Skip to main content

குச்சனூர் அருகே மாநில அளவிலான கபடி போட்டி : 52 அணிகள் பங்கேற்றன

 

தேனி, ஏப்.24

தேனி மாவட்டம், குச்சனூர் பேரூராட்சிக்கு உட்பட்ட கு.துரைச்சாமிபுரம் பகுதியில் உள்ள அருள்மிகு அங்காளஈஸ்வரி அம்மன், கொத்தாள முத்தையா, ராமபுலி அய்யனார் திருக்கோவில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு DSP ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில் 24-ஆம் ஆண்டு மாநில அளவிலான மாபெரும் கபாடி போட்டி MMS மைதானத்தில் 22.4.2025 மற்றும் 23.4.2025 ஆகிய 2 நாட்கள் நடைபெற்றது. 
இந்த போட்டியில் சேலம், திண்டுக்கல், தூத்துக்குடி, விருதுநகர், மதுரை, தேனி ஆகிய மாவட்டங்களில் இருந்து 52 அணிகள் பங்கேற்றன. இதில் இறுதி கபடி போட்டியினை சின்னமனூர் ஓம் சக்தி டெக்ஸ்டைல்ஸ் நிர்வாகி,  தொழிலதிபர் M.C.போஸ் வீரர்களுக்கு கை குலுக்கி துவக்கி வைத்தார். மேலும் கபடி போட்டி நடுவர்களுக்கு பொன்னாடை அணிவித்து கௌரவித்தார்.
இறுதி போட்டியில் வெற்றி பெற்று முதலிடம் பிடித்த அணிக்கு ரூ.40 ஆயிரம் ரொக்க பணமும், கோப்பையும் வழங்கப்பட்டது. 2-வது இடம் பிடித்த அணிக்கு ரூ.30 ஆயிரம் ரொக்க பணமும் கோப்பையும், 3-வது இடம் பிடித்த அணிக்கு ரூ.20 ஆயிரம் ரொக்க பணமும் கோப்பையும், 4-வது இடம் பிடித்த அணிக்கு ரூ.10 ஆயிரம் ரொக்க பணமும் கோப்பையும் வழங்கப்பட்டது.
மின்னொளியில் நடந்த இந்த கபடி போட்டியினை வணிகவரித்துறை போத்திராஜ் உள்பட ஊர் மக்கள் அனைவரும் ஆர்வத்துடன் பார்வையிட்டனர். இந்த போட்டிக்கான விழா ஏற்பாடுகளை கமிட்டி பொறுப்பாளர் அறிவுத்துரை மற்றும் டி.எஸ்.பி. ஸ்போர்ட்ஸ் கிளப் நண்பர்கள் செய்திருந்தனர். 
.......................
நாகராஜ், தலைமை நிருபர் 





 

Comments