Skip to main content

Posts

மத்திய, மாநில அரசுகளை கண்டித்து தேனியில் வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

தேனி, டிச.11- தமிழ்நாடு அனைத்து வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தேனி மாவட்டத்தின் சார்பில் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் 11.12.2024 அன்று தேனி பங்களா மேடு பகுதியில் நடைபெற்றது.  ஆர்ப்பாட்டத்திற்கு தேனி மாவட்ட தலைவர் செல்வகுமார் தலைமை தாங்கினார். மாநில துணைத்தலைவர் பெருமாள், மாநில இணைச்செயலாளர் காளிமுத்து, தேனி நகர முதன்மை துணைத்தலைவர் பிரபு, தேனி நகர ஒருங்கிணைப்பாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் திருவரங்கப்பெருமாள் வரவேற்றார். ஆர்ப்பாட்டத்தில் வணிகர் சங்க சட்ட ஆலோசகர் வக்கீல் எம்.கே.எம் முத்துராமலிங்கம், சங்க மாவட்ட பி.ஆர்.ஓ., வேல்முருகன், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சர்புதீன், மாவட்ட துணைத்தலைவர் முருகதாஸ், மாவட்ட இணை செயலாளர் விபுகுமார், மாவட்ட கவுரவ தலைவர் ஏ.எம்.ஆர்.ஆர். சந்திரகுமார் ஆகியோர் ஆர்ப்பாட்டத்திற்கான நோக்கங்கள் குறித்து விளக்கி பேசினார்கள். ஆர்ப்பாட்டத்தில் தேனி மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் நிர்வாகிகள், வர்த்தக சங்க நிர்வாகிகள் உள்பட பல்வேறு சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.  ஆர்ப்பாட்டத்தி...

தேனியில் அம்பேத்கர் நினைவு தினத்தை முன்னிட்டு 300 பயனாளிகளுக்கு ரூ.3.91 கோடி மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள்: அமைச்சர் ஐ.பெரியசாமி வழங்கினார்

தேனி, டிச.6- தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின்படி, தேனி மாவட்டம், தேனி-அல்லிநகரம் நகராட்சிக்குட்பட்ட வேலுச்சாமி சீனியம்மாள் மண்டபத்தில் டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் அவர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி பல்வேறு துறைகளின் சார்பில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் பிரிவை சார்ந்த 300 பயனாளிகளுக்கு ரூ.3.91 கோடி மதிப்பீட்டிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளை மாவட்ட கலெக்டர்  ஆர்.வி.ஷஜீவனா முன்னிலையில் 6.12.2024 அன்று வழங்கினார். இந்நிகழ்வில் தேனி பாராளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன், சட்டமன்ற உறுப்பினர்கள்  சரவணக்குமார் (பெரியகுளம்), ஆ.மகாராஜன் (ஆண்டிபட்டி), மாவட்ட வருவாய் அலுவலர் த/இரா.ஜெயபாரதி, ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் அபிதா ஹனீப், பெரியகுளம் சார் ஆட்சியர் ரஜத் பீடன், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் சசிகலா, தேனி அல்லிநகரம் நகராட்சி நகர் மன்ற தலைவர் ரேணுபிரியா பாலமுருகன், தேனி ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் ம.சக்கரவர்த்தி, தேனி நகராட்சி நகர் மன்ற துணைத்தலைவர் செல்வம், தமிழ்நாடு மீனவர் வாரியம் உறு...

தேனி நாடார் சரசுவதி நர்சரி அன்டு பிரைமரி பள்ளியில் அறிவியல் கண்காட்சி

தேனி, டிச.4- தேனி நாடார் சரசுவதி நர்சரி அன்டு பிரைமரி பள்ளியில் அறிவியல் கண்காட்சி 3.12.2024 அன்று நடைபெற்றது. இந்த கண்காட்சியை தேனி மேலப்பேட்டை இந்து நாடார்கள் உறவின்முறை தலைவர் ராஜமோகன் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். உறவின்முறை உபதலைவவர் கணேஷ், பொதுச்செயலாளர் ஆனந்தவேல், பொருளாளர் பழனியப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  இந்நிகழ்ச்சியில் நாடார் சரசுவதி நர்சரி அன்டு பிரைமரி பள்ளியின் செயலாளர் பிரபாகரன், இணைச்செயலாளர்கள் பாண்டிக்குமார், கமலக்கண்ணன், ஆட்சிமன்றக்குழு உறுப்பினர்கள், அனைத்து நிறுவனங்களின் நிர்வாகக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.  இந்த கண்காட்சியில் மாணவ, மாணவிகளின் அறிவியல் சார்ந்த படைப்புகள் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தது. மேலும் மாணவ, மாணவிகள் கலைநிகழ்ச்சிகள் மூலம் அறிவியல் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதனை உறவின்முறை நிர்வாகிகள் பார்வையிட்டு மாணவ குழந்தைகளுக்கு பாராட்டுகளை தெரிவித்தனர்.   இந்த அறிவியல் கண்காட்சியை நாடார் சரசுவதி அனைத்து கல்வி நிறுவனங்களிலும் இருந்து மாணவ, மாணவியர்கள், ஆசிரியர்கள் வந்து பார்வையிட்டனர். இதற்கான ஏற்பாடுகளை நர்சரி அன்டு...

