Skip to main content

Posts

தேனி-பழனிசெட்டிபட்டி அணை கருப்பசாமி கோவில் பகுதி குற்றவாளிகளின் கூடாரமாக மாறி வருவதை தடுக்க வேண்டும் : சிவசேனா கட்சியினர் கலெக்டரிடம் கோரிக்கை மனு

தேனி, நவ.8- சிவசேனா கட்சியின் மாநில துணைத்தலைவர் குரு ஐயப்பன் தலைமையில் மண்டல தலைவர் கருப்பையா, தேனி மாவட்ட தலைவர் ரவிச்சந்திரன், மாவட்ட செயலாளர் பாலமுருகன் உள்பட கட்சியினர் தேனி மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் முத்துமாதவனிடம் கோரிக்கை மனு கொடுத்தனர். அந்த மனுவில், தேனி அருகே உள்ள பழனிசெட்டிபட்டி காவல் நிலையம் வழியாக செல்லும் அணை கருப்பசாமி கோவில் முல்லைப்பெரியாற்றின் கரையில் அமைந்துள்ளது. இங்கு சமூக விரோதிகள் அதிக அளவு நடமாடுகின்றனர். காலை முதல் இரவு வரை கஞ்சா மற்றும் தடை செய்யப்பட்ட புகையிலை புழக்கம், கள்ளச் சந்தையில் மது விற்பனை என இப்பகுதியில் அனைத்து சமூக விரோத செயல்களும் நடைபெற்று வருகின்றன. சமூக விரோதிகள் இப்பகுதிக்கு குளிக்க செல்லும் பெண்கள் மற்றும் ஆண்களுக்கு பல்வேறு இடையூறுகளை ஏற்படுத்துகின்றனர்.  மேலும் அவர்களின் பொருட்களையும் திருடிச் செல்கின்றனர். இதனை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும். இப்பகுதிக்கு வாட்டர் டேங்க் வழியாக செல்லும் பாதையில் ஏற்கனவே அமைக்கப்பட்டு இருந்த கேட் மீண்டும் அமைக்கப்பட்டு கட்டுப்படுத்த வேண்டும். காவல்துறையினர் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட வேண...

சோழவந்தான், தென்கரை ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி மூலநாத சுவாமி கோவிலில் 13-ம் ஆண்டு கந்த சஷ்டி, சூரசம்ஹார விழா

மதுரை மாவட்டம், சோழவந்தான் தென்கரையில் பிரசித்தி பெற்ற புராண கால வரலாற்று சிறப்பு மிக்க சிவ ஸ்தலமான ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி, ஸ்ரீ மூலநாத சுவாமி திருக்கோவிலில், பிரதோஷ கமிட்டியினர் சார்பில் 13-ம் ஆண்டு கந்தசஷ்டி விழா நடைபெற்றது. இதில் கடந்த 1-ம் தேதி கோவிலில் கணபதி ஹோமத்துடன், கந்த சஷ்டி விழாவுக்கான காப்பு கட்டும் விழா தொடங்கியது.  இதில் ஏராளமான பெண்கள் விரதம் இருந்து கையில் மஞ்சள் வைத்து காப்பு கட்டி விரதத்தை தொடங்கினர். கோவில் சிவாச்சாரியார்கள் கண்ணன், செந்தில், நாள்தோறும் பூஜைகள் செய்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கினர்.  இதனைத்தொடர்ந்து முக்கிய நிகழ்வான சூரபத்மநாபனை ஸ்ரீமுருக பெருமான் வேல் கொண்டு வதம் செய்ய தாயாரிடம் வேலுவை பெற்ற முருகன், திருச்செந்தூரில் சூரசம்ஹார விழா போன்று கோவில் முன்பு உள்ள வளாகத்தில் சூரசம்ஹார விழா நடைபெற்றது.  இந்நிகழ்வில் சஷ்டி விரதம் இருந்த பெண்கள் மற்றும் பக்தர்களும் ஏராளமானோர் பங்கேற்றனர். அப்போது மேள வாத்தியம் முழங்க சூரனை வதம் செய்யும் நிகழ்ச்சி பக்தர்கள் முன்னிலையில் நடந்தேறியது. முருக பெருமான் வேல் கொண்டு சூரனை சம்ஹாரம் செய்தார். இதனை பக்தர்க...

