Skip to main content

Posts

தமிழ்நாடு கருவூல கணக்குத்துறை உயர் அலுவலர் சங்க மாநில செயற்குழு கூட்டம்

தேனியில் தமிழ்நாடு கருவூல கணக்குத்துறை உயர் அலுவலர் சங்க  மாநில செயற்குழு கூட்டம் தனியார் திருமண மண்டபத்தில் 24.8.2024 அன்று நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநில தலைவர் ராஜலட்சுமி தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் சுப்ரமணியன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் இணைச்செயலாளர் அருணாச்சலம், மாநில நிர்வாகிகள் சசிகலா,, சீனி கணேசன் உள்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் கருவூல கணக்குத்துறை கூடுதல் இயக்குனர் நிர்வாகம், கருவூல ஆணையருக்கு நேரடி கணக்கர் பணிநியமனம் செய்த முதலமைச்சருக்கு கணக்குத்துறை உயர் அலுவலர் சங்கத்தின் சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது.  அதுபோல 6 மண்டலங்களாக இருக்கும் இணை இயக்குனர் பதவியினை 8 மண்டலங்களாக பிரித்தல், கருவூல அலுவலர் பணியிடங்களை இணை இயக்குனர் பணிகளாக ஊதிய திருத்தம் செய்து வழங்கவும், மந்தணம் அறிக்கையினை அரசாணையில் குறிப்பிட்டவாறு தொடர்புடைய துறை தலைமையிடம் பெற்றுக்கொள்ள வேண்டும் என்பன உள்பட கூட்டத்தில் 13 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. கூட்ட முடிவில் பொருளாளர் நடராஜன் நன்றி கூறினார். சீனிவாசன், உதவி ஆசிரியர் 

நாடார் சரஸ்வதி பொறியியல் கல்லூரியில் உலகளாவிய வேலைவாய்ப்பு பற்றிய கருத்தரங்கம்

தேனி நாடார் சரஸ்வதி பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் உலகளாவிய வேலைவாய்ப்பு பற்றிய கருத்தரங்கம் நடைபெற்றது இந்த கருத்தரங்கத்திற்கு கல்லூரியின் செயலாளர்கள் ராஜ்குமார், மகேஸ்வரன் ஆகியோர் தலைமை தாங்கினர். இணைச்செயலாளர் நவீன்ராம் முன்னிலை வகித்தார்.  கல்லூரியின் கணினிபொறி அறிவியல் துறையின் பேராசிரியர் சோலைராஜ் வரவேற்புரையாற்றினார். கல்லூரியின் முதல்வர் முனைவர் மதளைகந்தரம் மாணவர்களுக்கு இக்கருத்தரங்கத்தின் முக்கியத்துவத்தை பற்றி எடுத்துரைத்து வாழ்த்துரை வழங்கினார். இந்த கருத்தரங்கத்தில் ஜப்பான் டோக்கியோ மைக்ரோசாப்ட் கார்ப்பரேசன் மூத்த உற்பத்தி மேலாளர் (Senior Product Manager) விக்னேஷ் மிட்ஸ்மி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவர்களிடையே ஜப்பான் ஐரோப்பா. மற்றும் தெற்கு ஆசிய நாடுகளில் இந்திய பொறியாளர்களுக்கு வழங்கப்படும் வேலைவாய்ப்புகள், செயற்கை நுண்ணறிவு பிரிவு. தகவல் தொழில்நுட்பம். ஆட்டோ மொபைல் இன்டஸ்ட்ரி, நெட்வொர்க், டேட்டா சயின்ஸ் ஆகிய துறைகளில் வேலைவாய்ப்பு பெறுவது. பொறியியல் துறை மாணவர்கள் கல்லூரியில் படிக்கும் பொழுது ஜப்பான் தொழில்நுட்ப நிறுவனங்களில் பயிற்சி பெறுவது ...

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியில் தொழில்முறை விளையாட்டு பிரிவு ஒருங்கிணைப்பாளர்கள் நியமனம்

அகில இந்திய தொழில்முறை காங்கிரஸ் (AIPC) தலைவர் பிரவீன் சக்ரவர்த்தி ஒப்புதலுடன் அகில இந்திய தொழில்முறை விளையாட்டு பிரிவு ஒருங்கிணைப்பாளர் ஸ்மித் சிங் அவர்கள் தமிழ்நாடு காங்கிரஸ் தொழில்முறை விளையாட்டு பிரிவு மாநில ஒருங்கிணைப்பாளராக லியோ சதீஷ் குமார்  அவர்களை நியமனம் செய்துள்ளார்.  அதுபோல தென் சென்னை விளையாட்டு பிரிவு ஒருங்கிணைப்பாளராக வசிம் மீரையும்,  வடசென்னை விளையாட்டு பிரிவு ஒருங்கிணைப்பாளராக சிவனேஷ் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். புதிதாக நியமனம் செய்யப்பட்டுள்ள ஒருங்கிணைப்பாளர்கள் இன்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை MLA அவர்கள் முன்னிலையில் பொறுப்பேற்று கொண்டனர்.  அப்போது புதிதாக பொறுப்பேற்று கொண்ட நிர்வாகிகளுக்கு செல்வப்பெருந்தகை அவர்கள் வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்து கொண்டார்.  நாகராஜ், முதன்மை நிருபர் 

