தேனி யூனியன், அம்பாசமுத்திரம் ஊராட்சியில் நடந்த கிராம சபை கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் ரஞ்ஜீத் சிங் சிறப்பு பார்வையாளராக கலந்து கொண்டார்.
தேனி, ஜன.27- தேனி மாவட்டத்தில் 77-வது குடியரசு தினத்தை முன்னிட்டு தேனி மாவட்டத்தில் உள்ள 130 ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. தேனி ஊராட்சி ஒன்றியம் அம்பாசமுத்திரம் ஊராட்சியில் 26.12026 அன்று நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் ரஞ்ஜீத் சிங் சிறப்பு பார்வையாளராக கலந்து கொண்டார். இந்த கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் பேசுகையில், கிராம சபை கூட்டத்தின் முக்கிய நோக்கம் ஒரு கிராமத்திற்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளை கண்டறிந்து பொதுமக்களின் முன்னிலையில் ஆலோசனைகள் செய்து அதனை செயல்படுத்திட தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவதாகும். அந்த வகையில் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கிராமப்புற மக்களின் வாழ்வாதரத்தினை மேம்படுத்தும் வகையில் பல்வேறு முன்மாதிரியான திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள். அதனடிப்படையில் கிராமப்புறங்களை விரைவாக முன்னேற்றம் அடைய செய்யவும் கிராமப்புற மக்களின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்தவும் அரசின் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறிப்பாக குழந்தை திருமணம் சிறுவயதில் கர்ப்பம் அடைதல். அதனால் குறைவான எடையில் குழந்தை பெற்றெடுத்தல் போன்றவற்றை த...