தேனி சுடுகாட்டில் எல்.பி.ஜி., கேஸ் மூலம் அமைக்கப்பட்டுள்ள எரிவாயு தகன மேடையை உடனடியாக பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் :இந்து எழுச்சி முன்னணியினர் நகராட்சி ஆணையாளரிடம் கோரிக்கை மனு

  தேனி, நவ.5- இந்து எழுச்சி முன்னணி  தேனி நகர பொதுச்செயலாளர் சிவராம் தலைமையில் இந்து எழுச்சி முன்னணியினர் தேனி அல்லிநகரம் நகராட்சி ஆணையாளரிடம் கோரிக்கை மனு ஒன்று கொடுத்தனர். அந்த மனுவில் தேனியில் மனித சடலங்களை எரிப்பதற்காக பயோ கேஸ் முறை கடந்த 12 ஆண்டுகளாக நடைமுறையில் இருந்து வந்தது.  அதனைத்தொடர்ந்து நவீன முறையில் தற்போது எல்.பி.ஜி கேஸ் மூலம் மனித சடலங்களை எரிப்பதற்கு பணி நடந்து வருவதாக கூறி கடந்த 4 மாதங்களாக சுகாதாரம் இன்றி மனித சடலங்களை பொதுவெளியில் தகனம் செய்து வருகிறார்கள் . எல்.பி.ஜி கேஸ் மூலம் மனித சடலங்களை தகனம் செய்வதற்கான பணிகள் முடிந்தும், கடந்த இரண்டு மாதங்களாக நடைமுறைக்கு வரவில்லை  இந்த தாமதத்திற்கு அரசியல் தலையீடு காரணமாக இருக்குமோ என்ற சந்தேகம் எங்களுக்கும், பொதுமக்களுக்கும் எழுகிறது  எனவே எல்.பி.ஜி கேஸ் மூலம் நவீன முறையில் வடிவமைக்கப்பட்டுள்ள இயந்திரத்தை உடனடியாக நடைமுறைக்கு கொண்டு வர வேண்டும். தவறும் பட்சத்தில் பொதுமக்களை ஒன்று திரட்டி நகராட்சியை  முற்றுகையிட்டு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவோம். இவ்வாறு அந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது....

தூய்மை பணியாளர்கள் உள்ளிட்ட ஊழியர்களுக்கு தீபாவளி புத்தாடை வழங்கிய திமுக நிர்வாகி

தேனி, அக்.30- தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கோவை வடக்கு மாவட்ட செல்வபுரம் பகுதி திமுக கழகம் சார்பில் கோவை செல்வபுரம் சமுதாய கூடத்தில் கோவை மாநகராட்சி 76, 77, 78, 79 ஆகிய வார்டுகளில் பணிபுரியும் தூய்மை பணியாளர்கள், அங்கன் வாடி ஊழியர்கள், மின்வாரிய ஊழியர்கள் உள்ளிட்ட அனைத்துத்துறை ஊழியர்களுக்கு அறுசுவை உணவு மற்றும் புத்தாடை இனிப்புகளை கோவை வடக்கு மாவட்ட கழக செயலாளர் தொ.அ.ரவி வழங்கினார். செல்வபுரம் பகுதி திமுக செயலாளர் கேபிள் மணி ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில் மாமன்ற துணை மேயர் வெற்றி செல்வன், மாமன்ற உறுப்பினர்கள் சிவசக்தி ராஜ்குமார், வசந்தாமணி மற்றும் வட்டக்கழக செயலாளர்கள்  அறிவழகன், ராஜேஷ், இப்ராகீம் மற்றும் வட்டக்கழக நிர்வாகிகள் பகுதி கழக நிர்வாகிகள் கழக மூத்த முன்னோடிகள் இளைஞரணியினர் பலர் கலந்து கொண்டனர். சீனிவாசன், உதவி ஆசிரியர் 

