தேனி, அக்.23-
தேனி மாவட்ட கலெக்டர் அவர்களின் உத்தரவின் பேரில், நகராட்சி துறையும் கால்நடை பராமரிப்பு துறையும் இணைந்து, போடிநாயக்கனூர் நகராட்சி பகுதியில் சுற்றி திரியும் தெரு நாய்களை பிடித்து, கருத்தடை அறுவை சிகிச்சை மற்றும் வெறி நோய் தடுப்பூசி போடும் பணிகள் மேற்கொள்ளப்பட்டது.
இந்த பணிகளை நகர் மன்ற தலைவர் ராஜராஜேஸ்வரி சங்கர், நகராட்சி ஆணையாளர் பார்கவி ஆகியோர் பார்வையிட்டனர்.
அப்போது சுகாதார அலுவலர் மணிகண்டன், சுகாதார ஆய்வாளர்கள் அகமது கபீர் சரவணன் ஆகியோர் உடன் இருந்தனர்.
சசி துரை, சிறப்பு நிருபர்
Comments