்சி, மென்பொருள் தொழில்நுட்பத்தின் முன்னேற்றத்தின் மூலம் எதிர்காலம் ஹைபர் கனெக்ட்டடு (Hyber Connected) சமுதாயமாக மாறி வருகிறதென்றும், பொறியியல் பட்டதாரிகள்,பணிபுரியும் இடங்களில் குழுவாக இணைந்து செயல்பட்டாலும், தனித்திறமை, ஆளுமை திறனை வளர்த்துக் கொள்ள வேண்டுமென்றும், ஸ்பீடு டெக்னாலஜி நிறைந்த உலகத்தில் போட்டியிடுவதற்கு தங்களை தயார்படுத்திக் கொள்ள வேண்டுமென்று பொறியியல் பட்டதாரிகள் இடையே சிறப்புரையாற்றினார்.
மேலும் போட்டிகள் நிறைந்த உலகத்தில் மனிதநேயம் மற்றும் தீர்க்கமான சிந்தனைகள் மூலம் வாழ்க்கை தரத்தை மேம்படுத்திக் கொள்ள வேண்டுமென்றும், பொருளாதார சவால்களை எதிர்கொண்டு சமுதாய வளர்ச்சிக்கு பங்களிக்க வேண்டுமென்றும், சிறப்புரையாற்றினார். இதனைத்தொடர்ந்து விழாவின் போது 158 இளநிலை மற்றும் முதுகலை பொறியியல் மாணவ, மாணவியருக்கு பட்டய சான்றிதழ் வழங்கினார்.

விழாவில் தேனி மேலப்பேட்டை இந்து நாடார்கள் உறவின்முறையின் அனைத்துக் கல்வி நிறுவனங்களின் செயலாளர்கள், இணைச்செயலாளர்கள், கல்லூரி நிர்வகக்குழு உறுப்பினர்கள், முதல்வர்கள், துணை முதல்வர்கள் கலந்து கொண்டனர்.

விழாவிற்கான ஏற்பாடுகளை கல்லூரியின் துணை முதல்வர்கள் மாதவன், சத்யா, வேலைவாய்ப்பு அலுவலர் கார்த்திகேயன் மற்றும் கல்லூரி தேர்வு கட்டுப்பாட்டு துறையின் ஒருங்கிணைப்பாளர்கள் கணேஷ், மகாலட்சுமி, சிவகணேசன் ஆகியோர் செய்திருந்தனர்.


நாகராஜ், தலைமை நிருபர் 

...........................

Comments