Skip to main content

தேனி நாடார் சரஸ்வதி பெண்கள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் விளையாட்டு -ஆண்டு விழா

தேனி, நவ.22-

தேனி அருகே வடபுதுபட்டியில் உள்ள நாடார் சரஸ்வதி பெண்கள் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 2024- 2025 ஆம் கல்வியாண்டில் 22.11.2024 அன்று "விளையாட்டு விழா மற்றும் ஆண்டு விழா" பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. விழாவிற்கு தேனி மேலப்பேட்டை இந்து நாடார்கள் உறவின்முறை மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்களின் தலைவர் ராஜமோகன் தலைமை தாங்கினார். உறவின்முறை உபதலைவர் கணேஷ், பொதுச்செயலாளர் ஆனந்தவேல், பொருளாளர் பழனியப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  
இதில் விளையாட்டு விழாவில் சிறப்பு விருந்தினராக மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு  சுகுமார் கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு அறிவுரை வழங்கி இந்த கல்வியாண்டில் மாநில, மாவட்ட மற்றும் குறுவட்ட அளவில் சாதனை பெற்ற மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கினார். முன்னதாக பல்வேறு தடகள விளையாட்டு போட்டிகளும், மாணவிகளின் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது.
இதனைத்தொடர்ந்து நடைபெற்ற பள்ளி ஆண்டு விழாவில் சிறப்பு விருந்தினராக மின்சார வாரிய தேனி மேற்பார்வை பொறியாளர் லட்சுமி கலந்து கொண்டு கடந்த கல்வியாண்டில் 10, 11 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் மூன்று இடத்தை பெற்ற மாணவிகளுக்கு பரிசு வழங்கினார். விழாவின் போது பள்ளி மாணவிகளின் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. விழாவில் உறவின்முறை ஆட்சி மன்ற குழு உறுப்பினர்கள், பள்ளி முதல்வர், ஆசிரியர்கள், மாணவிகள் கலந்து கொண்டனர். முடிவில் பள்ளி செயலாளர் இலட்சுமணன் நன்றி கூறினார்.

நாகராஜ், முதன்மை நிருபர் & 
செய்தி ஆசிரியர் 

Comments