Skip to main content

தேனி நாடார் வித்யாலயா மெட்ரிக் பள்ளி ஏற்பாட்டில் குறுவட்ட போட்டி

தேனி மாவட்டத்தில் 2024-2025 ம் கல்வி ஆண்டின் தேனி குறுவட்ட போட்டியை தேனி மேலப்பேட்டை இந்து நாடார் உறவின்முறை வித்யாலயா மெட்ரிக் மேல்நிலை பள்ளி ஏற்று நடத்தி வருகிறது. 

இந்த போட்டிக்கான நிகழ்வு தேனி நாடார் சரஸ்வதி மேல்நிலை பள்ளியில் 30.8.2024 அன்று காலையில் துவங்கியது. 
 
இந்நிகழ்விற்கு தேனி மேலப்பேட்டை இந்து நாடார் உறவின்முறை மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்களின் தலைவர் ராஜமோகன் தலைமை தாங்கி ஒலிம்பிக் கொடியினை ஏற்றிவைத்து சிறப்பித்தார். உறவின்முறை உபதலைவர் கணேஷ், பொதுச்செயலாளர் ஆனந்தவேல், பொருளாளர் பழனியப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நாடார் உறவின்முறை வித்யாலயா மெட்ரிக் மேல்நிலை பள்ளி செயலாளர் நவமணி வரவேற்றார்.

நிகழ்வில் தேனி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் R.சிவப்பிரசாத் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு அணிவகுப்பு மரியாதையை ஏற்று விளையாட்டு போட்டிகளை துவக்கி வைத்தார்.

நிகழ்வின் போது தேனி மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் குபேந்திரன் கலந்து கொண்டு  குறு வட்டக் கொடியை ஏற்றினார். தேனி மேலப்பேட்டை இந்து நாடார் உறவின் முறை மற்றும் அனைத்துக் கல்வி நிறுவனங்களின் உபதலைவர் கணேஷ் ஒலிம்பிக் தீபத்தினை ஏற்றிவைத்தார்.

இதனைத்தொடர்ந்து விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது. இந்த போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த பரிசுகள் வழங்கும் நிகழ்ச்சிக்கு நாடார் உறவின்முறை ஆட்சி மன்றக்குழு உறுப்பினரும், அனைத்து பள்ளிகளின் விளையாட்டுத் துறை செயலாளர் ராமச்சந்திரன்  வரவேற்றார். இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக தேனி மாவட்ட மின்சார வாரியத்தின் மேற்பார்வை பொறியாளர் சகாயராஜ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்பித்தார். 

மேலும் சிறப்பு அழைப்பாளர்களாக தேனி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் இந்துராணி, தேனி மாவட்ட கல்வி அலுவலர் வசந்தா, மாவட்ட கல்வி அலுவலர் ஜான்சன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றி வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினர். 

முடிவில் நாடார் உறவின்முறை வித்யாலயா பள்ளி இணைச்செயலாளர் தீபக்கணேஷ் நன்றி கூறினார்.

நாகராஜ், முதன்மை நிருபர் 



Comments