தேனி, ஏப்.23-
ஜம்மு-காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டம், பஹல்காம் பகுதியில் 22.4.2025 அன்று பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கி சூட்டில் 30-க்கும் மேற்பட்ட அப்பாவி சுற்றுலாப் பயணிகள் உயிரிழந்தார்கள்.
இந்த கோரமான, மனிதாபிமான விரோத செயல், நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த மக்களின் ஆன்மாக்கள் இறைவன் திருவடி நீழலில் சாந்தியடைய, தேனி மாவட்ட இந்து எழுச்சி முன்னணியின் சார்பில் தேனி அல்லிநகரம் நகராட்சி அலுவலகம் அருகில், வீரமரணமடைந்தவர்களின் படங்களை வைத்து, தீபம் ஏற்றி, மலர் தூவி, புஷ்பாஞ்சலி செலுத்தப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் இந்து எழுச்சி முன்னணி தேனி மாவட்ட தலைவர் இராமராஜ், மாவட்ட அமைப்பாளர் கோவிந்தராஜ், மாவட்ட செயலாளர் இராமமூர்த்தி, மாவட்ட பொருளாளர் செந்தில் குமார் மாவட்ட இணை அமைப்பாளர் செல்வ பாண்டியன் உள்பட பொறுப்பாளர்கள் பலர் கலந்து கொண்டு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
இதுபோன்று இன்னும் ஒரு அப்பாவி உயிரும் இழக்காதிருக்க, இந்நாட்டில் அமைதி மற்றும் மக்களின் பாதுகாப்பிற்காக நாம் அனைவரும் ஒன்றாக போராட வேண்டும் என்று இந்து எழுச்சி முன்னணி வலியுறுத்துகின்றது.
............................
நாகராஜ், தலைமை நிருபர்
Comments