தேனியில் பிரைம் கிங்டம் நிறுவனத்தின் 350 பிளாட்கள் உள்ள ஸ்மார்ட் சிட்டியில் வீட்டடி மனை விற்பனைகள் தொடக்கம்
தேனி மாவட்டம், தேனி- போடி தேசிய நெடுஞ்சாலையில், பிரைம் கிங்டம் என்ற தனியார் நிறுவனம் வீட்டடி பிளாட்கள் விற்பனைக்கு அமைத்துள்ளது. இந்த பிரைம் கிங்டம் ஸ்மார்ட் சிட்டியில் 350 பிளாட்டுகள் உள்ளன. இவை அனைத்தும் உலகத்தரம் வாய்ந்த வசதி உள்ள வீட்டடி மனைகளாக தனித்தனி பிளாட்டுகளாக விற்பனை செய்து வருகின்றனர். ஒரு சென்டின் விலை ரூ.10 லட்சம் முதல் ரூ.17 லட்சம் வரை விற்பனையாகிறது. மேலும் இந்த ஸ்மார்ட் சிட்டி வளாகத்தில் விளையாட்டு மைதானங்கள், பூங்காக்கள், மின்விளக்கு மற்றும் அனைத்து வசதிகளுடன் கூடிய வீட்டடி மனைகள் விற்பனை நடைபெற்று வருகிறது. இந்த பிரைம் கிங்டம் ஸ்மார்ட் சிட்டியை 22.6.2023 அன்று முன்னாள் போலீஸ் உயர் அதிகாரி முனைவர் எம். ரவி ஐ.பி.எஸ் அவர்கள் ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் தேனி மாவட்டத்தில் உள்ள முக்கிய பிரமுகர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதற்கிடையே இந்த ஸ்மார்ட் சிட்டி வளாகத்தில் கடந்த 2 நாட்களாக ஐவர் கால்ப்பந்தாட்ட போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் 25 குழுக்களின் வீரர்கள் கலந்து கொண்டனர். இதில் வெற்றி பெற்ற அணிகளுக்கு முதல் பரிசாக ரூ.50,000 மற்றும் கோப்பையும் வழங்கப்பட்டது. இரண்டாம் பரிசாக ரூ.30,000 மற்றும் கோப்பையும் வழங்கப்பட்டது. மூன்றாம் பரிசாக ரூ.20,000 மற்றும் கோப்பையும் வழங்கப்பட்டது. நான்காம் பரிசாக ரூ10,000 மற்றும் கோப்பையும் வழங்கப்பட்டது. இந்த பரிசுகளை போடி ஏல விவசாயிகள் சங்க கல்லூரி தலைவர் எஸ்.வி.சுப்ரமணியம், போடிநாயக்கனூர் ஏலக்காய் தொழிலதிபர் ஞானவேல் மற்றும் தேனி கால்பந்து விளையாட்டு சங்க மாவட்ட தலைவர் கதிரேசன், ஜே.ஜே கன்ஸ்ட்ரக்சன் செல்வின் ஆகியோர் பரிசு கோப்பைகளையும், பரிசு தொகையையும் வழங்கினர். இந்த நிகழ்ச்சியினை கால்பந்து போட்டியினை காண வந்த பார்வையாளர்களும் மற்றும் பிரைம் கிங்டம் சிட்டியில் வீட்டடி மனை வாங்க வந்தவர்களும் கண்டு களித்தனர். அதுபோல பிரைம் ஸ்மார்ட் சிட்டி துவக்க விழா அன்று வீட்டடி மனை வாங்க வந்தவர்களுக்கு இனிப்பு மற்றும் உணவுகள் வழங்கப்பட்டது.
G சிவக்குமார், நிர்வாக ஆசிரியர்
Comments