Skip to main content

Posts

தேனி மாவட்டத்தில் அண்ணா கூட்டுறவு நூற்பாலை மற்றும் தனியார் நூற்பாலையின் செயல்பாடுகள் குறித்து கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி ஆய்வு

தேனி, மே.5- தேனி மாவட்டத்தில் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர். காந்தி அவர்கள் ஆண்டிபட்டி அருகே அமைந்துள்ள அண்ணா கூட்டுறவு நூற்பாலை, ஊஞ்சாம்பட்டி பகுதியில் அமைந்துள்ள தனியார் நூற்பாலை. ஆண்டிபட்டி உயர் தொழில்நுட்ப விசைத்தறி நெசவு பூங்கா ஆகியவற்றின் செயல்பாடுகள் குறித்து தேனி மாவட்ட கலெக்டர் ரஞ்ஜீத் சிங், துணிநூல் இயக்குநர் இரா.லலிதா, தேனி பாராளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்செல்வன், ஆண்டிபட்டி சட்டமன்ற உறுப்பினர் மகாராஜன், பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் சரவணகுமார் ஆகியோர் முன்னிலையில் 5.5.2025 அன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே அமைந்துள்ள அண்ணா கூட்டுறவு நூற்பாலையில் நவீன இயந்திரங்களின் செயல்பாடுகள் குறித்து கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, நாள் ஒன்றுக்கு உற்பத்தி செய்யப்படும் நூல் அளவு குறித்தும் அரசு திட்டங்களுக்கான வேட்டி சேலை மற்றும் பள்ளி சீருடை ஆகிய திட்டங்களுக்கு தேவையான நூல்கள் உற்பத்தி குறித்தும் அலுவலர்களிடம் கேட்டறிந்தார். மேலும், இந்த நூற்பாலையில் தொழிலாளர் நலன் காக்கும் ப...

நாடார் சரஸ்வதி பொறியியல் கல்லூரி மாணவிக்கு பணி நியமன ஆணை

தேனி, மே.5- தேனி நாடார் சரஸ்வதி பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி மாணவ மாணவிகள் கத்தார் மேக்னிபுரோ டெ டெக்னாலஜி (Magnipro Technology services) பன்னாட்டு நிறுவனம் ஆன்லைன் வாயிலாக நடத்திய டெக்னிக்கல் தேர்வு சுற்று மற்றும் HR தேர்வில் கலந்து கொண்டனர்.  இந்த தேர்வில் கணினி அறிவியல் பொறியியல் துறையின் இறுதியாண்டு மாணவி T.மமிதா செக்யூரிட்டி ஆபரேசன் சென்டர் அனாலிஸ்ட் (Security operation Center Analyst) பணிக்கு ஆண்டுக்கு ரூ.28,00,000/- (இருபத்து எட்டு இலட்சம்) ஊதியத்துடன் தேர்வு செய்யப்பட்டார்.  மேலும் இந்த மாணவி கத்தார் மேக்னிபுரோ டெக்னாலஜி நிறுவனம் 45 நாட்கள் வழங்கிய பயிற்சியில் (Internship) பங்கு பெற்றது குறிப்பிடத்தக்கது. தேர்ந்தெடுக்கப்பட்ட  இந்த மாணவிக்கு தேனி மேலப்பேட்டை இந்து நாடார்கள் உறவின்முறையின் தலைவர் T.ராஜமோகன், உபதலைவர் P.P.கணேஷ், பொதுச்செயலாளர் M.M.ஆனந்தவேல், பொருளாளர் M.பழனியப்பன், ஆட்சிமன்ற குழு உறுப்பினர்கள், கல்லூரியின் செயலாளர்கள் A.ராஜ்குமார், A.S.R.மகேஸ்வரன், இணைச்செயலாளர் S.நவீன்ராம். கல்லூரியின் நிர்வாகக்குழு உறுப்பினர்கள். கல்லூரியின் முதல்வர் டாக...

தேனி மாவட்டத்தில் தனியார் பள்ளி வாகனங்கள் சிறப்பு ஆய்வு முகாம்: மாவட்ட கலெக்டர் ரஞ்ஜீத் சிங் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

