தேனி, டிச.4-
தேனி நாடார் சரசுவதி நர்சரி அன்டு பிரைமரி பள்ளியில் அறிவியல் கண்காட்சி 3.12.2024 அன்று நடைபெற்றது. இந்த கண்காட்சியை தேனி மேலப்பேட்டை இந்து நாடார்கள் உறவின்முறை தலைவர் ராஜமோகன் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். உறவின்முறை உபதலைவவர் கணேஷ், பொதுச்செயலாளர் ஆனந்தவேல், பொருளாளர் பழனியப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்நிகழ்ச்சியில் நாடார் சரசுவதி நர்சரி அன்டு பிரைமரி பள்ளியின் செயலாளர் பிரபாகரன், இணைச்செயலாளர்கள் பாண்டிக்குமார், கமலக்கண்ணன், ஆட்சிமன்றக்குழு உறுப்பினர்கள், அனைத்து நிறுவனங்களின் நிர்வாகக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
இந்த கண்காட்சியில் மாணவ, மாணவிகளின் அறிவியல் சார்ந்த படைப்புகள் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தது. மேலும் மாணவ, மாணவிகள் கலைநிகழ்ச்சிகள் மூலம் அறிவியல் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதனை உறவின்முறை நிர்வாகிகள் பார்வையிட்டு மாணவ குழந்தைகளுக்கு பாராட்டுகளை தெரிவித்தனர்.
இந்த அறிவியல் கண்காட்சியை நாடார் சரசுவதி அனைத்து கல்வி நிறுவனங்களிலும் இருந்து மாணவ, மாணவியர்கள், ஆசிரியர்கள் வந்து பார்வையிட்டனர்.
இதற்கான ஏற்பாடுகளை நர்சரி அன்டு பிரைமரி பள்ளி முதல்வர் கார்த்திகாதேவி மற்றும் துணை முதல்வர்கள், ஆசிரியைகள் செய்திருந்தனர்.
நாகராஜ், முதன்மை நிருபர்
Comments