தேனியில் நாடார் வித்யாலயா மெட்ரிக் பள்ளியில் கோகுலஷ்டமி விழா

தேனி நாடார் உறவின்முறை வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கோகுலாஷ்டமி விழா 23.8.2024 அன்று நடைபெற்றது.  விழாவிற்கு தேனி மேலப்பேட்டை இந்து நாடார் உறவின் முறை பொருளாளர் பழனியப்பன் தலைமை தாங்கினார். பள்ளியின் செயலாளர் நவமணி, இணைச்செயலாளர் அய்யன் மூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் பள்ளியின் நிர்வாகக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.  விழாவின் போது வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் கே.ஜி. மழலையர்கள் கிருஷ்ணர், ராதை வேடம் அணிந்து கண்ணன் பாடலுக்கு நடனம் ஆடினர். இந்நிகழ்ச்சியில் பங்குபெற்ற குழந்தைகளுக்கு இனிப்புகளும், பரிசுகளும் வழங்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை பள்ளி முதல்வர் மற்றும் துணை முதல்வர்கள் செய்திருந்தனர். இதற்கிடையே தேனி மேலப்பேட்டை இந்து நாடார் உறவின்முறை வித்யாலயா மெட்ரிக் மேல்நிலை பள்ளியில் கடந்த 22, 23 ஆகிய தேதிகளில் 2 நாட்கள் மாவட்ட அளவிலான குறு வட்ட போட்டிகள் டென்னிகாய்ட்,  கேரம் ஆகிய விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது.  இந்த போட்டிகளில் டென்னிகோட் போட்டியில் 8 பள்ளிகளும், கேரம் போட்டியில் 14 பள்ளிகளும் பங்கு பெற்றனர்.  நாகராஜ், ...

தேனியில் ஸ்ரீ கண்ணாத்தாள் அம்மன் கோவில் கும்பாபிஷேகம்

  தேனி பழைய டி.வி.எஸ். ரோடு - சேல்ஸ் சொசைட்டி தெரு இடையே அமைந்துள்ள  ஸ்ரீ கண்ணாத்தாள் அம்மன் கோவில் கும்பாபிஷேகம் 23.8.2024 அன்று நடைபெற்றது.   கும்பாபிஷேக்திற்கு கோவில் பரம்பரை அறங்காவலர் கோபால கிருஷ்ணராஜா தலைமை தாங்கினார்.  கோவில் ,பொருளாளர் கொண்டுராஜா என்ற தர்ம கிருஷ்ணராஜா, நிர்வாக தலைவர் மலைச்சாமி, செயலாளர் ஈஸ்வரன், இணைச்செயலாளர் சுரேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  முன்னதாக  திருவண்ணாமலை மாவட்டம், பழங்கோவில், நட்சத்திரகிரி செல்வமுத்து குமாரசாரியார் அன் பிரதர்ஸ், சென்னை சந்தன நல்லூர் நடராஜ சிவாச்சாரியார்கள் யாகசாலை, ஹோமங்கள் செய்து கும்பாபிஷேகத்தினை வயலின் மிருதங்க சக்ரவர்த்தி முதுமாமணி, நாகராஜ் ஓதுவார் மற்றும் திருப்பத்தூர் அக்ரஹாரம் பெருமாள் மலைக்கோயில் ஆஸ்தான நாதஸ்வர வித்வான் ரவிசங்கர் மங்கள இசையுடன் கும்பாபிஷேகம் நடைபெற்றது கோவில் வடிவமைப்பினை  .ஸ்ரீ வில்லிபுத்தூர் தியாகராஜன் ஸ்தபதி,வைரமுத்து, அம்மன் கல்சிலை வடிவமைப்பினை மல்லி சீனிவாசன் ஸ்தபதியும், கோபுரகலசம்,திருவாச்சியினை  வடிவமைப்பை தேனி தேனியை சேர்ந்த ஜெயசந்திர ஸ்தபதி, கோபி சிவரெங்...

