தேனி சுடுகாட்டில் எல்.பி.ஜி., கேஸ் மூலம் அமைக்கப்பட்டுள்ள எரிவாயு தகன மேடையை உடனடியாக பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் :இந்து எழுச்சி முன்னணியினர் நகராட்சி ஆணையாளரிடம் கோரிக்கை மனு
தேனி, நவ.5-
இந்து எழுச்சி முன்னணி தேனி நகர பொதுச்செயலாளர் சிவராம் தலைமையில் இந்து எழுச்சி முன்னணியினர் தேனி அல்லிநகரம் நகராட்சி ஆணையாளரிடம் கோரிக்கை மனு ஒன்று கொடுத்தனர். அந்த மனுவில் தேனியில் மனித சடலங்களை எரிப்பதற்காக பயோ கேஸ் முறை கடந்த 12 ஆண்டுகளாக நடைமுறையில் இருந்து வந்தது.
அதனைத்தொடர்ந்து நவீன முறையில் தற்போது எல்.பி.ஜி கேஸ் மூலம் மனித சடலங்களை எரிப்பதற்கு பணி நடந்து வருவதாக கூறி கடந்த 4 மாதங்களாக சுகாதாரம் இன்றி மனித சடலங்களை பொதுவெளியில் தகனம் செய்து வருகிறார்கள் .
எல்.பி.ஜி கேஸ் மூலம் மனித சடலங்களை தகனம் செய்வதற்கான பணிகள் முடிந்தும், கடந்த இரண்டு மாதங்களாக நடைமுறைக்கு வரவில்லை இந்த தாமதத்திற்கு அரசியல் தலையீடு காரணமாக இருக்குமோ என்ற சந்தேகம் எங்களுக்கும், பொதுமக்களுக்கும் எழுகிறது
எனவே எல்.பி.ஜி கேஸ் மூலம் நவீன முறையில் வடிவமைக்கப்பட்டுள்ள இயந்திரத்தை உடனடியாக நடைமுறைக்கு கொண்டு வர வேண்டும். தவறும் பட்சத்தில் பொதுமக்களை ஒன்று திரட்டி நகராட்சியை முற்றுகையிட்டு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவோம்.
இவ்வாறு அந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்நிகழ்வின் போது தேனி நகர துணைத்தலைவர் சிவா, தேனி நகர அமைப்பாளர் அரண்மனை முத்துராஜ், தேனி நகர செயலாளர்கள் புயல் ஐயப்பன், தினேஷ்குமார், தேனி நகர துணைச்செயலாளர்கள் ராம்குமார், ஆட்டோ செந்தில்குமார்,கனகு பாண்டி, தேனி நகர செயற்குழு உறுப்பினர்கள் சுரேஷ், அழகு பாண்டி,E.B. மணிகண்டன், கம்பம் மணி பிரபு, செல்வராஜ் மற்றும் பொறுப்பாளர்கள்
உடனிருந்தனர்.
நாகராஜ், முதன்மை நிருபர்
Comments