Skip to main content

போடியில் இருந்து மதுரைக்கு காலை நேரத்தில் பேசஞ்சர் ரயில் விட வேண்டும் : சமூக ஆர்வலர்கள் கோரிக்கை

மதுரை-போடி இடையேயான மீட்டர் கேஜ் ரயில் பாதை அகல ரயில் பாதையாக 12 ஆண்டுகளுக்கு பிறகு மாற்றப்பட்டு இன்று சென்னை வரை ரயில்வே சேவை இயக்கப்படுவது தேனி மாவட்ட மக்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. அதே வேளையில் காலையில் மதுரையில் இருந்து புறப்படும் பேசஞ்சர் ரயில் மதுரையில் இருந்து தேனி மாவட்டத்திற்கு வரக்கூடிய பயணிகளுக்கு மட்டுமே வசதியாக உள்ளது. ஆனால் போடி, தேனி, ஆண்டிப்பட்டி, உசிலம்பட்டி ஊர்களில் வசிக்கக்கூடிய மக்கள் மதுரைக்கு வேலைக்கு செல்லவும், மருத்துவமனைக்கு செல்லவும், வழக்கறிஞர்கள் நீதிமன்றம் செல்லவும் போடியில் இருந்து காலை 7:30 மணிக்கு புறப்பட்டு மதுரைக்கு சென்றடையும் வகையிலும், மேலும் மதுரையில் இருந்து மாலை 6 மணிக்கு புறப்பட்டு போடி வரும் வகையில் பேசஞ்சர் ரயில் விட வேண்டும் என்பது தேனி மாவட்ட மக்கள் பலரது கோரிக்கையாகும். 


அதுபோல மதுரை-போடி இடையே அகல ரயில் பாதை அமைவதற்கு முன்பாக தேனி கலெக்டர் ஆபீஸ் ரயில் நிறுத்தம் இருந்தது. ஆனால் தற்பொழுது அந்த நிறுத்தம் இல்லாமல் போனது. இதனால் மதுரையில் இருந்து வரக்கூடிய பயணிகள் குறிப்பாக அரசு அலுவலகங்கள், தனியார் அலுவலகங்களுக்கு வேலைக்கு செல்லக்கூடிய நபர்கள் ரயில்வே ஸ்டேஷன்ல இருந்து ஷேர் ஆட்டோ பிடித்து மறுபடியும் செலவு செய்து நேரம் வரையும் ஆகின்றது. எனவே பழையபடி கலெக்டர் ஆபீஸ் நிறுத்தம் கொண்டு வர வேண்டும். மேலும் கலெக்டர் ஆபீஸ் அருகில் டிக்கெட் புக்கிங் கவுண்டர் ஒன்று கொண்டு வர வேண்டும் என்பது சமூக ஆர்வலர்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளின் கோரிக்கையாக இருக்கிறது என்று தமிழ்நாடு தொண்டு நிறுவனங்கள் கூட்டமைப்பு தலைவர் வி.ஆர்.ராஜன் (முன்னாள் ரயில்வே போர்டு உறுப்பினர் ) செய்தியாளர்களிடம் தெரிவித்தார். மேலும் இது தொடர்பாக ரயில்வே துறைக்கு கோரிக்கை மனு அனுப்படும் என்றும் தெரிவித்தார்.

R.பாண்டியன், உதவி ஆசிரியர் 

Comments