Skip to main content

தேனியில் மின்நுகர்வோர் குறைதீர்க்கும் சிறப்பு முகாம்

தேனி, ஏப்.6-

தமிழ்நாடு மின்சார வாரிய மின் பகிர்மான கழகத்தின் தேனி கோட்டத்தின் சார்பில் மின்நுகர்வோருக்கான குறைதீர்க்கும் சிறப்பு முகாம் தேனி கோட்ட மின் பகிர்மான செயற் பொறியாளர் அலுவலக வளாகத்தில் 5.4.2025 அன்று நடைபெற்றது. 
முகாமிற்கு தேனி வட்ட மேற்பார்வை பொறியாளர் லட்சுமி, தேனி மின்  பகிர்மான கோட்ட செயற் பொறியாளர் பிரகலாதன் ஆகியோர் தலைமை தாங்கினர்.
இந்த முகாமில் தேனி மின் பகிர்மான கோட்ட உதவி செயற் பொறியாளர்கள், உதவி பொறியாளர்கள், அலுவலர்கள் மின்வாரிய ஊழியர்கள் மற்றும் தேனி மின் பகிர்மான கோட்டத்தில் உள்ள தேனி, போடி மற்றும் ராசிங்காபுரம் உபகோட்டங்களை சேர்ந்த மின் நுகர்வோர்கள் கலந்து கொண்டனர். 

முகாமின் போது மின் கணக்கீடு குறைபாடு, பழுதடைந்த மின் மீட்டர், பழுதடைந்த மின் கம்பங்கள், குறைந்த மின்னழுத்தம் ஆகிய குறைபாடுகள் தொடர்பாக 40-க்கும் மேற்பட்ட மனுக்கள் வந்தது. இதில் 3 மனுக்களுக்கு முகாம் நடைபெற்ற அன்றே தீர்வு காணப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. 
............................

நாகராஜ், தலைமை நிருபர் 




Comments