தேனி அருகே நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தின் கீழ் சிறப்பு மருத்துவ முகாம்: மாவட்ட கலெக்டர் ரஞ்ஜீத் சிங் பார்வையிட்டார்.
தேனி, நவ.8-
தேனி மாவட்டம். தேனி வட்டாரம். கொடுவிலார்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் 8.11.2025 அன்று நடைபெற்ற நலம் காக்கும் ஸ்டாலின் சிறப்பு மருத்துவ முகாமினை மாவட்ட கலெக்டர் ரஞ்ஜீத் சிங் பார்வையிட்டார்.
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், உங்கள் குடும்பத்தின் நலன் அரசின் பொறுப்பு என்ற நோக்கத்தின் அடிப்படையில் நலம் காக்கும் ஸ்டாலின் பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவ முகாமினை 2.8.2025 அன்று தொடங்கி வைத்தார். அதனடிப்படையில் தேனி மாவட்டத்தில் நலம் காக்கும் ஸ்டாலின் சிறப்பு மருத்துவ முகாம் வட்டாரத்திற்கு மூன்று வீதம் மொத்தம் 24 மருத்துவ முகாம் ஒவ்வொரு சனிக்கிழமையும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
அதன்படி தேனி மாவட்டத்தில் இதுவரை 13 மருத்துவ முகாம்கள் நடைபெற்றுள்ளது. இம்முகாமில் இரத்த பரிசோதனை மற்றும் இரத்த அழுத்த பரிசோதனை, பொது மருத்துவம். பொது அறுவை சிகிச்சை. எலும்பு மருத்துவம் மகப்பேறு மற்றும் பெண்கள் நல மருத்துவம். குழந்தைகள் நல மருத்துவம், இருதய மருத்துவம், நரம்பியல் மருத்துவம், தோல் மருத்துவம், பல் மருத்துவம், கண் மருத்துவம், காது, மூக்கு, தொண்டை மருத்துவம், மனநல மருத்துவம். இயன்முறை மருத்துவம். கதிரியக்கவியல் மருத்துவம், நுரையீரல் மருத்துவம். சர்க்கரை நோய் மருத்துவம், இந்திய மருத்துவம் (ஆயுர்வேதம், சித்தா, யுனானி, யோகா, ஹோமியோபதி) ஆகிய 17 துறைகளை சேர்ந்த சிறப்பு மருத்துவர்கள் மூலமாக மருத்துவ சேவைகள் வழங்கப்பட்டு வருகிறது.
இன்று கொடுவிலார்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற சிறப்பு மருத்துவ முகாமினை மாவட்ட கலெக்டர் ரஞ்ஜீத் சிங் அவர்கள் பார்வையிட்டு, கர்ப்பிணி தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம், சித்தா பெட்டகம், தொழிலாளர் நல வாரிய அட்டை, முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு அட்டை மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு வீல்சேர். அடையாள அட்டைகள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இம்முகாமில் மருத்துவ பணிகள் இணை இயக்குநர் மரு.அன்புச்செழியன், சுகாதார பணிகள் துணை இயக்குனர் மரு.ஜவஹர்லால், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் காமாட்சி உள்பட வட்டார மருத்துவ அலுவலர்கள், டாக்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.
...........................
நாகராஜ், தலைமை நிருபர்





Comments