Skip to main content

நாடார் சரஸ்வதி பொறியியல் கல்லூரியில் விபத்தில்லா தீபாவளி விழிப்புணர்வு நிகழ்ச்சி

தேனி, அக்.30-

தேனி நாடார் சரஸ்வதி பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் நாட்டு நலப்பணி திட்டம் சார்பில் விபத்தில்லா தீபாவளி விழிப்புணர்வு நிகழ்ச்சி 29.10.2024 அன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு கல்லூரியின் செயலாளர்கள் A.ராஜ்குமார், A.S.R.மகேஸ்வரன் ஆகியோர்கள் தலைமை தாங்கினர். கல்லூரியின் இணைச்செயலாளர் S.நவீன்ராம் முன்னிலை வகித்தார்.

இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கல்லூரியின் முதல்வர் டாக்டர். C.மதளைசுந்தரம்  மாணவர்களிடையே தீபாவளி பண்டிகையின் போது வெடி விபத்து அதிகரித்து வருவதை மாணவ மாணவியர்கள் கவனத்தில் கொண்டு மாசு விளைவிக்கும் பட்டாசுகளை தவிர்த்தல், அதிக சத்தத்துடன் கூடிய சரவெடிகளை தவிர்த்தல், கவனக்குறைவாக கையில் ஏந்தியபடி பட்டாசு வெடித்தலை தவிர்த்தல், மேலும் அரசு அறிவுறுத்திய குறிப்பிட்ட நேரங்களில் பட்டாசுகளை வெடித்து பாதுகாப்பான தீபாவளியை கொண்டாட வேண்டுமென்றும், சிறப்புரையாற்றினார்.
மேலும் மாணவர்களிடயே, வெடிக்காத பட்டாசுகளை கையால் தொடுவதோ, அதை ஒன்று சேர்த்து கொளுத்துவதோ அறவே கூடாது. கையில் பட்டாசை பற்ற வைத்து தூக்கி எறிவதே தீ விபத்துக்கு முக்கிய காரணம். இதனால் நீங்கள் மட்டுமல்லாமல், உங்களை கடந்து செல்பவர்களும் பாதிக்கப்படுவர். புஸ்வானம். தரைச்சக்கரம், ராக்கெட் வெடிக்கும் போது, நீண்ட மத்தாப்பு வைத்து வெடிப்பது நல்லது. வாணவேடிக்கை, காதை பிளக்கும் வாலாக்கள் போன்றவற்றை மக்கள் அதிகம் நடக்கும் இடங்களில் வெடிக்காமல் இருப்பது நல்லது. பட்டாசு வெடிக்கும் போது, அருகில் பக்கெட்டில் தண்ணீர் வைத்திருப்பது நல்லது. முடிந்தவரை, குழந்தைகளை தனியாக பட்டாசு வெடிக்க அனுமதிக்க வேண்டாம். எதிர்பாராத தீ விபத்து ஏற்பட்டால் தீ கட்டுப்பாட்டு அறை எண் 101, 112 மற்றும் 04546 252699 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ள வேண்டுமென்று. விபத்தில்லா தீபாவளியை கொண்டாட விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.

இந்நிகழ்ச்சியில் தேனி மேலப்பேட்டை இந்து நாடார்கள் உறவின்முறையின் தலைவர் T.ராஜமோகன், உபதலைவர் P.P.கணேஷ், பொதுச்செயலாளர் M.M.ஆனந்தவேல் பொருளாளர் M.பழனியப்பன், ஆட்சி மன்ற குழு உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கல்லூரியின் துணை முதல்வர்கள் N.மாதவன், டாக்டர்.M.சத்யா. வேலைவாய்ப்பு அலுவலர் டாக்டர்.C.கார்த்திகேயன் நாட்டு நலப்பணி திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் R.பிரதீப்குமார், B.நாகராஜன் மற்றும் பேராசிரியர்கள் செய்திருந்தனர்.

நாகராஜ், முதன்மை நிருபர் 

Comments