சோழவந்தான், தென்கரை ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி மூலநாத சுவாமி கோவிலில் 13-ம் ஆண்டு கந்த சஷ்டி, சூரசம்ஹார விழா
மதுரை மாவட்டம், சோழவந்தான் தென்கரையில் பிரசித்தி பெற்ற புராண கால வரலாற்று சிறப்பு மிக்க சிவ ஸ்தலமான ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி, ஸ்ரீ மூலநாத சுவாமி திருக்கோவிலில், பிரதோஷ கமிட்டியினர் சார்பில் 13-ம் ஆண்டு கந்தசஷ்டி விழா நடைபெற்றது. இதில் கடந்த 1-ம் தேதி கோவிலில் கணபதி ஹோமத்துடன், கந்த சஷ்டி விழாவுக்கான காப்பு கட்டும் விழா தொடங்கியது.
இதில் ஏராளமான பெண்கள் விரதம் இருந்து கையில் மஞ்சள் வைத்து காப்பு கட்டி விரதத்தை தொடங்கினர். கோவில் சிவாச்சாரியார்கள் கண்ணன், செந்தில், நாள்தோறும் பூஜைகள் செய்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கினர்.
இதனைத்தொடர்ந்து முக்கிய நிகழ்வான சூரபத்மநாபனை ஸ்ரீமுருக பெருமான் வேல் கொண்டு வதம் செய்ய தாயாரிடம் வேலுவை பெற்ற முருகன், திருச்செந்தூரில் சூரசம்ஹார விழா போன்று கோவில் முன்பு உள்ள வளாகத்தில் சூரசம்ஹார விழா நடைபெற்றது.
இந்நிகழ்வில் சஷ்டி விரதம் இருந்த பெண்கள் மற்றும் பக்தர்களும் ஏராளமானோர் பங்கேற்றனர். அப்போது மேள வாத்தியம் முழங்க சூரனை வதம் செய்யும் நிகழ்ச்சி பக்தர்கள் முன்னிலையில் நடந்தேறியது. முருக பெருமான் வேல் கொண்டு சூரனை சம்ஹாரம் செய்தார். இதனை பக்தர்கள் அரோகர, அரோகர கோஷம் எழுப்பி வணங்கினர்.
இதனைஅடுத்து முருக பெருமானுக்கு பனிரெண்டு வகை திரவியம் கொண்டு அபிஷேகமும், வாசனை பூக்களால் அலங்காரம் செய்து தீபாராதனைகள் காட்டி பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கினர். இதனைத்தொடர்ந்து அன்னதானமும் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை முருகப்பெருமான் பக்த கமிட்டி மற்றும் பிரதோஷ கமிட்டியினர் செய்து இருந்தனர்.
சீனிவாசன், உதவி ஆசிரியர்
Comments