Skip to main content

Posts

அல்லிநகரம் வீரப்ப அய்யனார் மலைக்கோவில் சித்திரை திருவிழாவில்; இந்து எழுச்சி முன்னணி சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம்

  தேனி, ஏப்.8- தேனி மாவட்ட இந்து எழுச்சி முன்னணி வார வழிபாடு கூட்டம் 6.4.2025 (ஞாயிற்றுக்கிழமை)  அன்று இந்து எழுச்சி முன்னணி அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு தேனி நகர பொதுச் செயலாளர் முத்துராஜ் தலைமை தாங்கினார்.  தேனி நகர துணை செயலாளர் சுரேஷ் முன்னிலை வகித்தார்.  கூட்டத்தினை மாவட்ட தலைவர் இராமராஜ் வழிநடத்தினார். கூட்டத்தில் இந்து எழுச்சி முன்னணி நிறுவனர் பொன் ரவி, மாவட்ட அமைப்பாளர் கோவிந்தராஜ், மாவட்ட செயலாளர் இராமமூர்த்தி, மாவட்ட பொருளாளர் செந்தில்குமார் உள்பட பொறுப்பாளர்கள் பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் வருகின்ற சித்திரை முதல் தேதியில் தேனி அல்லிநகரம்  ஸ்ரீ வீரப்ப அய்யனார் கோவிலின் சித்திரை திருவிழாவை முன்னிட்டு இந்து எழுச்சி முன்னணி சார்பில் கோவிலுக்கு வந்து செல்லும் அனைத்து பக்தர்களுக்கும் அன்னதானம் வழங்க வேண்டும். அதுபோல வீரப்ப அய்யனார் மலைக்கோவிலுக்கு செல்லும் பாதை குண்டு குழியுமாக இருப்பதால்,  நேர்த்தி கடன் செலுத்தும் பக்தர்கள் பாதயாத்திரையாக வரும் போது சிரமப்படக்கூடும். எனவே குண்டும் குழியுமாக உள்ள சாலையை சரிசெய்து தர கூட்டத்தின் வாயிலாக த...

தேனியில் மின்நுகர்வோர் குறைதீர்க்கும் சிறப்பு முகாம்

தேனி, ஏப்.6- தமிழ்நாடு மின்சார வாரிய மின் பகிர்மான கழகத்தின் தேனி கோட்டத்தின் சார்பில் மின்நுகர்வோருக்கான குறைதீர்க்கும் சிறப்பு முகாம் தேனி கோட்ட மின் பகிர்மான செயற் பொறியாளர் அலுவலக வளாகத்தில் 5.4.2025 அன்று நடைபெற்றது.  முகாமிற்கு தேனி வட்ட மேற்பார்வை பொறியாளர் லட்சுமி, தேனி மின்  பகிர்மான கோட்ட செயற் பொறியாளர் பிரகலாதன் ஆகியோர் தலைமை தாங்கினர். இந்த முகாமில் தேனி மின் பகிர்மான கோட்ட உதவி செயற் பொறியாளர்கள், உதவி பொறியாளர்கள், அலுவலர்கள் மின்வாரிய ஊழியர்கள் மற்றும் தேனி மின் பகிர்மான கோட்டத்தில் உள்ள தேனி, போடி மற்றும் ராசிங்காபுரம் உபகோட்டங்களை சேர்ந்த மின் நுகர்வோர்கள் கலந்து கொண்டனர்.  முகாமின் போது மின் கணக்கீடு குறைபாடு, பழுதடைந்த மின் மீட்டர், பழுதடைந்த மின் கம்பங்கள், குறைந்த மின்னழுத்தம் ஆகிய குறைபாடுகள் தொடர்பாக 40-க்கும் மேற்பட்ட மனுக்கள் வந்தது. இதில் 3 மனுக்களுக்கு முகாம் நடைபெற்ற அன்றே தீர்வு காணப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.  ............................ நாகராஜ், தலைமை நிருபர்  

தேனியில் காங்கிரஸ் கட்சியினர் கருப்பு கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம்

தேனி, ஏப்.6- தேனி மாவட்ட காங்கிரஸ் கட்சியின் சார்பில் கருப்பு கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம் தேனியில் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு தேனி மாவட்ட காங்கிரஸ் தலைவர் கூடலூர் முருகேசன் தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் அப்பு என்ற பாலசுப்பிரமணியன், தேனி நகர தலைவர் கோபிநாத், தேனி மாவட்ட மகிளா காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணவேணி சக்திவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  ஆர்ப்பாட்டத்தில் தேனி வட்டார தலைவர் முருகன், பெரியகுளம் வட்டார தலைவர் ஹம்சா முகமது, சின்னமனூர் வட்டார தலைவர் ஜீவா, மாநில பொதுக்குழு உறுப்பினர் முனியாண்டி, மாவட்ட செயலாளர் அபுதாகிர், தேனி அல்லிநகரம் நகராட்சி கவுன்சிலர் நாகராஜ் உள்பட காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தின் போது சிறுபான்மையின மக்களுக்கு எதிராக வக்பு திருத்த சட்டத்தை அமல்படுத்தியதை கண்டித்தும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை முடக்க நினைப்பதுடன், இத்திட்டத்தில் தமிழ்நாட்டிற்கு தர வேண்டிய ரூ.4,034 கோடியை தராமல் மக்களின் வாழ்வாதாரத்தை சீர்குலைக்க நினைக்கும் மத்திய பா.ஜ.க அரசை கண்டித்தும், பிரதமர் நரேந்திர மோடி தமிழ்நாட்டிற்கு வருவ...

