தமிழ்நாடு அனைத்து வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தேனி மாவட்டத்தின் சார்பில் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் 11.12.2024 அன்று தேனி பங்களா மேடு பகுதியில் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு தேனி மாவட்ட தலைவர் செல்வகுமார் தலைமை தாங்கினார். மாநில துணைத்தலைவர் பெருமாள், மாநில இணைச்செயலாளர் காளிமுத்து, தேனி நகர முதன்மை துணைத்தலைவர் பிரபு, தேனி நகர ஒருங்கிணைப்பாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் திருவரங்கப்பெருமாள் வரவேற்றார்.
ஆர்ப்பாட்டத்தில் வணிகர் சங்க சட்ட ஆலோசகர் வக்கீல் எம்.கே.எம் முத்துராமலிங்கம், சங்க மாவட்ட பி.ஆர்.ஓ., வேல்முருகன், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சர்புதீன், மாவட்ட துணைத்தலைவர் முருகதாஸ், மாவட்ட இணை செயலாளர் விபுகுமார், மாவட்ட கவுரவ தலைவர் ஏ.எம்.ஆர்.ஆர். சந்திரகுமார் ஆகியோர் ஆர்ப்பாட்டத்திற்கான நோக்கங்கள் குறித்து விளக்கி பேசினார்கள். ஆர்ப்பாட்டத்தில் தேனி மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் நிர்வாகிகள், வர்த்தக சங்க நிர்வாகிகள் உள்பட பல்வேறு சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தின் போது பொதுமக்களை பாதிக்கக்கூடிய விலைவாசி உயர்வுக்கு காரணமாக கூடிய வாடகை மீதான 18 சதவீதம் ஜி.எஸ்.டி., வரி, சொத்து வரிக்கு 6 சதவீதம் உயர்வு, வணிக உரிமை கட்டண உயர்வு, தொழில் வரி உயர்வு, குப்பை வரி உயர்வு உள்பட பல்வேறு வரி உயர்வுகளை நீக்க கோரி மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி கண்டன கோஷங்கள் எழுப்பினார்கள். முடிவில் தேனி மாவட்ட பொருளாளர் அருஞ்சுனை கண்ணன் நன்றி கூறினார்.
நாகராஜ், முதன்மை நிருபர்
Comments