Skip to main content

Posts

முதலமைச்சர் கோப்பைக்கான மாநில அளவிலான விளையாட்டு போட்டிகளில் பங்கேற்க தேனி வீரர்கள் சென்னை சென்றனர் : கலெக்டர் ஷஜீவனா வழியனுப்பி வைத்தார்

தேனி மாவட்டத்தில் உள்ள விளையாட்டு வீரர்களில்  முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிக்கு தேர்வு பெற்ற விளையாட்டு வீரர்களை சென்னையில் மாநில அளவில் நடைபெறும் போட்டியில் பங்கேற்க தேனி மாவட்ட விளையாட்டு அரங்கில் இருந்து சென்னைக்கு செல்லும் பஸ்சினை தேனி மாவட்ட கலெக்டர் ஆர்.வி.ஷஜீவனா அவர்கள், மாவட்ட வருவாய் அலுவலர் இரா.ஜெயபாரதி மற்றும் மாவட்ட விளையாட்டு அலுவலர் முருகன் ஆகியோர் முன்னிலையில் 29.6.2023 அன்று கொடியசைத்து வழி அனுப்பி வைத்தார். இதுகுறித்து மாவட்ட கலெக்டர் ஷஜீவனா தெரிவிக்கையில், முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள் தேனி மாவட்ட அளவில் கடந்த 8.2.2023 முதல் 24.2.2023 வரை தேனி மாவட்ட விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இதில் பள்ளி, கல்லூரி மற்றும் பொதுப்பிரிவினர், அரசு ஊழியர்கள், மாற்றுத்திறனாளிகள் என 5 பிரிவிகளில் நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் 5,944 நபர்கள் கலந்து கொண்டனர். மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற 1,442 வீரர், வீராங்கனைகளுக்கு 17.6.2023  அன்று ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கினார். இந்நிலையில் மாநில அளவில் முதலமைச்சர்...

பஸ் வசதி வேண்டும் என்ற பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஒரே நாளில் நிறைவேற்றிய கனிமொழி கருணாநிதி எம்.பி.,

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் வட்டத்தில் அமைந்துள்ள நங்கைமொழி ஊராட்சியில், மக்கள் களம் நிகழ்ச்சி 26.6.2023 அன்று காலை நடைபெற்றது. அதில் தங்கள் நங்கைமொழி கிராமத்திலிருந்து அடைக்கலபுரம் ஊராட்சி பகுதிக்கு பேருந்து வசதி வேண்டும் என்று தி.மு.க துணை பொதுச்செயலாளரும், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கருணாநிதி அவர்களிடம் பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.  அதனைத்தொடர்ந்து கனிமொழி எம்.பி., அவர்கள் முயற்சியால் 26.6.2023 அன்று முதல் சேவையாக சாத்தான்குளத்தில் இருந்து உடன்குடி வரை செல்லும் பேருந்து தடம் எண் 65 பி., 26.6/2023 அன்று மாலை 6 மணிக்கு நங்கைமொழி கிராமத்திற்கு வந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு 6.20 மணிக்கு புறப்பட்டு சென்றது. இந்த பேருந்து தினசரி காலை 7:45 மணிக்கு மற்றும் மாலை 6:15 மணிக்கு வரும் என பொதுமக்களிடம் சாத்தான்குளம் பணிமனை சார்பாக தெரிவிக்கப்பட்டது. தங்களின் கோரிக்கையை ஒரே நாளில் நிறைவேறியதை தொடர்ந்து நங்கைமொழி ஊராட்சியை சேர்ந்த பொதுமக்கள் இனிப்புகளை வழங்கி தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி கனிமொழி கருணாநிதி எம்.பி., அவர்களுக்கு நன்றியை தெரிவித்தனர். G.சிவக்குமார்...

தேனியில் போலீஸ் துறை சார்பில் போதைப்பொருள் விழிப்புணர்வு பேரணி

தேனி மாவட்ட போலீஸ் துறை சார்பில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி தேனியில் நடைபெற்றது. இந்த விழிப்புணர்வு பேரணியை மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு (ADSP) சுகுமார் தலைமை தாங்கி கொடியசைத்து துவக்கி வைத்தார். தேனி டி.எஸ்.பி.,(உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர்) பார்த்திபன், தேனி மாவட்ட சமூக நல அலுவலர் சியாமளா தேவி ஆகியோர் முன்னிலை வகித்தனர்‌. இந்த விழிப்புணர்வு பேரணி தேனி-மதுரை சாலை பங்களா மேடு பகுதியில் துவங்கி தேனி நேரு சிலை பழைய பேருந்து நிலையம் கம்பம் சாலை வழியாக ABM  ஹோட்டல் வரை சென்று மீண்டும் நேரு சிலை வழியாக பெரியகுளம் சாலை என்.ஆர்.டி நகர் வழியாக தேனி நாடார் சரஸ்வதி ஆண்கள் மேல்நிலை பள்ளி வளாகத்தில் நிறைவடைந்தது.  இந்த பேரணியில் அல்லிநகரம் பாக்யா மெட்ரிக் பள்ளி, தேனி நாடார் சரஸ்வதி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, தேனி பாலம் மெட்ரிக் பள்ளி, தேனி கம்மவார் சங்க மெட்ரிக் பள்ளி மாணவ, மாணவியர்கள், சாரண-சாரணியர் இயக்கத்தை சேர்ந்தவர்கள், NSS மாணவர்கள், ஆசிரியர்கள் உள்பட சுமார் 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில...