நாடார் சரஸ்வதி பொறியியல் கல்லூரியில் விபத்தில்லா தீபாவளி விழிப்புணர்வு நிகழ்ச்சி

தேனி, அக்.30- தேனி நாடார் சரஸ்வதி பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் நாட்டு நலப்பணி திட்டம் சார்பில் விபத்தில்லா தீபாவளி விழிப்புணர்வு நிகழ்ச்சி 29.10.2024 அன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு கல்லூரியின் செயலாளர்கள் A.ராஜ்குமார், A.S.R.மகேஸ்வரன் ஆகியோர்கள் தலைமை தாங்கினர். கல்லூரியின் இணைச்செயலாளர் S.நவீன்ராம் முன்னிலை வகித்தார். இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கல்லூரியின் முதல்வர் டாக்டர். C.மதளைசுந்தரம்  மாணவர்களிடையே தீபாவளி பண்டிகையின் போது வெடி விபத்து அதிகரித்து வருவதை மாணவ மாணவியர்கள் கவனத்தில் கொண்டு மாசு விளைவிக்கும் பட்டாசுகளை தவிர்த்தல், அதிக சத்தத்துடன் கூடிய சரவெடிகளை தவிர்த்தல், கவனக்குறைவாக கையில் ஏந்தியபடி பட்டாசு வெடித்தலை தவிர்த்தல், மேலும் அரசு அறிவுறுத்திய குறிப்பிட்ட நேரங்களில் பட்டாசுகளை வெடித்து பாதுகாப்பான தீபாவளியை கொண்டாட வேண்டுமென்றும், சிறப்புரையாற்றினார். மேலும் மாணவர்களிடயே, வெடிக்காத பட்டாசுகளை கையால் தொடுவதோ, அதை ஒன்று சேர்த்து கொளுத்துவதோ அறவே கூடாது. கையில் பட்டாசை பற்ற வைத்து தூக்கி எறிவதே தீ விபத்துக்கு முக்கிய காரணம். இதனால் நீங்கள் மட்...

தேனி கம்மவார் தொழிற்பயிற்சி நிலையத்தில் பட்டமளிப்பு விழா

தேனி, அக்.27- தேனி மாவட்டம், தேனி அருகே கொடுவிலார்பட்டியில் உள்ள தேனி கம்மவார் சங்கம் தொழிற்பயிற்சி நிலையத்தில் பட்டமளிப்பு விழா 26.10.2024 அன்று நடைபெற்றது. விழாவுக்கு தேனி கம்மவார் சங்கம் துணைத்தலைவர் பாண்டியராஜ் தலைமை தாங்கினார். தேனி கம்மவார் சங்கம் ஐ.டி.ஐ செயலாளர் பெருமாள் சாமி முன்னிலை வகித்தார். ஐ.டி.ஐ முதல்வர் பிரகாசம் வரவேற்றார். விழாவில் தேனி கம்மவார் சங்கம் தலைவர் நம்பெருமாள் சாமி, செயலாளர் மகேஷ் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு மாணவர்களுக்கு பட்ட சான்றிதழ்களை வழங்கினார்கள். விழாவில் தேனி கம்மவார் சங்க பொருளாளர் ரெங்கராஜ், இணைச்செயலாளர் ராஜா மன்னார், ஐ.டி.ஐ இணைச்செயலாளர் ராதாகிருஷ்ணன், ஐ.டி.ஐ பொருளாளர் சுதாகரன் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர். விழாவை ஐ.டி.ஐ., ஏ.டி.ஓ அவினாஷ் தொகுத்து வழங்கினார். இந்த விழாவில் கம்மவார் சங்க நிர்வாகிகள், ஐ.டி.ஐ., ஆசிரியர்கள், மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஐ.டி.ஐ., ஜே.டி.ஓ அழகுமலை நன்றி கூறினார். நாகராஜ், முதன்மை நிருபர் 

