Skip to main content

தூத்துக்குடியில் மரக்கன்றுகள் நடும் விழா : கனிமொழி எம்.பி., தொடங்கி வைத்தார்

தூத்துக்குடி 3-ஆம் மைல் பகுதியில் மறைந்த முன்னாள் முதல்வர் முத்தமிழஞர் கலைஞர் கருணாநிதி நூற்றாண்டு விழாவையொட்டி, தி.மு.க துணை பொதுச் செயலாளர் கனிமொழி கருணாநிதி எம்.பி., அவர்கள் மரக்கன்றுகள் நடும் விழாவை தொடங்கி வைத்தார். 

இந்த நிகழ்வில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க செயலாளரும், சமூக நலன் – மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதா ஜீவன், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, தூத்துக்குடி மாநகராட்சி துணை மேயர் ஜெனிட்டா செல்வராஜ், தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் தினேஷ் குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியின் போது மொத்தம் 1,200 மரக்கன்றுகள் நடப்பட்டது.

'மரத்தை நாம் வளர்த்தால் மரம் நம்மை வளர்க்கும் ’ என்று மறைந்த முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி தெரிவித்துள்ளார். அவரது சொல்லிற்கிணங்க கருணாநிதியின் நூற்றாண்டு விழாவையொட்டி, தமிழகத்தில் உள்ள அனைத்து மாநில நெடுஞ்சாலைகளிலும் 5 லட்சம் மரக்கன்றுகள் நடப்படும். இதனால் மாநில நெடுஞ்சாலைகளில் இடைவெளி இல்லாமல் மரங்கள் வளர்க்கப்படும் என்ற இலக்கு எட்டப்படும் என்று இந்த 2023-24-ம் ஆண்டு நெடுஞ்சாலை துறை மானிய கோரிக்கையில் அறிவிக்கப்பட்டது.

கருணாநிதியின் நூற்றாண்டு விழா தொடக்கத்தை முன்னிட்டு ஜூன் 7-ம் தேதி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், சென்னை கிண்டியில் உள்ள நெடுஞ்சாலை ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் 5 லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டத்தை, மரக்கன்று ஒன்றை நட்டு தொடங்கி வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

G.சிவக்குமார், நிர்வாக ஆசிரியர் - சுக்ரன் நியூஸ் 

Comments