தேனி, மே.3- தேனி மாவட்டத்தில் உள்ள அனைத்து தனியார் பள்ளி வாகனங்கள் ஆய்வு செய்யும் சிறப்பு முகாம் தேனி மாவட்ட நிர்வாகம், காவல்துறை, பள்ளிக்கல்வித்துறை, தீயணைப்புத்துறை, வட்டார போக்குவரத்து அலுவலகம் இணைந்து தேனி மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்திற்கு உட்பட்ட தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களை ஏற்றி செல்லும் பள்ளி வாகனங்கள் கூட்டாய்வு 3.4.2025 அன்று தேனி ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்றது.  தேனி மாவட்ட கலெக்டர் ரஞ்ஜீத் சிங், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆர்.சிவபிரசாத் முன்னிலையில் வாகனங்களை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது பள்ளி வாகனத்தில் அவசர கால வழி (Emergency Exit Doors) முதலுதவிப்பெட்டி, ஏறி இறங்கும் படிகட்டுகள், தீயணைப்பான் கருவி, வாகனத்தின் தரை பலகை (Plot form) கண்காணிப்பு கேமிரா உள்புறம் மற்றும் வெளிப்புறம் ஆகியன முறையாக உள்ளதா என்றும், மேலும் வேக கட்டுப்பட்டுக்கருவி வாகனத்தின் பிரேக்கின் திறன் போன்றவைகள் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதனைத்தொடர்ந்து, மாவட்ட கலெக்டர் பள்ளி வாகன டிரைவர்களிடம் தெரிவிக்கையில், ஆண்டுக்கு ஒருமுறை பன்ளி மாணவ, மாணவிகளை அழைத்து செல்லும் வாகனங்...

கேந்திர வித்யாலயா பள்ளிகளுக்கு இடையேயான: தேசிய அளவிலான கூடைப்பந்தாட்ட போட்டிக்கு மதுரை மாணவி தேர்வு

  தேனி, மே.2- தமிழ்நாடு பாண்டிச்சேரி உள்ளிட்ட கேந்திரிய வித்யாலயா பள்ளிகளுக்கு இடையேயான கூடைப்பந்தாட்ட போட்டி நடைபெற்றது. இதில் வெற்றி பெறும் அணி தேசிய அளவில் லக்னோ கான்பூரில் விளையாட உள்ளனர். இவற்றில் ஒருங்கிணைந்த சென்னை ரீஜன் அணிக்கு தேசிய அளவில் 17 வயதுக்கு உட்பட்ட பெண்கள் கூடைப்பந்தாட்ட போட்டியில் விளையாடுவதற்கு தேனி மாவட்டத்தை பூர்வீகமாக கொண்ட மதுரை சேர்ந்த மாணவி தன்யஸ்ரீ குறிஞ்சிகுமரன் தேசிய போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.  தேசிய அளவிலான போட்டிக்கு தேர்வான மாணவி தன்யஸ்ரீயை பள்ளி முதல்வர், உடற்கல்வி ஆசிரியர், பயிற்சியாளர், பெற்றோர்கள் உள்பட அனைவரும் பாராட்டி வாழ்த்துக்களை தெரிவித்தனர். ............................. நாகராஜ், தலைமை நிருபர் 

தேனியில் லைப் இனவேஷன் சி.பி.எஸ்.சி பள்ளி திறப்பு விழா: கலெக்டர் ரஞ்ஜீத் சிங் திறந்து வைத்தார்

தேனி, மே.1- தேனி மாவட்டம், பெரியகுளம் தாலுகா, வடபுதுப்பட்டியில் லைப் இனவேஷன் சி.பி.எஸ்.இ., பள்ளி திறப்பு 30.4.2025 (அட்சயதிரிதியை) அன்று நடைபெற்றது. விழாவிற்கு தேனி மாவட்ட கலெக்டர் ரஞ்ஜீத் சிங் தலைமை தாங்கி ரிப்பன் வெட்டி பள்ளியை திறந்து வைத்தார்.  மதுரை ஆதினம் குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ ஹரிஹர தேசிக  ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள், மன்னார்குடி ஜீயர் சுவாமிகள் செண்டலங்கார செண்பகர மன்னார் ராமானுஜ சுவாமிகள், தேனி ஏ.எஸ்.பி., கேல்கர் சுப்ரமணிய பாலசந்ரா, தேனி அரசு அரசு மருத்துவ கல்லூரி முதல்வர் முத்துசித்ரா, எல்.எஸ்., மில்ஸ் நிர்வாக இயக்குநர் பிரபாகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  விழாவிற்கு வந்த அனைவரையும் பள்ளி தாளாளர் நாராயணபிரபு வரவேற்றார். இதனைத்தொடர்ந்து பள்ளி கல்வெட்டை திறந்து வைத்து பள்ளி வளாகத்தை பார்வையிட்டு, குத்துவிளக்கு ஏற்றி வைத்து கலெக்டர் ரஞ்ஜீத் சிங் பேசினார். விழாவில் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை தலைமை இயக்குனர் ஹனுமந்த்ராவ், கே.எம்.சி., குழுமம் நிர்வாக இயக்குநர் முத்துகோவிந்தன்,  மேனகா மில்ஸ் நிர்வாக இயக்குநர் மணிவண்ணன், தொழிலதிபர்கள் செல்வ கணேஷ், ஜெகநா...