தேனி மாவட்டத்தில் இந்து எழுச்சி முன்னணி பொறுப்பாளர்கள் 16 பேர் இயற்கை பேரிடர் காலங்களில் சேவை செய்ய ஆர்வம் : கலெக்டரிடம் பெயர் பட்டியலை மனுவாக அளித்தனர்

தேனி, அக்.25- தேனி மாவட்டத்தில் இந்து எழுச்சி முன்னணி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடுவது மட்டுமன்றி கோவில் உழவார பணிகள், கோவில் பிரச்சனைகள், பொதுமக்களின் அடிப்படை பிரச்சனைகள் மற்றும் பல்வேறு சமூகப் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் இந்து எழுச்சி முன்னணி நிறுவன தலைவர் பொன் ரவி, தேனி மாவட்ட தலைவர் ராம்ராஜ் ஆகியோர் ஆலோசனையின்படி மாவட்ட செயலாளர் ராமமூர்த்தி தலைமையில் இந்து எழுச்சி முன்னணி பொறுப்பாளர்கள் தேனி மாவட்ட கலெக்டரிடம் கோரிக்கை மனு ஒன்று கொடுத்துள்ளனர். அந்த மனுவில், தேனி மாவட்டத்தில் இயற்கை பேரிடர் காலங்களில் இந்து எழுச்சி முன்னணி பொறுப்பாளர்கள் ஆகிய  இராமமூர்த்தி  9486225858, செல்வபாண்டியன் 9842424082, இராஜேஷ்குமார் 9865133558, சிவராமன் 9698476263, சிவா 9500845456, எல்.ஆர்.புயல்அய்யப்பன் 7418933436, தினேஷ்குமார்  9894232981, கனகுபாண்டி  6383932323, , ரெங்கராஜ்  9025644516, சீனிவாசன்  9994877609, பாலா 8428022145,  அழகுபாண்டி 9944787874, ராமகிருஷ்ணன் 8680917720,  மணிபிரபு 9790120511, மணிகண்டன் 8428903105, சரவணன் 9894444063 ஆகிய 16 பேரும...

தேசிய அளவிலான கைப்பந்து போட்டியில், தமிழக வனத்துறை அணி சாம்பியன் பட்டம் வென்றது

கோவை, அக்.23- தேசிய அளவில் பல்வேறு மாநிலங்களில் இருந்து வனத்துறை அணிகள்  பங்கேற்ற ,கைப்பந்து போட்டியில், தமிழக வனத்துறை அணி சாம்பியன் பட்டம் வென்றது சாதனை படைத்தனர். சத்தீஸ்கா் மாநிலம், ராய்ப்பூரில் அகில இந்திய வனத்துறையினர்கள் சார்பில் பல்வேறு மாநில வனத்துறை  அணி வீரர்கள் பங்கேற்ற கைப்பந்து போட்டிகள் நடைபெற்றது, இப்போட்டிகள் கடந்த 16-ம் தேதி தொடங்கி ஒரு வார காலம் நடைபெற்றது. இதில் இந்தியாவில் உள்ள தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, ஆந்திரா, தெலுங்கானா, மகாராஷ்டிர, உத்திரபிரதேசம், பீகார், மேற்கு வங்காளம், அரியானா போன்ற மாநிலங்களை சோ்ந்த 22 கைப்பந்து அணிகள் பங்கேற்றன. இதில், நாமக்கல் மாவட்ட வன அலுவலா் கலாநிதி தலைமையில் தமிழக வனத் துறையை சோ்ந்த விளையாட்டு  வீரா்கள் பங்கேற்றனா். கூடலூா் மரப்பாலம் கோட்டம், தமிழ்நாடு அரசு தேயிலை தோட்ட கழகத்தை சோ்ந்த மகா கிருஷ்ணன் என்பவரும் இதில் பங்கேற்று விளையாடினாா். பல போட்டிகளில் தொடர்ந்து வென்ற தமிழக வனத்துறை அணியினர் , இறுதி ஆட்டத்தில் கா்நாடகா மாநில வனத்துறை அணி வீரர்களுடன், தமிழக வனத்துறை அணி வீரர்கள் விளையாடினர்.  இவற்றில் தமிழக வனத்...

