தேனி மாவட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி நிதியில் ரூ.151.32 லட்சம் மதிப்பீட்டில் கட்டிட பணிகள் : ப.ரவீந்திரநாத் எம்.பி., திறந்து வைத்தார்
தேனி பாராளுமன்ற உறுப்பினர் ப.ரவீந்திரநாத் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.151.32 லட்சம் மதிப்பீட்டில் புதிய கட்டிடங்கள் என பல்வேறு திட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில் பெரியகுளம் புதிய பஸ் நிலையம் எதிரில் ரூ.26.12 லட்சம் மதிப்பீட்டில் நூலக கட்டிடம், ஜி.கல்லுப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் ரூ.8 லட்சம் மதிப்பீட்டில் கலையரங்கம், தேனி யூனியன், அரண்மனைப்புதூர் ஊராட்சிக்கு உட்பட்ட கோட்டைபட்டியில் ரூ.14.60 லட்சம் மதிப்பீட்டில் ரேசன் கடை கட்டிடம், பூமலைக்குண்டு ஊராட்சியில் ரூ.16 லட்சம் மதிப்பீட்டில் குடிநீர் மேல்நிலை நீர்தேக்க தொட்டி கட்டப்பட்டுள்ளது.
அதுபோல சின்னமனூர் ஸ்ரீ பூலாநந்தீஸ்வரர் கோவிலில் ரூ.14 லட்சம் மதிப்பீட்டில் உணவு அரங்கம், அய்யம்பட்டி ஊராட்சியில் ரூ.10.60 லட்சம் மதிப்பீட்டில் ரேசன் கடை, பண்ணைப்புரம் பகுதியில் ரூ.14.60 லட்சம் மதிப்பீட்டில் ரேசன் கடை, டி.ரெங்கநாதபுரம் பகுதியில் ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் சமுதாய கூடம், குப்பனாசாரிபட்டியில் ரூ.7.40 லட்சம் மதிப்பீட்டில் ரேசன் கடை மற்றும் போடி சுப்புராஜ் நகர் பகுதியில் உள்ள சிட்னி மைதானத்தில் ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் நடைமேடை என மொத்தம் ரூ.151.32 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கட்டிட பணிகள் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு தொடங்கி வைக்கப்பட்டது.
இந்த கட்டிட பணிகளை தேனி பாராளுமன்ற உறுப்பினர் ப.ரவீந்தரநாத் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சிகளில் தேனி மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பிரிதா நடேஷ், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் மதுமதி, தேனி ஊராட்சி ஒன்றிய குழு துணை தலைவர் முருகன், அரண்மனைப்புதூர் ஊராட்சி தலைவர் பிச்சை உள்பட ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள், சம்மந்தப்பட்ட துறை அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
S சசிதுரை, சிறப்பு நிருபர்
Comments