தேனி மாவட்ட திட்ட குழு உறுப்பினர்கள் தேர்தலில் தி.மு.க., காங்கிரசை சேர்ந்த கவுன்சிலர் வேட்பாளர்கள் வெற்றி

தேனி மாவட்டத்தில் மாவட்ட திட்ட குழு உறுப்பினர்கள் தேர்வுக்கான தேர்தல் நடைபெற்றது. இதில் ஊரக பகுதியில் 5 உறுப்பினர்கள், நகர பகுதியில் 7 உறுப்பினர்கள் என மொத்தம் 12 பேர் தேர்வு செய்யப்பட வேண்டும். இவற்றில் ஊரக பகுதியில் 5 பேர் ஏற்கெனவே போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் நகர பகுதியில் 7 பேர் தேர்வு செய்வதற்கான தேர்தல் தேனி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது.  இந்த தேர்தலில் 36 பேர் வேட்பாளராக போட்டியிட்டனர். இதில் நகராட்சி பகுதியில் 176 கவுன்சிலர்களும், பேரூராட்சி பகுதியில் 335 கவுன்சிலர்கள் என மொத்தம் 511 கவுன்சிலர்கள் வாக்காளர்களாக இடம் பெற்றனர். ஒரு வாக்காளர்கள் 7 ஓட்டு வீதம் 3,360 ஓட்டுகள் கணக்கிடப்பட்டது. இதில் 142 ஓட்டுகள் செல்லாத ஓட்டுகள் ஆனது.  இவற்றில் தி.மு.க மற்றும் காங்கிரஸ் கவுன்சிலர்களான கூடலூர் நகராட்சியை சேர்ந்த தினகரன் 329 ஓட்டுகளும், தேனி அல்லிநகரம் நகராட்சியை சேர்ந்த நாராயண பாண்டியன் 324 ஓட்டுகளும், போடி நகராட்சியை சேர்ந்த ஜெயந்தி 308 ஓட்டுகளும், கோம்பை பேரூராட்சியை சேர்ந்த தங்கராஜ் 308 ஓட்டுகளும், பழனிசெட்டிபட்டி பேரூராட்சியை சேர...

தேனியில் பிரைம் கிங்டம் நிறுவனத்தின் 350 பிளாட்கள் உள்ள ஸ்மார்ட் சிட்டியில் வீட்டடி மனை விற்பனைகள் தொடக்கம்

தேனி மாவட்டம், தேனி- போடி தேசிய நெடுஞ்சாலையில், பிரைம் கிங்டம் என்ற தனியார் நிறுவனம் வீட்டடி பிளாட்கள் விற்பனைக்கு அமைத்துள்ளது. இந்த பிரைம் கிங்டம் ஸ்மார்ட் சிட்டியில் 350 பிளாட்டுகள் உள்ளன. இவை அனைத்தும் உலகத்தரம் வாய்ந்த வசதி உள்ள வீட்டடி மனைகளாக தனித்தனி பிளாட்டுகளாக விற்பனை செய்து வருகின்றனர். ஒரு சென்டின் விலை ரூ.10 லட்சம் முதல் ரூ.17 லட்சம் வரை விற்பனையாகிறது. மேலும் இந்த ஸ்மார்ட் சிட்டி வளாகத்தில் விளையாட்டு மைதானங்கள், பூங்காக்கள், மின்விளக்கு மற்றும் அனைத்து வசதிகளுடன் கூடிய வீட்டடி மனைகள் விற்பனை நடைபெற்று வருகிறது. இந்த பிரைம் கிங்டம் ஸ்மார்ட் சிட்டியை 22.6.2023 அன்று முன்னாள் போலீஸ் உயர் அதிகாரி  முனைவர் எம். ரவி ஐ.பி.எஸ் அவர்கள் ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் தேனி மாவட்டத்தில் உள்ள முக்கிய பிரமுகர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதற்கிடையே இந்த ஸ்மார்ட் சிட்டி வளாகத்தில் கடந்த 2 நாட்களாக ஐவர் கால்ப்பந்தாட்ட போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் 25 குழுக்களின் வீரர்கள் கலந்து கொண்டனர். இதில் வெற்றி பெற்ற அணிகளுக்கு முதல் பரிசாக ரூ.50,000 மற்றும் கோப்ப...

