Skip to main content

தேனியில் காங்கிரஸ் கட்சியினர் கருப்பு கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம்

தேனி, ஏப்.6-

தேனி மாவட்ட காங்கிரஸ் கட்சியின் சார்பில் கருப்பு கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம் தேனியில் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு தேனி மாவட்ட காங்கிரஸ் தலைவர் கூடலூர் முருகேசன் தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் அப்பு என்ற பாலசுப்பிரமணியன், தேனி நகர தலைவர் கோபிநாத், தேனி மாவட்ட மகிளா காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணவேணி சக்திவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 
ஆர்ப்பாட்டத்தில் தேனி வட்டார தலைவர் முருகன், பெரியகுளம் வட்டார தலைவர் ஹம்சா முகமது, சின்னமனூர் வட்டார தலைவர் ஜீவா, மாநில பொதுக்குழு உறுப்பினர் முனியாண்டி, மாவட்ட செயலாளர் அபுதாகிர், தேனி அல்லிநகரம் நகராட்சி கவுன்சிலர் நாகராஜ் உள்பட காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தின் போது சிறுபான்மையின மக்களுக்கு எதிராக வக்பு திருத்த சட்டத்தை அமல்படுத்தியதை கண்டித்தும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை முடக்க நினைப்பதுடன், இத்திட்டத்தில் தமிழ்நாட்டிற்கு தர வேண்டிய ரூ.4,034 கோடியை தராமல் மக்களின் வாழ்வாதாரத்தை சீர்குலைக்க நினைக்கும் மத்திய பா.ஜ.க அரசை கண்டித்தும், பிரதமர் நரேந்திர மோடி தமிழ்நாட்டிற்கு வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் கையில் கருப்பு கொடி ஏந்தி கண்டன கோஷங்கள் எழுப்பினார்கள். முடிவில் மாவட்ட செயலாளர் சம்சுதீன் நன்றி கூறினார். 
.........................

நாகராஜ், தலைமை நிருபர் 





Comments