தேனியில், வனத்துறை மீது நடவடிக்கை எடுக்க கோரி அகமலை ஊராட்சி விவசாயிகள் உண்ணாவிரத போராட்டம்

தேனி, டிச.4- தேனி மாவட்டம், போடி தாலுகா, அகமலை ஊராட்சி  பகுதியில் உள்ள கிராம விவசாயிகள் வனத்துறை மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க கோரி தமிழக விவசாயிகள் சங்க தேனி மாவட்ட இளைஞரணி தலைவர் வெற்றிவேல் தலைமையில் விவசாயிகள் தேனி பங்களா மேடு பகுதியில் 3.12.2024 அன்று உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.  இந்த போராட்டத்தில் அகமலை ஊராட்சி பகுதியில் உள்ள 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர் இந்த போராட்டம் குறித்து தமிழக முதலமைச்சருக்கு கோரிக்கை மனு ஒன்று அனுப்பி உள்ளனர். அந்த மனுவில் கூறப்பட்டிருந்ததாவது, தேனி மாவட்டம், போடிநாயக்கனூர் தாலுகா, அகமலை ஊராட்சியில் 1000-க்கும் மேற்பட்ட விவசாயிகள் உள்ள அகமலை, அண்ணாநகர், ஊரடி, ஊத்துக்காடு, கரும்பாறை, சொக்கன் அலை, பெரியமூங்கில், சின்னமூங்கில், பட்டூர், படப்பம்பாறை, சுப்பிரமணியபுரம், பேச்சியம்மன் சோலை, வாழைமாத்தொழு, எருமைதொழு, மருதையனூர், சூழ்துகாடு, அலங்காரம், கானமஞ்சி, டார்சை, முத்துக்கோம்பை, உலக்குரட்டி, கொத்தமல்லி காடு ஆகிய கிராம 400 விவசாயிகளுக்கு வனத்துறை மூலம் 15 நாட்களில் விவசாய நிலத்தில் இருந்து வெளியேற நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள...

தேனி மாவட்டத்தில் 130 ஊராட்சிகளில் உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு கிராம சபை கூட்டம்

தேனி, நவ.23- தேனி மாவட்டத்தில் உள்ள 130 ஊராட்சிகளில் உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு கிராம சபை கூட்டம் 23.11.2024 அன்று சனிக்கிழமை நடைபெற்றது. இதில் தேனி ஊராட்சி ஒன்றியம் அரண்மனைப்புதூர் ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் பிச்சை தலைமை தாங்கினார். ஊராட்சி செயலாளர் பாண்டி முன்னிலை வகித்தார். கூட்டத்தில் தேனி ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள் உள்பட பல்வேறு அரசுத்துறை அலுவலர்கள், கிராம பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர். அதுபோல கொடுவிலார்பட்டி ஊராட்சியில் கிராம சபை கூட்டம் ஊராட்சி மன்ற தலைவர் ஈஸ்வரி மாரிமுத்து தலைமையில், ஊராட்சி செயலாளர் வேல்முருகன் முன்னிலையில் நடைபெற்றது. நாகலாபுரம் ஊராட்சியில் கிராம சபை கூட்டம் ஊராட்சி மன்ற தலைவர் ஞானமணி பரமசிவம் தலைமையில், ஊராட்சி செயலாளர் சுருளி முன்னிலையில் நடைபெற்றது. ஸ்ரீரெங்கபுரம் ஊராட்சியில் கிராம சபை கூட்டம் ஊராட்சி மன்ற தலைவர் பெருமாள் தலைமையில், ஊராட்சி செயலாளர் ரகுநாத் முன்னிலையில் நடைபெற்றது. கூட்டத்தில் கிராம பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.  அதுபோல காட்டுநாயக்கன்பட்டி ஊராட்சியில் கிராம சபை கூட்டம் ஊராட்சி மன்ற தலைவர் ரம...

