போடி பரமசிவன் மலைக்கோவில் சித்திரை திருவிழாவிற்கு கொடிமரம் ஊன்றும் பூஜை: தமிழக முன்னாள் முதல்வர், திமுக வேட்பாளர் ஓ. பன்னீர்செல்வம் பங்கேற்பு
தேனி, ஏப்.9- தேனி மாவட்டம், போடிநாயக்கனூர் மேற்கு தொடர்ச்சி அடிவாரத்தில் அமைந்திருக்கும் தென் திருவண்ணாமலை என்று அழைக்கப்படும் போடி பரமசிவன் மலைக்கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை 1-ந் தேதியில் இருந்து 7-ந் தேதி வரை திருவிழா நடைபெற உள்ளது. இந்த திருவிழாவிற்கான கொடிமரம் ஊன்றும் நிகழ்ச்சி 9.4.2026 அன்று நடைபெற்றது. போடி நகர் பகுதியில் உள்ள பழமை வாய்ந்த பெரியாண்டவர் கோவிலில் இருந்து கொடிமரம் சுமார் 5 கிலோமீட்டர் தூரம் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. இந்நிகழ்வில் தமிழக முன்னாள் முதல்வர், திமுக வேட்பாளர் ஓ. பன்னீர்செல்வம் கொடி மர பூஜையில் கலந்து கொண்டு சிறப்பு வழிபாட்டில் ஈடுபட்டார். அதனைத்தொடர்ந்து கிரிவல பாதையில் கொடிமரம் மலைக் கோவிலுக்கு எடுத்து செல்லப்பட்டது. இந்த கிரிவல பாதையில் திமுக வேட்பாளர் ஓ. பன்னீர்செல்வம் ஜுப்பில் மலைக்கோவிலுக்கு சென்று பழமை வாய்ந்த சிவன் கோவிலில் வழிபாடு செய்தார். இந்நிகழ்ச்சியில் போடி ஜமீன்தார் வடமலை ராஜையபாண்டியன், தேனி திமுக வடக்கு மாவட்ட செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன் எம்,பி., முன்னாள் எம்.பி., ரவீந்திரநாத், போடி நகர் த...