கோவை, தொண்டாமுத்தூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி சார்பில் பாரதியார் தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்ற மேற்கு குறுமையம் தடகள போட்டிகள் கோவை நேரு விளையாட்டு அரங்கில் நடைபெற்றது,
இப்போட்டியில் தொண்டாமுத்தூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியரும், மேற்கு குறுமை விளையாட்டுப் போட்டிகளின் செயலாளர் க.ரஹீமா பேகம் ஒலிம்பிக் தீபத்தை ஏற்றி வைத்தார்.
இதனை தொடர்ந்து விழாவில் சிறப்பு விருந்தினர்களாக கோவை மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் குமரேசன் தேசியக் கொடியை ஏற்றியும் . பாரதிய வித்யா பவன் மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியை மகேஸ்வரி மேற்கு மண்டல குறுமையம் கொடியை ஏற்றி வைத்தார்கள். பள்ளியின் உதவி தலைமை ஆசிரியர் டி. ஆனந்த் பள்ளியின் கொடியை ஏற்றி வைத்தார்.
விழாவில் 11 ஆம் வகுப்பு படிக்கும் மாணவி சி .நிவேதா ஒலிம்பிக் உறுதி மொழியை வாசிக்க பள்ளி மாணவ, மாணவிகள் உறுதிமொழி ஏற்றனர்.
இதனைத்தொடர்ந்து தடகள போட்டிகள் துவங்கி நடைபெற்றது. இந்த போட்டிகளில் 14 வயதுக்கு உட்பட்டவர்கள், 17 வயதுக்கு உட்பட்டவர்கள் , 19 வயதுக்கு உட்பட்ட மூன்று பிரிவுகளில் 43 பள்ளிகளில் இருந்து 1,057 மாணவ, மாணவியர்கள் பங்கேற்றனர்.
போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ,மாணவிகளுக்கு தொண்டாமுத்தூர் இந்திய விடுதலைப் போராட்ட வீரர்கள் நினைவு நற்பணி மன்றத் தலைவர் டாக்டர் மா. சிவக்குமார் சான்றிதழ் மற்றும் பரிசுகளை வழங்கினார்.
சீனிவாசன், உதவி ஆசிரியர்
Comments