உடல் நலம் குன்றி சாலையில் கிடந்த மூதாட்டியை மீட்டு முதியோர் இல்லத்தில் சேர்த்த சமூக ஆர்வலர்

தேனி - கம்பம் சாலையில் 2 மாதங்களுக்கு முன்பு சாலையோரம் சுமார் 60 வயது  மதிக்கத்தக்க மூதாட்டி ஆதரவின்றி கிடந்தார். இது குறித்து தகவல் அறிந்த சமூக ஆர்வலரும் ம.சுப்புலாபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருந்தாளுநருமான ந.ரஞ்சித்குமார் காவல்துறையினர் உதவியுடன் அந்த மூதாட்டியை மீட்டு 108 ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் அவரை தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சேர்த்து விட்டார்.  அதன் பின்னர் மருத்துவமனையில் மருத்துவர்கள், செவிலியர்களின் முழு உதவியுடன் நலமடைந்த மூதாட்டியை  மருத்துவமனை நிலைய அலுவலர்கள் மற்றும் க.விலக்கு காவல் துறை உதவியுடன் ம.சுப்புலாபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருந்தாளுனர் ரஞ்சித்குமார் உத்தமபாளையத்தில் உள்ள அரசு உதவி பெறும் ஆதரவற்றோர் முதியோர் இல்லத்தில் மூதாட்டியின் எதிர்கால நலன் கருதி சேர்த்து விட்டார். இந்த நிகழ்வு மருத்துவமனை வட்டாரத்தில் பாராட்டு பெற்றுள்ளது. சதீஷ், இணை ஆசிரியர்  

மாற்றுத்திறனாளி மாணவன் குடியிருப்பு வீட்டிற்கு அட்வான்ஸ் தொகைக்காக ரூ.10 ஆயிரம் நிதி உதவி

தேனி மாவட்டம், கம்பம் அருகே உள்ள சுருளிப்பட்டியில் மாற்றுத்திறனாளி மாணவன் முத்துப்பாண்டி என்பவர் 11-ம் வகுப்பு படித்து வருகிறாா். அந்த மாணவனுக்கு அம்மா, அப்பா இல்லை (இறந்து விட்டாா்கள்). எந்தவொரு ஆதரவு இல்லாமல் தனது வயதான பாட்டியுடன் வாழ்ந்து வருகிறாா். சொந்த வீடு மற்றும் நிலமோ எதுவும் இல்லை. இதற்கு முன்பு குடியிருந்த குடியிருந்த வீட்டில் கரண்ட் வசதிகூட இல்லை.  மேலும் வீட்டில் கேஸ் அடுப்போ, மண்ணெண்ணெய் அடுப்போ இல்லை. இந்நிலையில் வயதான பாட்டி விவசாய கூலி வேலைக்கு அல்லது 100-நாள் வேலைக்கு செல்கிறாா். (வயதாகிவிட்ட காரணத்தினால் ஒரு சில நேரங்களில் கூலி வேலைக்கு அழைத்துச் செல்ல மறுக்கிறாா்கள்) இதற்கிடையே மாற்றுத்திறனாளி மாணவன் ஏற்கனவே குடியிருந்த வீட்டை, அந்த வீட்டின் உரிமையாளா் வேறொரு நபருக்கு விலைக்கு விற்ற காரணத்தினால், வேறு வீட்டிற்கு செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டு மிகவும் கஷ்டமாக வாழ்ந்து வரும் வயதான பாட்டி அவா்களுடன் மாற்றுத்திறனாளி மாணவன் முத்துப்பாண்டி முன்பு இருந்த வீட்டின் அருகிலேயே வேறு  வீடு பார்த்துள்ளார். அந்த வீட்டிற்கு அட்வான்ஸ் (முன் இருப்புத்தொகை) 10 ஆயிரம் ரூபாய், ம...

நாடார் சரசுவதி கலை கல்லூரியில் பன்னாட்டு கருத்தரங்கம்

தேனி மேலப்பேட்டை இந்து நாடார்கள் உறவின்முறை நாடார் சரசுவதி கலை மற்றும் அறிவியல் (தன்னாட்சி) கல்லுரியில் "கல்வியோடு தன்திறனை மேம்படுத்திக் கொண்டு பல்வேறு துறைகளிலும் உங்களை தடம் பதியுங்கள்" என்பதை தாரக மந்திரமாக கொண்டு செயல்படும் வேலைவாய்ப்புத் துறையின் சார்பில் "UNSTOPPABLE YOU" என்ற தலைப்பில் பன்னாட்டு கருத்தரங்கம் காமராஜர் அரங்கத்தில் 21.8.2024 அன்று நடைபெற்றது. கருத்தரங்கிற்கு தேனி மேலப்பேட்டை இந்து நாடார்கள் உறவின்முறை தலைவர் ராஜமோகன் தலைமை உரையாற்றினார். உபதலைவர் கணேஷ். பொதுச்செயலாளர் ஆனந்தவேல், பொருளாளர் பழனியப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரியின் தேர்வு கட்டுப்பாட்டாளர்(CoE), துணை முதல்வர் மற்றும் வேலைவாய்ப்புத்துறை இயக்குநர் முனைவர் சரண்யா வரவேற்புரை வழங்கினார். கல்லூரி செயலாளர் காசிபிரபு  துவக்க உரையாற்றினார். இணைச்செயலாளர்கள் அருண், செண்பகராஜன், கல்லூரி முதல்வர் முனைவர் சித்ரா. துணை முதல்வர்கள் முனைவர் கோமதி, சுசீலாசங்கர், முனைவர் உமாகாந்தி முனைவர் கிருஷ்ணவேணி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். சிறப்பு விருந்தினராக P. சபீயா Associate (Developer),CTS ,Can...

