அல்லிநகரம் வீரப்ப அய்யனார் மலைக்கோவில் சித்திரை திருவிழாவில்; இந்து எழுச்சி முன்னணி சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம்
தேனி, ஏப்.8-
தேனி மாவட்ட இந்து எழுச்சி முன்னணி வார வழிபாடு கூட்டம் 6.4.2025 (ஞாயிற்றுக்கிழமை) அன்று இந்து எழுச்சி முன்னணி அலுவலகத்தில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு தேனி நகர பொதுச் செயலாளர் முத்துராஜ் தலைமை தாங்கினார். தேனி நகர துணை செயலாளர் சுரேஷ் முன்னிலை வகித்தார்.
கூட்டத்தினை மாவட்ட தலைவர் இராமராஜ் வழிநடத்தினார். கூட்டத்தில் இந்து எழுச்சி முன்னணி நிறுவனர் பொன் ரவி, மாவட்ட அமைப்பாளர் கோவிந்தராஜ், மாவட்ட செயலாளர் இராமமூர்த்தி, மாவட்ட பொருளாளர் செந்தில்குமார் உள்பட பொறுப்பாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் வருகின்ற சித்திரை முதல் தேதியில் தேனி அல்லிநகரம் ஸ்ரீ வீரப்ப அய்யனார் கோவிலின் சித்திரை திருவிழாவை முன்னிட்டு இந்து எழுச்சி முன்னணி சார்பில் கோவிலுக்கு வந்து செல்லும் அனைத்து பக்தர்களுக்கும் அன்னதானம் வழங்க வேண்டும்.
அதுபோல வீரப்ப அய்யனார் மலைக்கோவிலுக்கு செல்லும் பாதை குண்டு குழியுமாக இருப்பதால், நேர்த்தி கடன் செலுத்தும் பக்தர்கள் பாதயாத்திரையாக வரும் போது சிரமப்படக்கூடும். எனவே குண்டும் குழியுமாக உள்ள சாலையை சரிசெய்து தர கூட்டத்தின் வாயிலாக தேனி அல்லிநகரம் நகராட்சியை வலியுறுத்துகின்றோம் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
...........................
Comments