முதலமைச்சர் கோப்பைக்கான மாநில அளவிலான விளையாட்டு போட்டிகளில் பங்கேற்க தேனி வீரர்கள் சென்னை சென்றனர் : கலெக்டர் ஷஜீவனா வழியனுப்பி வைத்தார்
தேனி மாவட்டத்தில் உள்ள விளையாட்டு வீரர்களில் முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிக்கு தேர்வு பெற்ற விளையாட்டு வீரர்களை சென்னையில் மாநில அளவில் நடைபெறும் போட்டியில் பங்கேற்க தேனி மாவட்ட விளையாட்டு அரங்கில் இருந்து சென்னைக்கு செல்லும் பஸ்சினை தேனி மாவட்ட கலெக்டர் ஆர்.வி.ஷஜீவனா அவர்கள், மாவட்ட வருவாய் அலுவலர் இரா.ஜெயபாரதி மற்றும் மாவட்ட விளையாட்டு அலுவலர் முருகன் ஆகியோர் முன்னிலையில் 29.6.2023 அன்று கொடியசைத்து வழி அனுப்பி வைத்தார். இதுகுறித்து மாவட்ட கலெக்டர் ஷஜீவனா தெரிவிக்கையில், முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள் தேனி மாவட்ட அளவில் கடந்த 8.2.2023 முதல் 24.2.2023 வரை தேனி மாவட்ட விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இதில் பள்ளி, கல்லூரி மற்றும் பொதுப்பிரிவினர், அரசு ஊழியர்கள், மாற்றுத்திறனாளிகள் என 5 பிரிவிகளில் நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் 5,944 நபர்கள் கலந்து கொண்டனர். மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற 1,442 வீரர், வீராங்கனைகளுக்கு 17.6.2023 அன்று ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கினார். இந்நிலையில் மாநில அளவில் முதலமைச்சர்...