விநாயகர் சதுர்த்தி விழாவை தேனி மாவட்டம் முழுவதும் பக்தி உணர்வுடன் சிறப்பாக நடத்த வேண்டும் : இந்து எழுச்சி முன்னணி வார வழிபாடு கூட்டத்தில் முடிவு
தேனி, ஜூலை.6-
தேனி மாவட்டத்தில் இந்து எழுச்சி முன்னணியின் வார வழிபாடு கூட்டம் 5.7.2026 அன்று நடைபெற்றது.
இந்த வார வழிபாட்டிற்கு இந்து எழுச்சி முன்னணி மாவட்ட செயலாளர் இராமமூர்த்தி தலைமை தாங்கினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் சக்திவேல் முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில் இந்து எழுச்சி முன்னணி நிறுவனர் பொன் ரவி, மாவட்ட தலைவர் இராமராஜ், மாவட்ட அமைப்பாளர் கோவிந்தராஜ், மாவட்ட பொருளாளர் செந்தில்குமார் உள்பட இந்து எழுச்சி முன்னணி பொறுப்பாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் பின்வரும் தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன:
தீர்மானம் – 1:
வரவிருக்கும் விநாயகர் சதுர்த்தி விழாவை மாவட்டம் முழுவதும் சிறப்பாகவும், பக்தி உணர்வுடனும் நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது.
தீர்மானம் – 2:
தமிழக அமைச்சர் நிர்மல்குமார் அவர்கள், தமிழக ஆளுநரின் அறிக்கையை தவறாக புரிந்து கொண்டு அதற்கு எதிர்மறையான கருத்துக்களை தொடர்ந்து வெளியிடுவதை தவிர்த்து, தமிழக மக்களின் நலன் சார்ந்த திட்டங்களை செயல்படுத்துவதில் முழு கவனம் செலுத்த வேண்டும் என்று இந்து எழுச்சி முன்னணி கேட்டுக்கொள்கிறது.
மேலும், தேவையற்ற மோதல் போக்கையும் எதிர்மறை அரசியல் கருத்துக்களையும் கைவிட்டு, தமிழகத்தின் வளர்ச்சி மற்றும் மக்கள் நலன் சார்ந்த நல்ல திட்டங்களை முன்னெடுக்க நேரத்தை ஒதுக்க வேண்டும் என்றும் வலியுறுத்துகிறது.
தீர்மானம் – 3:
கடந்த 12 ஆண்டுகளில் நமது பாரம்பரியம், கோயில்கள், புனித தலங்கள் மற்றும் இந்து தர்மத்தின் மதிப்புகளை உலக அரங்கில் பெருமையுடன் நிலைநாட்டிய பிரதமரின் முயற்சிகளை இந்து எழுச்சி முன்னணி மனப்பூர்வமாக பாராட்டுகிறது.
தேசத்தின் கலாச்சார அடையாளத்தை பாதுகாத்து, வளர்ச்சியையும் இணைத்து முன்னெடுத்து வரும் பிரதமர் அவர்களுக்கு இந்து எழுச்சி முன்னணி மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறது.
மேற்கண்ட தீர்மானங்கள் வார வழிபாடு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.
........................................
நாகராஜ், தலைமை நிருபர்




Comments