Skip to main content

தமிழ்நாட்டில் 22 அரசு தொழிற் பயிற்சி நிலையங்களில் ரூ.762 கோடி மதிப்பீட்டில் 4.0 தொழில்நுட்ப மையங்கள் தொடக்கம்: தேனியில் கலெக்டர் ஷஜீவனா குத்துவிளக்கேற்றி வைத்தார்

தமிழ்நாடு முழுவதும் 22 அரசு தொழிற் பயிற்சி நிலையங்களில் ரூ.762.30 கோடி மதிப்பீட்டில் டாடா டெக்னாலஜிஸ் நிறுவனத்துடன் இணைந்து அமைக்கப்பட்டுள்ள தொழில் 4.0 தொழில்நுட்ப மையங்ளை காணொலி காட்சி வாயிலாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 8.6.2023 அன்று தொடங்கி வைத்தார்கள்.  இதில் தேனி மாவட்டத்தில் உள்ள தேனி மற்றும் போடிநாயக்கனூர் பகுதியில்  அரசு தொழிற்பயிற்சி நிலையம் என 2 தொழிற்பயிற்சி நிலையங்களை காணொலி காட்சி வாயிலாக தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தொடங்கி வைத்தார்.

இதனைத்தொடர்ந்து தேனி அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் ஆர்.வி.ஷஜீவனா பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.சரவணக்குமார் முன்னிலையில் குத்துவிளக்கேற்றி வைத்து தொழில் 4.0 தொழில்நுட்ப மையத்தினை பார்வையிட்டார். 

இந்நிகழ்ச்சியின் போது நிலைய மேலாண்மைக்குழு தலைவர் பேராசிரியர் வி.அரவிந்த்,அரசு தொழில் பயிற்சி நிலைய முதல்வர்  வே.சேகரன், தேனி-அல்லிநகரம் நகராட்சி நகர்மன்ற தலைவர் ரேணுபிரியா பாலமுருகன், பெரியகுளம் நகர்மன்ற தலைவர் சுமிதா சிவக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

ரா.சிவபாலன், சிறப்பு நிருபர் 

Comments