போடியில் இருந்து மதுரைக்கு காலை நேரத்தில் பேசஞ்சர் ரயில் விட வேண்டும் : சமூக ஆர்வலர்கள் கோரிக்கை

மதுரை-போடி இடையேயான மீட்டர் கேஜ் ரயில் பாதை அகல ரயில் பாதையாக 12 ஆண்டுகளுக்கு பிறகு மாற்றப்பட்டு இன்று சென்னை வரை ரயில்வே சேவை இயக்கப்படுவது தேனி மாவட்ட மக்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. அதே வேளையில் காலையில் மதுரையில் இருந்து புறப்படும் பேசஞ்சர் ரயில் மதுரையில் இருந்து தேனி மாவட்டத்திற்கு வரக்கூடிய பயணிகளுக்கு மட்டுமே வசதியாக உள்ளது. ஆனால் போடி, தேனி, ஆண்டிப்பட்டி, உசிலம்பட்டி ஊர்களில் வசிக்கக்கூடிய மக்கள் மதுரைக்கு வேலைக்கு செல்லவும், மருத்துவமனைக்கு செல்லவும், வழக்கறிஞர்கள் நீதிமன்றம் செல்லவும் போடியில் இருந்து காலை 7:30 மணிக்கு புறப்பட்டு மதுரைக்கு சென்றடையும் வகையிலும், மேலும் மதுரையில் இருந்து மாலை 6 மணிக்கு புறப்பட்டு போடி வரும் வகையில் பேசஞ்சர் ரயில் விட வேண்டும் என்பது தேனி மாவட்ட மக்கள் பலரது கோரிக்கையாகும்.  அதுபோல மதுரை-போடி இடையே அகல ரயில் பாதை அமைவதற்கு முன்பாக தேனி கலெக்டர் ஆபீஸ் ரயில் நிறுத்தம் இருந்தது. ஆனால் தற்பொழுது அந்த நிறுத்தம் இல்லாமல் போனது. இதனால் மதுரையில் இருந்து வரக்கூடிய பயணிகள் குறிப்பாக அரசு அலுவலகங்கள், தனியார் அலுவலகங்களுக்கு வேலைக்கு செல்லக...

தேனி மாவட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி நிதியில் ரூ.151.32 லட்சம் மதிப்பீட்டில் கட்டிட பணிகள் : ப.ரவீந்திரநாத் எம்.பி., திறந்து வைத்தார்

தேனி பாராளுமன்ற உறுப்பினர் ப.ரவீந்திரநாத் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.151.32 லட்சம் மதிப்பீட்டில் புதிய கட்டிடங்கள் என பல்வேறு திட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில் பெரியகுளம் புதிய பஸ் நிலையம் எதிரில் ரூ.26.12 லட்சம் மதிப்பீட்டில் நூலக கட்டிடம், ஜி.கல்லுப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் ரூ.8 லட்சம் மதிப்பீட்டில் கலையரங்கம், தேனி யூனியன், அரண்மனைப்புதூர் ஊராட்சிக்கு உட்பட்ட கோட்டைபட்டியில் ரூ.14.60 லட்சம் மதிப்பீட்டில் ரேசன் கடை கட்டிடம், பூமலைக்குண்டு ஊராட்சியில் ரூ.16 லட்சம் மதிப்பீட்டில் குடிநீர் மேல்நிலை நீர்தேக்க தொட்டி கட்டப்பட்டுள்ளது. அதுபோல சின்னமனூர் ஸ்ரீ பூலாநந்தீஸ்வரர் கோவிலில் ரூ.14 லட்சம் மதிப்பீட்டில் உணவு அரங்கம், அய்யம்பட்டி ஊராட்சியில் ரூ.10.60 லட்சம் மதிப்பீட்டில் ரேசன் கடை, பண்ணைப்புரம் பகுதியில் ரூ.14.60 லட்சம் மதிப்பீட்டில் ரேசன் கடை, டி.ரெங்கநாதபுரம் பகுதியில் ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் சமுதாய கூடம், குப்பனாசாரிபட்டியில் ரூ.7.40 லட்சம் மதிப்பீட்டில் ரேசன் கடை மற்றும் போடி சுப்புராஜ் நகர் பகுதியில் உள்ள சிட்னி மைதானத்தில் ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் நடைமே...

