Skip to main content

ஆண்டிபட்டியில் பெய்த கனமழையால் பள்ளிகளில் இடுப்பளவு தண்ணீர் தேங்கியது: ரயில்வே சுரங்கப்பாதையில் போக்குவரத்து அடியோடு முடக்கம்

தேனி, அக்.21-

தேனி மாவட்டம், ஆண்டிபட்டியில் இருந்து ஏத்தக்கோவில் செல்லும் சாலையில் ரயில்வே சுரங்க பாதை உள்ளது. இந்த சாலை பகுதியில் அரசு மேல்நிலைப்பள்ளியும் அமைந்துள்ளது. இந்நிலையில் ஆண்டிபட்டியில் பெய்த கனமழையின் காரணத்தால் மழைநீர் ரயில் சுரங்க பாதையில் நீர் தேங்கி கிடக்கிறது. இதனால் பள்ளி மாணவிகளும், பொதுமக்களும் தண்டவாளத்தை கடந்து செல்லும் அவல நிலை ஏற்பட்டது. இதற்கு நிரந்தர தீர்வு காண முடியாமல் சம்மந்தப்பட்ட நிர்வாகம் திணறி வருகிறது.
மழை காலம் வந்தால் மட்டுமே இந்த மழைநீர் தேங்கும் பிரச்சினை கவனத்தில் எடுத்துக் கொள்ளப்படுவதால் மற்ற நேரங்களில் காற்றில் பறக்கவிட்டு விடுகிறார்கள். இந்த பணிகளை நெடுஞ்சாலைத்துறையும் ரயில்வேத்துறையும் இணைந்து பணியாற்ற வேண்டும். உனக்கு வலித்தால் எனக்கென்ன என்கிற மனப்பாங்கு வெற்றி பெறாது என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.
இதற்கிடையே ஆண்டிபட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் தேங்கியிருந்த மழைநீரை பேரூராட்சி பணியாளர்களும், வருவாய்த்துறையும் இணைந்து வெளியேற்றினர்.

சசி துரை, சிறப்பு நிருபர் 

Comments