பஸ் வசதி வேண்டும் என்ற பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஒரே நாளில் நிறைவேற்றிய கனிமொழி கருணாநிதி எம்.பி.,
தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் வட்டத்தில் அமைந்துள்ள நங்கைமொழி ஊராட்சியில், மக்கள் களம் நிகழ்ச்சி 26.6.2023 அன்று காலை நடைபெற்றது. அதில் தங்கள் நங்கைமொழி கிராமத்திலிருந்து அடைக்கலபுரம் ஊராட்சி பகுதிக்கு பேருந்து வசதி வேண்டும் என்று தி.மு.க துணை பொதுச்செயலாளரும், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கருணாநிதி அவர்களிடம் பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.
அதனைத்தொடர்ந்து கனிமொழி எம்.பி., அவர்கள் முயற்சியால் 26.6.2023 அன்று முதல் சேவையாக சாத்தான்குளத்தில் இருந்து உடன்குடி வரை செல்லும் பேருந்து தடம் எண் 65 பி., 26.6/2023 அன்று மாலை 6 மணிக்கு நங்கைமொழி கிராமத்திற்கு வந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு 6.20 மணிக்கு புறப்பட்டு சென்றது. இந்த பேருந்து தினசரி காலை 7:45 மணிக்கு மற்றும் மாலை 6:15 மணிக்கு வரும் என பொதுமக்களிடம் சாத்தான்குளம் பணிமனை சார்பாக தெரிவிக்கப்பட்டது. தங்களின் கோரிக்கையை ஒரே நாளில் நிறைவேறியதை தொடர்ந்து நங்கைமொழி ஊராட்சியை சேர்ந்த பொதுமக்கள் இனிப்புகளை வழங்கி தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி கனிமொழி கருணாநிதி எம்.பி., அவர்களுக்கு நன்றியை தெரிவித்தனர்.
G.சிவக்குமார் நிர்வாக ஆசிரியர்
Comments