தேனி யூனியன், கோவிந்தநகரம் பேருந்து நிலையத்திற்குள் பஸ்கள் வந்து செல்ல வேண்டும்: கிராம சபை கூட்டத்தில் வலியுறுத்தி தீர்மானம்
தேனி, மார்ச்.29-
தேனி மாவட்டத்தில் உள்ள 130 ஊராட்சிகளில் உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு சிறப்பு கிராம சபை கூட்டம் 29.3.2025 அன்று நடைபெற்றது. இவற்றில் தேனி ஊராட்சி ஒன்றியம், கோவிந்தநகரம் ஊராட்சியில் சிறப்பு கிராம சபை கூட்டம் தேனி யூனியன் உதவி பொறியாளர் பிரகதீஸ்வரன் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை உதவி செயற்பொறியாளர் வெங்கடேசன், ஊராட்சி செயலாளர் செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் கிராம மக்கள் பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தின் போது கோவிந்தநகரம் பேருந்து நிலையத்திற்குள் பஸ்கள் வந்து செல்ல வேண்டும் என்பன உள்பட 15 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
இதேபோன்று தேனி யூனியன் ஊஞ்சாம்பட்டி ஊராட்சியில் கிராம சபை கூட்டம் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பேபி தலைமையில் நடைபெற்றது. ஊராட்சி செயலாளர் பாலச்சந்தர் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் கிராம மக்கள் பலர் கலந்து கொண்டனர்.
அரண்மனைபுதூர் ஊராட்சியில் கிராம சபை கூட்டம் தேனி யூனியன் உதவி பொறியாளர் சுபா தலைமையில் நடைபெற்றது. ஊராட்சி செயலாளர் பாண்டி முன்னிலை வகித்தார். கூட்டத்தில் கிராம மக்கள் பலர் கலந்து கொண்டனர்.
கொடுவிலார்பட்டி ஊராட்சியில் கிராம சபை கூட்டம் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பானுமதி தலைமையில் நடைபெற்றது. ஊராட்சி செயலாளர் வேல்முருகன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் கிராம மக்கள் பலர் கலந்து கொண்டனர்.
நாகலாபுரம் ஊராட்சியில் கிராம சபை கூட்டம் ஊராட்சி செயலாளர் சுருளி தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் கிராம மக்கள் பலர் கலந்து கொண்டனர்.
ஸ்ரீரெங்கபுரம் ஊராட்சியில் கிராம சபை கூட்டம் தேனி யூனியன் ஓவர்சியர் காவ்யா தலைமையில் நடைபெற்றது ஊராட்சி செயலாளர் ரகுநாத் முன்னிலை வகித்தார் கூட்டத்தில் கிராம மக்கள் பலர் கலந்து கொண்டனர்.
அதுபோல காட்டுநாயக்கன்பட்டி ஊராட்சியில் கிராம சபை கூட்டம் தேனி யூனியன் தனி அலுவலர் மைதிலி தலைமையில் நடைபெற்றது ஊராட்சி செயலாளர் பாண்டியன் முன்னிலை வகித்தார் கூட்டத்தில் கிராம மக்கள் பலர் கலந்து கொண்டனர்.
இதேபோன்று பெரியகுளம் ஊராட்சி ஒன்றியம், வடபுதுப்பட்டி ஊராட்சியில் கிராம சபை கூட்டம் யூனியன் உதவி பொறியாளர் அஜய் தலைமையில் நடைபெற்றது. ஊராட்சி செயலாளர் மணிகண்டன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் கிராம மக்கள் பலர் கலந்து கொண்டனர். அதுபோல தேனி மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் ஜல் ஜீவன் திட்டம் குறித்து விவாதிக்கப்பட்டது.
நாகராஜ், தலைமை நிருபர்
...........................
Comments