நாடார் சரசுவதி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பணி நியமன ஆணை வழங்கும் விழா

  தேனி, ஏப்.5- தேனி மேலப்பேட்டை இந்து நாடார்கள் உறவின்முறை நாடார் சரசுவதி கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் "கல்வியோடு தன்திறனை மேம்படுத்திக் கொண்டு பல்வேறு துறைகளிலும் உங்களை தடம் பதியுங்கள்" என்பதை தாரக மந்திரமாக கொண்டு செயல்படும் "வேலைவாய்ப்பு துறை” சார்பில் 4.4.2025 வெள்ளிக்கிழமை அன்று பல்வேறு நிறுவனங்களில் பணிநியமன ஆணைகள் பெற்று மகுடம் சூடிய மாணவியர்களுக்கு "பணிநியமன ஆணை வழங்கும் விழா" கல்லூரியின் கர்மவீரர் காமராஜர் கலையரங்கில் (K3) நடைபெற்றது. விழாவிற்கு தேனி மேலப்பேட்டை இந்து நாடார்கள் உறவின்முறை தலைவர் ராஜமோகன் தலைமை தாங்கினார். உறவின்முறை உபதலைவர் கணேஷ், பொதுச்செயலாளர் ஆனந்தவேல், பொருளாளர் பழனியப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரியின் செயலாளர் காசி பிரபு வரவேற்புரையாற்றினார். அவர்தம் உரையில், * வாய்ப்புகளை பயன்படுத்தினால் வாழ்க்கையை வளமாக்கலாம். படிப்போடு திறனை மேம்படுத்தி வேலைவாய்ப்பினை பெறும் பயிற்சியைக் கற்றுக் கொடுக்கும் இணையதளங்கள் பற்றியும் எடுத்துரைத்தார். கற்கும் கல்வியின் மதிப்பு அவர்கள் அடையும் வேலையை பொருத்தே அமையும். படிக்கும் கல்வி வெற...

நாடார் சரசுவதி பொறியியல் கல்லூரியில் பணிநியமன ஆணை வழங்கும் விழா

தேனி, ஏப்.3- தேனி நாடார் சரசுவதி பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் பணிநியமன ஆணை வழங்கும் விழா 2.4.2025 அன்று நடைபெற்றது. விழாவிற்கு தேனி மேலப்பேட்டை இந்து நாடார்கள் உறவின்முறையின் தலைவர் ராஜமோகன் தலைமை தாங்கினார். உறவின்முறையின் உபதலைவர் கணேஷ். பொதுச்செயலாளர் ஆனந்தவேல், பொருளாளர் பழனியப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரியின் செயலாளர்கள் ராஜ்குமார், மகேஸ்வரன், இணைச்செயலாளர் நவீன்ராம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். விழாவில் கல்லூரியின் முதல்வர் டாக்டர்.மதளைசுந்தரம் வரவேற்புரையாற்றி, கல்லூரியின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறையின் மூலம் பன்னாட்டு நிறுவனத்துடன் சிறந்த பயிற்சி மற்றும் வேலைவாய்ப்பு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டு பன்னாட்டு நிறுவனங்களின் மென்பொருள் கட்டமைப்புகளுடன் கூடிய பயிற்சியை மாணவர்களுக்கு அளித்து வருகிறதென்றும். புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலமாக இன்டெர்ன்ஷிப் மற்றும் வேலைவாய்ப்பு பெற ஆக்கபூர்வமான முறையில் பயிற்சிகள் மற்றும் வேலைவாய்ப்பு பெறுவது மாணவர்களிடையே விளக்கினார். மேலும் கல்லூரியின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சிதுறை பேராசிரியர்கள் அனைத்து துற...