போடி நகராட்சியில் தெரு நாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை

தேனி, அக்.23- தேனி மாவட்ட கலெக்டர் அவர்களின் உத்தரவின் பேரில், நகராட்சி துறையும் கால்நடை பராமரிப்பு துறையும் இணைந்து, போடிநாயக்கனூர் நகராட்சி பகுதியில் சுற்றி திரியும் தெரு நாய்களை பிடித்து, கருத்தடை அறுவை சிகிச்சை மற்றும் வெறி நோய் தடுப்பூசி போடும் பணிகள் மேற்கொள்ளப்பட்டது.  இந்த பணிகளை நகர் மன்ற தலைவர் ராஜராஜேஸ்வரி சங்கர், நகராட்சி ஆணையாளர் பார்கவி ஆகியோர் பார்வையிட்டனர்.  அப்போது சுகாதார அலுவலர் மணிகண்டன், சுகாதார ஆய்வாளர்கள் அகமது கபீர் சரவணன் ஆகியோர் உடன் இருந்தனர். சசி துரை, சிறப்பு நிருபர் 

ஆண்டிபட்டியில் பெய்த கனமழையால் பள்ளிகளில் இடுப்பளவு தண்ணீர் தேங்கியது: ரயில்வே சுரங்கப்பாதையில் போக்குவரத்து அடியோடு முடக்கம்

தேனி, அக்.21- தேனி மாவட்டம், ஆண்டிபட்டியில் இருந்து ஏத்தக்கோவில் செல்லும் சாலையில் ரயில்வே சுரங்க பாதை உள்ளது. இந்த சாலை பகுதியில் அரசு மேல்நிலைப்பள்ளியும் அமைந்துள்ளது. இந்நிலையில் ஆண்டிபட்டியில் பெய்த கனமழையின் காரணத்தால் மழைநீர் ரயில் சுரங்க பாதையில் நீர் தேங்கி கிடக்கிறது. இதனால் பள்ளி மாணவிகளும், பொதுமக்களும் தண்டவாளத்தை கடந்து செல்லும் அவல நிலை ஏற்பட்டது.  இதற்கு நிரந்தர தீர்வு காண முடியாமல் சம்மந்தப்பட்ட நிர்வாகம் திணறி வருகிறது. மழை காலம் வந்தால் மட்டுமே இந்த மழைநீர் தேங்கும் பிரச்சினை கவனத்தில் எடுத்துக் கொள்ளப்படுவதால் மற்ற நேரங்களில் காற்றில் பறக்கவிட்டு விடுகிறார்கள். இந்த பணிகளை நெடுஞ்சாலைத்துறையும் ரயில்வேத்துறையும் இணைந்து பணியாற்ற வேண்டும். உனக்கு வலித்தால் எனக்கென்ன என்கிற மனப்பாங்கு வெற்றி பெறாது என்கின்றனர் சமூக ஆர்வலர்கள். இதற்கிடையே ஆண்டிபட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் தேங்கியிருந்த மழைநீரை பேரூராட்சி பணியாளர்களும், வருவாய்த்துறையும் இணைந்து வெளியேற்றினர். சசி துரை, சிறப்பு நிருபர்