கோவை, அக்.23-
தேசிய அளவில் பல்வேறு மாநிலங்களில் இருந்து வனத்துறை அணிகள் பங்கேற்ற ,கைப்பந்து போட்டியில், தமிழக வனத்துறை அணி சாம்பியன் பட்டம் வென்றது சாதனை படைத்தனர்.
சத்தீஸ்கா் மாநிலம், ராய்ப்பூரில் அகில இந்திய வனத்துறையினர்கள் சார்பில் பல்வேறு மாநில வனத்துறை அணி வீரர்கள் பங்கேற்ற கைப்பந்து போட்டிகள் நடைபெற்றது, இப்போட்டிகள் கடந்த 16-ம் தேதி தொடங்கி ஒரு வார காலம் நடைபெற்றது. இதில் இந்தியாவில் உள்ள தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, ஆந்திரா, தெலுங்கானா, மகாராஷ்டிர, உத்திரபிரதேசம், பீகார், மேற்கு வங்காளம், அரியானா போன்ற மாநிலங்களை சோ்ந்த 22 கைப்பந்து அணிகள் பங்கேற்றன.
இதில், நாமக்கல் மாவட்ட வன அலுவலா் கலாநிதி தலைமையில் தமிழக வனத் துறையை சோ்ந்த விளையாட்டு வீரா்கள் பங்கேற்றனா். கூடலூா் மரப்பாலம் கோட்டம், தமிழ்நாடு அரசு தேயிலை தோட்ட கழகத்தை சோ்ந்த மகா கிருஷ்ணன் என்பவரும் இதில் பங்கேற்று விளையாடினாா். பல போட்டிகளில் தொடர்ந்து வென்ற தமிழக வனத்துறை அணியினர் , இறுதி ஆட்டத்தில் கா்நாடகா மாநில வனத்துறை அணி வீரர்களுடன், தமிழக வனத்துறை அணி வீரர்கள் விளையாடினர்.
இவற்றில் தமிழக வனத்துறை அணியினர் இறுதியில் வெற்றி பெற்று தங்கப்பதக்கத்தை வென்றனர். இதன் மூலம் தமிழக வனத்துறை கைப்பந்து விளையாட்டு அணி தொடர்ந்து மூன்றாவது முறையாக தங்கப்பதக்கம் வென்று சாதித்தது. இதனை தமிழக வனத்துறை அதிகாரிகள், கைப்பந்து விளையாட்டு வீரர்களுக்கு பாராட்டுக்கள்,தெரிவித்து வெகுமதி வழங்கி கவுரவித்தனர். தமிழக வனத்துறையில் இதுபோன்று பல்வேறு விளையாட்டு போட்டிகளில் விளையாடும் திறமையான வீரர்கள் உள்ளனர் என தெரிவித்தனர்.
சீனிவாசன், உதவி ஆசிரியர்
Comments