தேனி, ஏப்.25-
தேனி மாவட்ட கட்டிட பொறியாளர் சங்க புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா தேனி ஸ்ரீ தெய்வா ஹோட்டலில் 24.4.2025 அன்று நடைபெற்றது. விழாவில் தேனி மாவட்ட கட்டிட பொறியாளர் சங்க தலைவராக பொறியாளர் மெல்வின் பதவி ஏற்றார். அதுபோல செயலாளராக சையது பரூக் அப்துல்லா, பொருளாளராக ரவி பாரத் மற்றும் நிர்வாகிகள் பதவி ஏற்றுக்கொண்டனர்.
முன்னாள் மண்டல தலைவர் பொறியாளர் ரமேஷ்பாபு மற்றும் நந்தகுமார் ஆகியோர் பதவி பிரமாணம் செய்து வைத்தனர். பேசியட் முன்னாள் மாநில செயலாளர் குழந்தைவேலு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். விழாவில் சங்க உறுப்பினர்கள் கட்டிட பொருட்கள் விற்பனையாளர்கள் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை தேனி மாவட்ட கட்டிட பொறியாளர்கள் சங்க முன்னாள் தலைவர் மோகன்ராம் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.
விழாவின் போது சங்கத்தில் நிறைவேற்றிய தீர்மானங்கள் வருமாறு:- கட்டுமான பொருட்களின் விலை வாசிகளை கட்டுப்படுத்த ஒழுங்குமுறை ஆணையம் அமைக்க வேண்டும்.
அத்தியாவசியமான கட்டுமான பொருட்களான சிமெண்டு, கம்பி, ஜல்லி, எம்சன் போன்ற பொருட்களை அத்தியாவசிய பொருட்கள் சட்டத்தின் கீழ் கொண்டு வரவேண்டும்.
எம்.சாண்ட், பி.சாண்ட், ஜல்லி கற்கள் போன்றவைகள் ஒரு ஆண்டில் 3 முறை கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இது கண்டிக்கத்தக்கது. பொறியாளர்கள், ஒப்பந்ததாரர்கள் மற்றும் வீடு கட்டுபவர்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாய் இருக்கிறார்கள். விலையை குறைக்க மாவட்ட கலெக்டரிடம் மனு கொடுப்பது என்றும், விரைவில் தொடர் வேலை நிறுத்தம் அறிவிப்பது என்றும் முடிவு செய்யப்பட்டது.
அதுபோல தமிழக அரசு கட்டுமான பொறியாளர்களுக்கு பொறியாளர் கவுன்சில் அமைத்து பொறியாளர்களுக்கு தொழில் பாதுகாப்பு தர வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
..........................
நாகராஜ், தலைமை நிருபர்
Comments