தேனியில் போதைக்கு எதிரான விழிப்புணர்வு கருத்தரங்கம்: முன்னாள் தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு தலைமையில் நடந்தது

தேனி, நவ.23- தேனி மாவட்டம், வடபுதுப்பட்டியில் உள்ள நாடார் சரஸ்வதி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் போதைக்கு எதிரான விழிப்புணர்வு கருத்தரங்கம் தமிழ்நாடு அரசு முன்னாள் தலைமைச்செயலாளர் முனைவர் வெ.இறையன்பு தலைமையில், தேனி மாவட்ட கலெக்டர்  ஆர்.வி.ஷஜீவனா, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆர்.சிவபிரசாத் ஆகியோர் முன்னிலையில் 23.11.2024 அன்று நடைபெற்றது. இந்நிகழ்வில் தமிழ்நாடு அரசு முன்னாள் தலைமைச்  செயலாளர் பேசுகையில்,  தேனி மாவட்டம் இயற்கை எழில் மிகுந்த மாவட்டமாக திகழ்கிறது. எங்கெல்லாம் போதைப்பொருள் இல்லையோ அங்கே சண்டைகள், சச்சரவுகள், வாக்கு வாதங்கள் கலகங்கள் இருப்பதில்லை. அப்படிப்பட்ட உலகம்தான் புதியதோர் உலகமாக இருக்கும். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு மனிதர் வாழ்ந்த வாழ்க்கைக்கும், தற்போது நாம் வாழ்கின்ற வாழ்க்கைக்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளது.  நாம் யாருடன் சேர்கிறோம், யாரை உதாரண மனிதர்களாக வைத்திருக்கின்றோம், யாரை மேன்மையாக கருதுகின்றோம், எந்த புத்தகங்களை படித்துக் கொண்டிருக்கின்றோம், எது நம்முடைய வாழ்க்கையின் முக்கியம் என்று நினைக்கின்றோம் என்பதை எல்லாம் வைத்துதான் நாம் வெ...

தேனியில் மாற்றுத்திறனாளிகளுக்கான மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள்: கலெக்டர் தொடங்கி வைத்தார்

தேனி, நவ.22- தேனி மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் மாற்றுத்திறனாளிக்கான மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகளை மாவட்ட ஆர்.வி.ஷஜீவனா 22.11.2024 அன்று தொடங்கி வைத்தார். தமிழ்நாடு அரசு மாற்றுத்திறனாளிகளுக்காக பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறது. குறிப்பாக மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை உயர்த்தி வழங்கப்பட்டு வருகிறது. மேலும், அவர்களை ஊக்குவிக்கும் விதமாக ஊன்றுகோல், மோட்டார் பொருத்திய சக்கர நாற்காலி, மோட்டார் பொருத்திய மூன்று சக்கர வாகனங்கள், ஸ்மார்ட் போன்கள் மற்றும் ஆவாஸ் மென்பொருள் டேப் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.  அதனடிப்படையில், உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தை (3.12.2024) முன்னிட்டு,  22.11.2024 அன்று மாவட்ட விளையாட்டு அரங்கில் ஓட்டப்போட்டி, நின்று நீளம் தாண்டுதல், ஓடி நீளம் தாண்டுதல், குண்டு எறிதல், தட்டு எறிதல் போன்ற போட்டிகள் நடைபெற்றது. இப்போட்டிகளில் மனவளர்ச்சி குன்றியவர்கள், பார்வைத்திறன் குறைபாடுடையவர், செவித்திறன் குறைபாடுடையவர், கை கால் பாதிக்கப்பட்டவர் என 350-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளி  மாணவர்கள் கலந்து கொண்டனர். மாவட்ட அளவில் ந...

தேனி நாடார் சரஸ்வதி பெண்கள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் விளையாட்டு -ஆண்டு விழா

