Skip to main content

தேனி அருகே 1,000 பேர் பங்கேற்ற சிலம்பம் போட்டி: ஆஸ்கர் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தது

தேனி, ஜன.12-

தேனி அருகே உள்ள கோடாங்கிபட்டியில் எஸ்.ஜி.கே சிலம்ப கலைக்கூடம் சார்பில் உலக சாதனை முயற்சிக்காக சிலம்பம் போட்டி 12.1.2025 அன்று நடைபெற்றது. இந்த போட்டியில் தேனி, திண்டுக்கல், மதுரை, திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து பல்வேறு சிலம்ப பயிற்சி மையத்தை சேர்ந்த சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ. மாணவிகள் பங்கேற்றனர். 


இதில் 3 வயது முதல் 21 வயது வரை உள்ள சிறுவர் சிறுமிகள், இளைஞர்கள் இந்த சிலம்பம் சாதனை போட்டியில் பங்கு பெற்றனர் கண்களை கருப்பு துணிகளால் கட்டிக்கொண்டு சிலம்பம் சுற்ற தொடங்கினர். ஆஸ்கர் உலக சாதனை புத்தகத்தில் இடம் பெறும்  வகையில் நடைபெற்ற இந்த போட்டி காலை 10 மணிக்கு தொடங்கி ஒரு மணி நேரம் இடைவிடாமல் சிலம்பம் சுற்றி சாதனை படைத்தனர்.

இதன் பின்னர் இந்த நிகழ்வு ஆஸ்கர் உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்று உலக சாதனையாக அங்கீகரிக்கப்பட்டது. இந்த நிகழ்வில் தேனி பாராளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன் கலந்து கொண்டு போட்டியில் பங்கேற்ற அனைத்து மாணவ, மாணவிகளுக்கும், உலக சாதனை போட்டியை நடத்திய எஸ்.ஜி.கே சிலம்ப கலைக்கூடம் நிறுவன சண்முகி ரஞ்சித் மற்றும் அவரின் குழுவினருக்கு  கேடயமும், பாராட்டு சான்றிதழ் வழங்கினார். 


அதேபோன்று சிறப்பாக சிலம்பம் சுற்றிய சிலம்ப பயிற்சி மையத்திற்கு பரிசு கோப்பைகள் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை தி.மு.க போடி கிழக்கு ஒன்றிய செயளாலர் எஸ்.பி. அய்யப்பன் மற்றும் விழா குழுவினர் செய்திருந்தனர்.

நாகராஜ், முதன்மை நிருபர் 
......................

Comments