உங்களை தேடி, உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் தேனி தாலுகாவிற்கு உட்பட்ட பகுதிகளில் மாவட்ட கலெக்டர் ஆய்வு

தேனி மாவட்டம், தேனி தாலுகாவில் உங்களைத்தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் அரசு பள்ளிகள், கல்லூரி, அங்கன்வாடி மையங்கள், கிராம நிர்வாக அலுவலகம் பேரூராட்சி அலுவலகம், நியாய விலைக்கடைகள், கூட்டுறவு சங்கங்கள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், கால்நடை மருத்துவமனை, நகராட்சி குப்பை உரகிடங்கு,  நுகர்பொருள் வாணிப கழக கிட்டங்கி மற்றும் பல்வேறு வளர்ச்சித்திட்ட பணிகளின் செயல்பாடுகள் குறித்து மாவட்ட கலெக்டர் ஷஜீவனா அவர்கள் 21.8.2024 அன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அரசின் அனைத்து நலத் திட்டங்களும், சேவைகளும் தங்குதடையின்றி விரைவாக மக்களை சென்றடைய வேண்டும் என்று,  மக்களை நாடி, மக்களின் குறைகளை கேட்டறிந்து உடனுக்குடன் தீர்வு காண வேண்டும் என்ற உயரிய எண்ணத்தில் அரசு இயந்திரம் முழுவதுமாக களத்திற்கே வந்து செயல்படும் உங்களைத்தேடி உங்கள் ஊரில் என்ற புதிய திட்டத்தை தொடங்கி உள்ளார். அதன்படி இன்று தேனி தாலுகாவில் உள்ள என்.ஆர்.டி. நினைவு அரசு மருத்துவமனை மற்றும் வீரபாண்டியில் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையம் பணிபுரியும் மருத்துவர்கள், செவிலியர்கள...

தேனி - வீரபாண்டி கால்நடை மருத்துவக்கல்லூரி, ஆராய்ச்சி நிலையத்தில் கால்நடை பண்ணை வளாகம் மற்றும் தீவன உற்பத்தி மைய புதிய கட்டிடங்களை காணொளி காட்சி வாயிலாக தமிழ்நாடு முதலமைச்சர் திறந்து வைத்தார்

தமிழ்நாடு முதலமைச்சர் சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து, தேனி மாவட்டம். வீரபாண்டி கால்நடை அரசு மருத்துவக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் ரூ.454 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கால்நடை பண்ணை வளாகம் மற்றும் தீவன உற்பத்தி மைய கட்டிடத்தை இன்று (20.8.2024) காணொளி காட்சி வாயிலாக தமிழ்நாடு முதலமைச்சர் திறந்து வைத்தார். அதனைத்தொடர்ந்து மாவட்ட கலெக்டர் ஆர்.வி.ஷஜீவனா குத்துவிளக்கு ஏற்றி வைத்தார். அதன்பின்னர் கலெக்டர், தேனி பாராளுமன்ற உறுப்பினர் தங்கதமிழ்செல்வன், சட்டமன்ற உறுப்பினர்கள் ஆ.மகாராஜன் (ஆண்டிபட்டி), கே.எஸ்.சரவணக்குமார் (பெரியகுளம்), கால்நடை மருத்துவக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய முதல்வர் முனைவர் பி.என்.ரிச்சர்டு ஜெகதீசன் ஆகியோர் திறக்கப்பட்ட புதிய கட்டிடங்களை பார்வையிட்டனர். கால்நடை மருத்துவக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் உள்ள கால்நடை பண்ணை வளாகத்தில், குதிரை இலாயம், கறவை மாட்டுக்கொட்டகை மற்றும் உலர் தீவன உற்பத்தி சேமிப்பு கிடங்கு மற்றும் அடர் தீவன சேமிப்பு கிடங்கு அமைந்துள்ளது. இக்கல்லூரியில், இளங்கலை கால்நடை மருத்துவ மாணவர்கள் கல்வி பயிலவும், செய்முறைப் பயிற்சி பெ...