தேனியில் தமிழ்நாடு கருவூல கணக்குத்துறை உயர் அலுவலர் சங்க மாநில செயற்குழு கூட்டம் தனியார் திருமண மண்டபத்தில் 24.8.2024 அன்று நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநில தலைவர் ராஜலட்சுமி தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் சுப்ரமணியன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் இணைச்செயலாளர் அருணாச்சலம், மாநில நிர்வாகிகள் சசிகலா,, சீனி கணேசன் உள்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் கருவூல கணக்குத்துறை கூடுதல் இயக்குனர் நிர்வாகம், கருவூல ஆணையருக்கு நேரடி கணக்கர் பணிநியமனம் செய்த முதலமைச்சருக்கு கணக்குத்துறை உயர் அலுவலர் சங்கத்தின் சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது. அதுபோல 6 மண்டலங்களாக இருக்கும் இணை இயக்குனர் பதவியினை 8 மண்டலங்களாக பிரித்தல், கருவூல அலுவலர் பணியிடங்களை இணை இயக்குனர் பணிகளாக ஊதிய திருத்தம் செய்து வழங்கவும், மந்தணம் அறிக்கையினை அரசாணையில் குறிப்பிட்டவாறு தொடர்புடைய துறை தலைமையிடம் பெற்றுக்கொள்ள வேண்டும் என்பன உள்பட கூட்டத்தில் 13 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. கூட்ட முடிவில் பொருளாளர் நடராஜன் நன்றி கூறினார். சீனிவாசன், உதவி ஆசிரியர்
Publisher of the Website : Nagaraj Kamudurai