கூட்டுறவு பயிர் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்யக்கோரி விவசாயிகள் உண்ணாவிரத காத்திருப்பு போராட்டம்: தேனி பங்களாமேடு பகுதியில் நாளை (ஜூன் 22) நடக்கிறது
தேனி, ஜூன்.21- தமிழ்நாடு முதல்வர் அவர்கள் விசாயிகளுக்கு அளித்த உத்தரவாதமான கூட்டுறவு பயிர் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்யப்படும் என்கிற கோரிக்கையை நிறைவேற்ற கோரி ஜீன் 22 முதல் தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் காலவரையற்ற உண்ணாவிரத மற்றும் தொடர் காத்திருப்பு போராட்டம் 22.6.226 திங்கட்கிழமை முதல் நடைபெறுகிறது. தேனி மாவட்டத்தில் இந்த போராட்டம் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் தேனி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சீனிராஜ் தலைமையில் தேனி பங்களாமேடு பகுதியில் காலை 10 மணி முதல் நடைபெற உள்ளது. இந்த போராட்டம் குறித்து தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் தெரிவிக்கையில், கடந்த 15 ஆண்டுகளாக விவசாயிகள் உற்பத்தி செய்யும் அனைத்து உணவுப் பொருட்களும் விளையும் எவ்வித விலையேற்றமும் இல்லாமல் இருந்து வரும் சூழ்நிலையில், உரங்கள், மருந்துகள், ஆள்கூலி, இயந்திரங்களின் வாடகை, கடனுக்கான வட்டி என அனைத்துமே உயர்ந்து விட்ட சூழ்நிலையில், மத்திய மாநில அரசுகள் வாக்குறுதி அளித்தபடி விவசாயிகள் அனைத்து உணவுப் பொருட்களுக்கும் உற்பத்தி செலவுடன் 50% சேர்த்து விலை நிர்ணயம் செய்து, கொள்முதல் செய்யப்படும் என்கிற வாக்க...