தேனியில் முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்ற 1,442 வீரர், வீராங்கனைகளுக்கு பரிசளிப்பு : அமைச்சர் ஐ.பெரியசாமி வழங்கினார்

தேனி மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற வீரர், வீராங்கனைகளுக்கு  பரிசளிப்பு விழா மாவட்ட விளையாட்டு மைதானத்தில் 17.6.2023 அன்று நடைபெற்றது. விழாவுக்கு தேனி மாவட்ட கலெக்டர் ஷஜீவனா தலைமை தாங்கினார். சட்ட மன்ற உறுப்பினர்கள் ஆண்டிபட்டி மகாராஜன், பெரியகுளம் சரவணகுமார், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தங்க தமிழ்செல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு 1,442 நபர்களுக்கு பதக்கம் மற்றும் பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார். மேலும் ரூ. 41.58 லட்சம் மதிப்பிலான பரிசு தொகை வங்கியில் செலுத்தப்பட்டதற்கான ஆணையினை வழங்கி பாராட்டினார். இந்நிகழ்ச்சியில் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பேசுகையில், தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலோடு மாவட்ட அளவிலான முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகளை மிகச் சிறப்பாக நடத்தி விளையாட்டுத் துறையில் மாபெரும் புரட்சியை ஏற்படுத்தி உள...

தூத்துக்குடியில் மரக்கன்றுகள் நடும் விழா : கனிமொழி எம்.பி., தொடங்கி வைத்தார்

தூத்துக்குடி 3-ஆம் மைல் பகுதியில் மறைந்த முன்னாள் முதல்வர் முத்தமிழஞர் கலைஞர் கருணாநிதி நூற்றாண்டு விழாவையொட்டி, தி.மு.க துணை பொதுச் செயலாளர் கனிமொழி கருணாநிதி எம்.பி., அவர்கள் மரக்கன்றுகள் நடும் விழாவை தொடங்கி வைத்தார்.  இந்த நிகழ்வில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க செயலாளரும், சமூக நலன் – மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதா ஜீவன், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, தூத்துக்குடி மாநகராட்சி துணை மேயர் ஜெனிட்டா செல்வராஜ், தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் தினேஷ் குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியின் போது மொத்தம் 1,200 மரக்கன்றுகள் நடப்பட்டது. 'மரத்தை நாம் வளர்த்தால் மரம் நம்மை வளர்க்கும் ’ என்று மறைந்த முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி தெரிவித்துள்ளார். அவரது சொல்லிற்கிணங்க கருணாநிதியின் நூற்றாண்டு விழாவையொட்டி, தமிழகத்தில் உள்ள அனைத்து மாநில நெடுஞ்சாலைகளிலும் 5 லட்சம் மரக்கன்றுகள் நடப்படும். இதனால் மாநில நெடுஞ்சாலைகளில் இடைவெளி இல்லாமல் மரங்கள் வளர்க்கப்படும் என்ற இலக்கு எட்டப்படும் என்று இந்த 2023-24-ம் ஆண்டு நெடுஞ்சாலை துறை மானிய கோரிக்கையில் அறிவிக்கப்...

தமிழ்நாட்டில் 22 அரசு தொழிற் பயிற்சி நிலையங்களில் ரூ.762 கோடி மதிப்பீட்டில் 4.0 தொழில்நுட்ப மையங்கள் தொடக்கம்: தேனியில் கலெக்டர் ஷஜீவனா குத்துவிளக்கேற்றி வைத்தார்

தமிழ்நாடு முழுவதும் 22 அரசு தொழிற் பயிற்சி நிலையங்களில் ரூ.762.30 கோடி மதிப்பீட்டில் டாடா டெக்னாலஜிஸ் நிறுவனத்துடன் இணைந்து அமைக்கப்பட்டுள்ள தொழில் 4.0 தொழில்நுட்ப மையங்ளை காணொலி காட்சி வாயிலாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 8.6.2023 அன்று தொடங்கி வைத்தார்கள்.  இதில் தேனி மாவட்டத்தில் உள்ள தேனி மற்றும் போடிநாயக்கனூர் பகுதியில்  அரசு தொழிற்பயிற்சி நிலையம் என 2 தொழிற்பயிற்சி நிலையங்களை காணொலி காட்சி வாயிலாக தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தொடங்கி வைத்தார். இதனைத்தொடர்ந்து தேனி அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் ஆர்.வி.ஷஜீவனா பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.சரவணக்குமார் முன்னிலையில் குத்துவிளக்கேற்றி வைத்து தொழில் 4.0 தொழில்நுட்ப மையத்தினை பார்வையிட்டார்.  இந்நிகழ்ச்சியின் போது நிலைய மேலாண்மைக்குழு தலைவர் பேராசிரியர் வி.அரவிந்த்,அரசு தொழில் பயிற்சி நிலைய முதல்வர்  வே.சேகரன், தேனி-அல்லிநகரம் நகராட்சி நகர்மன்ற தலைவர் ரேணுபிரியா பாலமுருகன், பெரியகுளம் நகர்மன்ற தலைவர் சுமிதா சிவக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். ரா.சிவபாலன், சிற...