தேனி அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் நாட்டு நலப்பணி திட்டம்

தேனி, ஏப்.28- தேனி மாவட்டம், ஆண்டிபட்டியில் உள்ள எஸ்.எஸ்.புரம் கிராமத்தில் வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை மற்றும் தேனி அரசினர் தொழிற் பயிற்சி நிலையம் சார்பில் நாட்டு நலப்பணிகள் திட்ட சிறப்பு முகாம் நடைபெற்றது.  முகாமின் துவக்க விழா நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் திட்ட அலுவலர் ம. மருதுபாண்டி பிரபாகரன் சிறப்பு தமிழில் வரவேற்றார்.  நிகழ்ச்சிக்கு தேனி அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் முதல்வர் வே.சேகரன் தலைமை தாங்கினார். ஆண்டிபட்டி கிராம ஊராட்சி ஆணையாளர் எஸ். சரவணன் மற்றும் நிர்வாக அலுவலர் சிவகாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர் ஆண்டிபட்டி அரசு பெண்கள் தொழிற் பயிற்சி மைய முதல்வர் ஜெ.சரவணன் சிறப்புரை ஆற்றினார். தேனி மைய பயிற்சி அலுவலர் மா- அன்பரசன் உடையாளி, லட்சுமணன் மற்றும் வெள்ளைச்சாமி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். 4 நாட்கள் நடைபெறும் முகாமில் பள்ளி துப்புரவுப் பணி, கோயில் துப்புரவுப் பணி தெருக்கள் சுத்தம் செய்தல் போன்ற பணிகள் நடைபெறும் என்றும் மேலும் பொதுமக்களுக்கான மஞ்சள் பை வங்கி மேலாண்மை மற்றும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளதாக என்.எஸ்.எஸ். அலுவலர் மருதுபா...

தேனி கலெக்டர் அலுவலகம் முன்பு வீட்டுமனை பட்டா வழங்க கோரி பெண்கள் ஆர்ப்பாட்டம்

  தேனி, ஏப்.28- தேனி கலெக்டர் அலுவலகம் முன்பு லோக் ஜனசக்தி கட்சி களப்போராளி அய்யணன், இந்து திராவிட மக்கள் கட்சி மதுரை மண்டல தலைவர் அபினேஸ்வரன் ஆகியோர் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட பெண்கள் வீட்டு மனை பட்டா வழங்க கோரி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது உத்தமபாளையம், கோம்பை, போடி உள்ளிட்ட பகுதிகளில் சாலையோரம் குடியிருப்போர் மற்றும் வீடு இல்லாதோருக்காக கலைஞர் ஆட்சி காலத்தில் அரசால் வழங்கப்பட்ட பஞ்சமி நிலங்கள் தற்பொழுது ஆக்கிரமிப்புகார்கள் பிடியில் சிக்கி உள்ளது. அதனை மீட்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து ஆக்கிரமிப்புகார்கள் பிடியில் உள்ள அரசால் கடந்த 23 ஆண்டுகளுக்கு முன் கலைஞரால் வழங்கப்பட்ட இலவச காலிமனை பட்டாக்களை தங்களுக்கு வழங்க மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். இதனைத்தொடர்ந்து கலெக்டர் அலுவலகத்தில் இலவச வீட்டு மனை காலியிடம் பட்டா கேட்டு மனு கொடுத்துள்ளனர். அந்த மனுவில் ஏற்கெனவே கடந்த 17.2.2025 அன்று மனு கொடுத்திருந்தோம் இதுவரை இந்த நடவடிக்கை எடுக்கவில்லை. எங்கள் பகுதியில் வசிக்கும் ஏழை எளி...

தேனி மாவட்ட கட்டிட பொறியாளர்கள் சங்க புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா

தேனி, ஏப்.25- தேனி மாவட்ட கட்டிட பொறியாளர் சங்க புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா தேனி ஸ்ரீ தெய்வா ஹோட்டலில் 24.4.2025 அன்று நடைபெற்றது. விழாவில் தேனி மாவட்ட கட்டிட பொறியாளர் சங்க தலைவராக பொறியாளர் மெல்வின் பதவி ஏற்றார். அதுபோல செயலாளராக சையது பரூக்  அப்துல்லா, பொருளாளராக  ரவி பாரத் மற்றும் நிர்வாகிகள் பதவி ஏற்றுக்கொண்டனர்.  முன்னாள் மண்டல தலைவர் பொறியாளர் ரமேஷ்பாபு மற்றும் நந்தகுமார்  ஆகியோர் பதவி பிரமாணம் செய்து வைத்தனர்.  பேசியட்  முன்னாள் மாநில செயலாளர் குழந்தைவேலு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். விழாவில் சங்க உறுப்பினர்கள் கட்டிட பொருட்கள் விற்பனையாளர்கள் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை தேனி மாவட்ட கட்டிட பொறியாளர்கள் சங்க முன்னாள் தலைவர் மோகன்ராம் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.  விழாவின் போது சங்கத்தில் நிறைவேற்றிய தீர்மானங்கள் வருமாறு:-  கட்டுமான பொருட்களின் விலை வாசிகளை கட்டுப்படுத்த ஒழுங்குமுறை ஆணையம் அமைக்க வேண்டும். அத்தியாவசியமான கட்டுமான பொருட்களான சிமெண்டு, கம்பி, ஜல்லி, எம்சன் போன்ற பொருட்களை அத்தியாவசிய பொருட்கள் சட்டத்...