முறைகேடு செயல்களில் ஈடுபட்டு வரும்: ஊராட்சி செயலாளர் மீது நடவடிக்கை எடுக்க கோரி தேனி கலெக்டரிடம் மனு

  தேனி, ஏப்.3 - தேனி மாவட்ட கலெக்டர் ரஞ்ஜீத் சிங்கிடம் பா.ஜ.க நெசவாளர் பிரிவு மாவட்ட செயலாளர் முனியாண்டி தலைமையில் நிர்வாகிகள் சிலர் புகார் மனு கொடுத்துள்ளனர். அந்த மனுவில் கூறப்பட்டிருந்ததாவது,  தேனி மாவட்டம், பெரியகுளம் தாலுகா, பெரியகுளம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட, சில்வார்பட்டி ஊராட்சியில் ஊராட்சி மன்ற செயலாளராக பணியாற்றி வரும் வீரபத்திரன் என்பவர் பணியில் சேர்ந்தது முதல் தற்போது வரை தொடர்ந்து பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டு அரசு பணங்களை கையாடல் செய்து வருகின்றார்.  இவற்றில் உச்சகட்டமாக கல்லூரியில் படித்து வரும் தனது மகன் யோக பாலாஜி என்பவரது பெயரிலும், ஊராட்சி மன்ற அலுவலகத்தில் கணினி பிரிவில் பணியாற்றி வரும் சித்ரா மற்றும் பல்வேறு நபர்களது பெயர்களில் போலியாக கணக்கு எழுதி ஊராட்சி மன்ற வளர்ச்சிக்கு வரும் பணங்களை கையாடல் செய்துள்ளார்.  இப்படி தொடர்ந்து முறைகேடு செயல்களில் ஈடுபட்டு வரும் சில்வார்பட்டி ஊராட்சி மன்ற செயலர் வீரபத்திரன் என்பவர் மீது துறை ரீதியாக விசாரணை செய்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென ஊராட்சி பொதுமக்கள் சார்பாகவும், பா.ஜ.க சார்பாகவும்  க...

தமிழ்நாட்டில் பாராளுமன்ற தொகுதி மறுவரையறை; தற்போதைய மக்கள் தொகை அடிப்படையில் செய்தால் எம்.பி.-க்கள் எண்ணிக்கை குறைந்து விடும்: தேனி எம்.பி., தங்க தமிழ்ச்செல்வன் பேட்டி

தேனி, மார்ச்.31- தேனி தி.மு.க வடக்கு மாவட்ட செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன் எம்.பி., 30.3.2025 அன்று தேனியில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறுகையில்,  இந்தியாவில் மக்கள் தொகை அடிப்படையிலான பாராளுமன்ற தொகுதி மறுவரையறை என்பதில் தமிழகத்தில் 1971-ம் ஆண்டு மக்கள் தொகை அடிப்படையில் மறுவரையறை செய்தால் எம்.பி.-க்கள் எண்ணிக்கை கூடும். ஆனால் தற்போதைய மக்கள் தொகை அடிப்படையில் மறு வரையறை செய்தால் எம்.பி.-க்கள் எண்ணிக்கை குறையும். அதனால் தான் தி.மு.க வாதம் செய்து வருகிறது. இந்த மறுவரையறை விவகாரத்தில் பிரதமரோ, உள்துறை அமைச்சர் அமித்ஷாவோ பாராளுமன்றத்தில் பதில் கூற வேண்டியது தானே. ஏன் பேசவில்லை. ஜனநாயக முறைப்படி தான் நடக்கும் என கூறலாமே. தென் மாநில கூட்டு நடவடிக்கை குழுவில் தமிழ்நாடு, தெலுங்கானா, பஞ்சாப், ஒடிசா, பஞ்சாப் போன்ற மாநிலங்களில் இடம் பெற்றுள்ளன. இதில் தற்போதைய மக்கள் தொகை விகிதாச்சாரப்படி பாதிக்கப்படக்கூடிய மாநிலங்களுக்கு 1971-ம் ஆண்டு மக்கள் தொகை அடிப்படையிலே மறுவரையறை செய்யலாம். அன்றைய காலகட்டத்தில் வட மாநிலங்களிலும், தென் மாநிலங்களிலும் மக்கள் தொகை விகிதாச்சாரம் ஒரே அளவில் இருந்தது....