தேனி, நவ.22- தேனி அருகே வடபுதுபட்டியில் உள்ள நாடார் சரஸ்வதி பெண்கள் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 2024- 2025 ஆம் கல்வியாண்டில் 22.11.2024 அன்று "விளையாட்டு விழா மற்றும் ஆண்டு விழா" பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. விழாவிற்கு தேனி மேலப்பேட்டை இந்து நாடார்கள் உறவின்முறை மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்களின் தலைவர் ராஜமோகன் தலைமை தாங்கினார். உறவின்முறை உபதலைவர் கணேஷ், பொதுச்செயலாளர் ஆனந்தவேல், பொருளாளர் பழனியப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.   இதில் விளையாட்டு விழாவில் சிறப்பு விருந்தினராக மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு  சுகுமார் கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு அறிவுரை வழங்கி இந்த கல்வியாண்டில் மாநில, மாவட்ட மற்றும் குறுவட்ட அளவில் சாதனை பெற்ற மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கினார். முன்னதாக பல்வேறு தடகள விளையாட்டு போட்டிகளும், மாணவிகளின் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து நடைபெற்ற பள்ளி ஆண்டு விழாவில் சிறப்பு விருந்தினராக மின்சார வாரிய தேனி மேற்பார்வை பொறியாளர் லட்சுமி கலந்து கொண்டு கடந்த கல்வியாண்டில் 10, 11 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் மூன்று இடத்தை பெற்...

தேனி மாவட்ட கோர்ட்டில் புதிய வடிவிலான சட்ட விழிப்புணர்வு முகாம் மற்றும் சிறப்பு புகைப்பட கண்காட்சி

தேனி, நவ.21- தேனி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் புதிய வடிவிலான சட்ட விழிப்புணர்வு முகாம் மற்றும் சிறப்பு புகைப்பட கண்காட்சியினை முதன்மை மாவட்ட நீதிபதி சொர்ணம் ஜெ.நடராஜன் 21.11.2024 அன்று துவக்கி வைத்து பார்வையிட்டார். சட்டம் சம்பந்தமான சந்தேகங்களுக்கும், அதனை தீர்ப்பதற்கும் மாநிலம் முழுவதும் இலவச சட்ட உதவி மையம் செயல்பட்டு வருகிறது. சட்டம் பற்றிய விழிப்புணர்வை அனைத்து தரப்பு மக்களுக்கு தெரியப்படுத்தவும், அனைவருக்கும் நீதியை உறுதிப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் பல்வேறு விழிப்புணர்வு பணிகள் சட்டப்பணிகள் ஆணைக்குழு மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.  அதன் ஒரு பகுதியாக இந்த விழிப்புணர்வு முகாம் மற்றும் சிறப்பு புகைப்படக் கண்காட்சி இன்று நடைபெற்றது.  இந்நிகழ்வின் போது முதன்மை மாவட்ட நீதிபதி தெரிவித்ததாவது, மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு பல ஆண்டுகளாக சட்டம் சார்ந்த பல்வேறு சேவைகளை செய்து வருகிறது. இதுகுறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில் இம்முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்க...

தேனி அல்லிநகரம் நகராட்சி அலுவலகம் முன்பு குப்பை கொட்டும் போராட்டம் நடத்த கவுன்சிலர் கிருஷ்ணபிரபா அனுமதி கோரி போலீசாரிடம் மனு

தேனி அல்லிநகரம் நகராட்சி பகுதியில் 33 வார்டுகள் உள்ளன. இந்த பகுதிகளில் சுகாதார பணிகளை மேற்கொள்ள நகராட்சி பகுதி 5 சுகாதார மண்டலங்களாக பிரிக்கப்பட்டு துப்புரவு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.  இந்நிலையில் நகராட்சியில் பணியாற்றி வந்த துப்புரவு பணியாளர்கள் பெரும்பாலானோர் ஓய்வு பெற்ற காரணத்தினால் தனியார் நிறுவனத்தின் மூலம் துப்புரவு பணியாளர்கள் நியமிக்கப்பட்டு குப்பைகள் சேகரிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இருந்த போதிலும் தனியார் குப்பைகள் சேகரிக்கும் நிறுவனத்தின் நிர்வாக திறமையின்மையால் தேனி நகராட்சி பகுதியில் சேகரிக்கப்பட்ட குப்பைகள் ஆங்காங்கே தெருக்கள் மற்றும் சாலை ஓரங்களில் கொட்டப்பட்டு குப்பைகளம் போல் காட்சியளிப்பது தொடர்கதையாகி வருகிறது. இந்த நிலையில் தேனி அல்லிநகரம் நகராட்சி 5-வது வார்டு கவுன்சிலர் கிருஷ்ணபிரபா அய்யப்பன் தேனி போலீஸ் நிலையத்தில் போராட்ட நடத்த அனுமதி கோரி மனு ஒன்று அளித்துள்ளார். அந்த மனுவில் தேனி அலங்காரம் நகராட்சி பகுதியில் துப்புரவு தூய்மை பணிகள் மிகவும் தெய்வாக இருப்பதாலும், இந்த குறைகள் பல மாதங்களாக இருப்பதாலும், நகராட்சி நிர்வாகம் இதனை கண்டு கொள்ளாததாலும...