தேனி மாவட்ட போலீஸ் துறை சார்பில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி தேனியில் நடைபெற்றது. இந்த விழிப்புணர்வு பேரணியை மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு (ADSP) சுகுமார் தலைமை தாங்கி கொடியசைத்து துவக்கி வைத்தார். தேனி டி.எஸ்.பி.,(உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர்) பார்த்திபன், தேனி மாவட்ட சமூக நல அலுவலர் சியாமளா தேவி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த விழிப்புணர்வு பேரணி தேனி-மதுரை சாலை பங்களா மேடு பகுதியில் துவங்கி தேனி நேரு சிலை பழைய பேருந்து நிலையம் கம்பம் சாலை வழியாக ABM ஹோட்டல் வரை சென்று மீண்டும் நேரு சிலை வழியாக பெரியகுளம் சாலை என்.ஆர்.டி நகர் வழியாக தேனி நாடார் சரஸ்வதி ஆண்கள் மேல்நிலை பள்ளி வளாகத்தில் நிறைவடைந்தது.
இந்த பேரணியில் அல்லிநகரம் பாக்யா மெட்ரிக் பள்ளி, தேனி நாடார் சரஸ்வதி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, தேனி பாலம் மெட்ரிக் பள்ளி, தேனி கம்மவார் சங்க மெட்ரிக் பள்ளி மாணவ, மாணவியர்கள், சாரண-சாரணியர் இயக்கத்தை சேர்ந்தவர்கள், NSS மாணவர்கள், ஆசிரியர்கள் உள்பட சுமார் 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியவாறு ஊர்வலமாக சென்றனர்.
இந்த விழிப்புணர்வு பேரணி ஏற்பாடுகளை தேனி காவல் நிலைய ஆய்வாளர்கள் வெங்கடாஜலபதி, மாயராஜலட்சுமி, தேனி நகர் போக்குவரத்து காவல் ஆய்வாளர் தட்சிணாமூர்த்தி, அல்லிநகரம் காவல் ஆய்வாளர் கண்ணன், பழனிசெட்டிபட்டி காவல் ஆய்வாளர் ராஜேஷ் மற்றும் போலீசார் செய்திருந்தனர்.
K.சரவணன், சிறப்பு நிருபர்
Comments