நாடார் சரசுவதி பொறியியல் கல்லூரியில் 11-ம் ஆண்டு பட்டமளிப்பு விழா

தேனி, மார்ச்.30 - தேனி அருகே உள்ள நாடார் சரசுவதி பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் 11-ம் ஆண்டு பட்டமளிப்பு விழா 29.3.2025 அன்று நடைபெற்றது. விழாவிற்கு தேனி மேலப்பேட்டை இந்து நாடார்கள் உறவின்முறை தலைவர் ராஜமோகன் தலைமை தாங்கினார். உபதலைவர் கணேஷ், பொதுச்செயலாளர் ஆனந்தவேல், பொருளாளர் பழனியப்பன், கல்லூரி செயலாளர்கள் ராஜ்குமார், மகேஸ்வரன், இணைச்செயலாளர் நவீன்ராம் ஆகியோர்கள் முன்னிலை வகித்தனர்.  கல்லூரி முதல்வர் மதளைசுந்தரம் வரவேற்புரையாற்றி கல்லூரியின் கடந்த ஆண்டின் செயல்பாடுகள் மற்றும் சாதனைகள் பற்றி எடுத்துரைத்து பட்டதாாரி மாணவர்களுக்கு வாழ்த்துரை வழங்கினார். விழாவில் மைசூர் யூனிட் டெக்னாலஜி இன்போசிஸ் -இணைத்தலைவர் பிரதீப் சிவகாமிநாதன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் மூலம் உலகம் எவ்வாறு இயங்குகின்றது என்றும், எதிர்காலத்தில் மனிதர்களின் வாழ்க்கை செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் மூலமே பயணிக்க கூடிய சமுதாய சூழல் உருவாகும் என்றும், UPI போன்ற நிதி சார்ந்த தொழில்நுட்பத்தின் மூலம் பொருளாதார வளர்ச்சி, மென்பொருள் தொழில்நுட்பத்தின் முன்னேற்றத்தி...

தேனி யூனியன், கோவிந்தநகரம் பேருந்து நிலையத்திற்குள் பஸ்கள் வந்து செல்ல வேண்டும்: கிராம சபை கூட்டத்தில் வலியுறுத்தி தீர்மானம்

தேனி, மார்ச்.29- தேனி மாவட்டத்தில் உள்ள 130 ஊராட்சிகளில் உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு சிறப்பு கிராம சபை கூட்டம் 29.3.2025 அன்று நடைபெற்றது. இவற்றில் தேனி ஊராட்சி ஒன்றியம், கோவிந்தநகரம் ஊராட்சியில் சிறப்பு கிராம சபை கூட்டம் தேனி யூனியன் உதவி பொறியாளர் பிரகதீஸ்வரன் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை உதவி செயற்பொறியாளர் வெங்கடேசன், ஊராட்சி செயலாளர் செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் கிராம மக்கள் பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தின் போது கோவிந்தநகரம் பேருந்து நிலையத்திற்குள் பஸ்கள் வந்து செல்ல வேண்டும் என்பன உள்பட 15 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இதேபோன்று தேனி யூனியன் ஊஞ்சாம்பட்டி ஊராட்சியில் கிராம சபை கூட்டம் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பேபி தலைமையில் நடைபெற்றது. ஊராட்சி செயலாளர் பாலச்சந்தர் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் கிராம மக்கள் பலர் கலந்து கொண்டனர்.  அரண்மனைபுதூர் ஊராட்சியில் கிராம சபை கூட்டம் தேனி யூனியன் உதவி பொறியாளர் சுபா தலைமையில் நடைபெற்றது.  ஊராட்சி செயலாளர் பாண்டி முன்னிலை வகித்தார். கூட்டத்தில் கிராம மக்கள் பலர் கலந்து கொ...

தேனி நாடார் சரசுவதி பொறியியல் கல்லூரியில் 15-வது கல்லூரி ஆண்டு விழா

தேனி, மார்ச்.29- தேனி நாடார் சரஸ்வதி பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் 15 -வது கல்லூரி ஆண்டு விழா 28.3.2025 அன்று நடைபெற்றது. விழாவிற்கு தேனி மேலப்பேட்டை இந்து நாடார்கள் உறவின்முறை தலைவர் ராஜமோகன் தலைமை தாங்கினார். உறவின்முறை  உபதலைவர் கணேஷ், பொதுச்செயலாளர் ஆனந்தவேல், பொருளாளர் பழனியப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  கல்லூரி செயலாளர் ராஜ்குமார் வரவேற்றார். கல்லூரி செயலாளர் மகேஸ்வரன் வாழ்த்துரை வழங்கினார். கல்லூரி முதல்வர் மதளைசுந்தரம்  கல்லூரியின் ஆண்டு அறிக்கையினை வாசித்தார். விழாவில் மதுரை அண்ணா பல்கலைகழக மண்டலம் டீன் டாக்டர்.லிங்கதுரை சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு கல்லூரியின் ஆண்டு மலரை வெளியிட்டார். இதனைத்தொடர்ந்து அவர் பேசுகையில், கல்வி ஒன்று மட்டுமே சமுதாய வாழ்க்கை முன்னேற்றம், பொருளாதார முன்னேற்றம், தனிமனித ஒழுக்கம் மற்றும் ஆளுமை திறனை அளிக்கும் என்றும், மாணவர்கள் படிக்கும் பொழுதே தங்களுடைய அறிவை மேம்படுத்துவதன் மூலம் வாழ்க்கையில் வெற்றியடைய முடியுமென்றும், அரசு உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி படிப்புகளுக்கு வழங்குகின்ற உதவித் தொகையினை சரியாக பயன்படுத்தி ...