குச்சனூர் அருகே மாநில அளவிலான கபடி போட்டி : 52 அணிகள் பங்கேற்றன

  தேனி, ஏப்.24 தேனி மாவட்டம், குச்சனூர் பேரூராட்சிக்கு உட்பட்ட கு.துரைச்சாமிபுரம் பகுதியில் உள்ள  அருள்மிகு அங்காளஈஸ்வரி அம்மன், கொத்தாள முத்தையா, ராமபுலி அய்யனார் திருக்கோவில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு DSP ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில் 24-ஆம் ஆண்டு மாநில அளவிலான மாபெரும் கபாடி போட்டி MMS மைதானத்தில் 22.4.2025 மற்றும் 23.4.2025 ஆகிய 2 நாட்கள் நடைபெற்றது.  இந்த போட்டியில் சேலம், திண்டுக்கல், தூத்துக்குடி, விருதுநகர், மதுரை, தேனி ஆகிய மாவட்டங்களில் இருந்து 52 அணிகள் பங்கேற்றன. இதில் இறுதி கபடி போட்டியினை சின்னமனூர் ஓம் சக்தி டெக்ஸ்டைல்ஸ் நிர்வாகி,  தொழிலதிபர் M.C.போஸ் வீரர்களுக்கு கை குலுக்கி துவக்கி வைத்தார். மேலும் கபடி போட்டி நடுவர்களுக்கு பொன்னாடை அணிவித்து கௌரவித்தார். இறுதி போட்டியில் வெற்றி பெற்று முதலிடம் பிடித்த அணிக்கு ரூ.40 ஆயிரம் ரொக்க பணமும், கோப்பையும் வழங்கப்பட்டது. 2-வது இடம் பிடித்த அணிக்கு ரூ.30 ஆயிரம் ரொக்க பணமும் கோப்பையும், 3-வது இடம் பிடித்த அணிக்கு ரூ.20 ஆயிரம் ரொக்க பணமும் கோப்பையும், 4-வது இடம் பிடித்த அணிக்கு ரூ.10 ஆயிரம் ரொக்க பணமும் கோப்பைய...

ஜம்மு-காஷ்மீரில் துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு இந்து எழுச்சி முன்னணியினர் புஷ்பாஞ்சலி😭

தேனி, ஏப்.23- ஜம்மு-காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டம், பஹல்காம் பகுதியில் 22.4.2025 அன்று பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கி சூட்டில் 30-க்கும் மேற்பட்ட அப்பாவி சுற்றுலாப் பயணிகள் உயிரிழந்தார்கள். இந்த கோரமான, மனிதாபிமான விரோத செயல், நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  உயிரிழந்த மக்களின் ஆன்மாக்கள் இறைவன் திருவடி நீழலில் சாந்தியடைய, தேனி மாவட்ட இந்து எழுச்சி முன்னணியின் சார்பில் தேனி அல்லிநகரம் நகராட்சி அலுவலகம் அருகில், வீரமரணமடைந்தவர்களின் படங்களை வைத்து, தீபம் ஏற்றி, மலர் தூவி, புஷ்பாஞ்சலி செலுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் இந்து எழுச்சி முன்னணி தேனி மாவட்ட தலைவர் இராமராஜ், மாவட்ட அமைப்பாளர் கோவிந்தராஜ், மாவட்ட செயலாளர் இராமமூர்த்தி, மாவட்ட பொருளாளர் செந்தில் குமார் மாவட்ட இணை அமைப்பாளர் செல்வ பாண்டியன் உள்பட பொறுப்பாளர்கள் பலர் கலந்து கொண்டு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். இதுபோன்று இன்னும் ஒரு அப்பாவி உயிரும் இழக்காதிருக்க, இந்நாட்டில் அமைதி மற்றும் மக்களின் பாதுகாப்பிற்காக நாம் அனைவரும் ஒன்றாக போராட வேண்டும் என்று இந்து எழுச்சி முன்னணி வலியுறுத்துகின்றது. .................