தேனி மாவட்டத்தில் அண்ணா கூட்டுறவு நூற்பாலை மற்றும் தனியார் நூற்பாலையின் செயல்பாடுகள் குறித்து கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி ஆய்வு
தேனி, மே.5- தேனி மாவட்டத்தில் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர். காந்தி அவர்கள் ஆண்டிபட்டி அருகே அமைந்துள்ள அண்ணா கூட்டுறவு நூற்பாலை, ஊஞ்சாம்பட்டி பகுதியில் அமைந்துள்ள தனியார் நூற்பாலை. ஆண்டிபட்டி உயர் தொழில்நுட்ப விசைத்தறி நெசவு பூங்கா ஆகியவற்றின் செயல்பாடுகள் குறித்து தேனி மாவட்ட கலெக்டர் ரஞ்ஜீத் சிங், துணிநூல் இயக்குநர் இரா.லலிதா, தேனி பாராளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்செல்வன், ஆண்டிபட்டி சட்டமன்ற உறுப்பினர் மகாராஜன், பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் சரவணகுமார் ஆகியோர் முன்னிலையில் 5.5.2025 அன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே அமைந்துள்ள அண்ணா கூட்டுறவு நூற்பாலையில் நவீன இயந்திரங்களின் செயல்பாடுகள் குறித்து கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, நாள் ஒன்றுக்கு உற்பத்தி செய்யப்படும் நூல் அளவு குறித்தும் அரசு திட்டங்களுக்கான வேட்டி சேலை மற்றும் பள்ளி சீருடை ஆகிய திட்டங்களுக்கு தேவையான நூல்கள் உற்பத்தி குறித்தும் அலுவலர்களிடம் கேட்டறிந்தார். மேலும், இந்த நூற்பாலையில் தொழிலாளர் நலன் காக்கும் ப...