Skip to main content

தேனியில் நாடார் வித்யாலயா மெட்ரிக் பள்ளியில் கோகுலஷ்டமி விழா

தேனி நாடார் உறவின்முறை வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கோகுலாஷ்டமி விழா 23.8.2024 அன்று நடைபெற்றது. 

விழாவிற்கு தேனி மேலப்பேட்டை இந்து நாடார் உறவின் முறை பொருளாளர் பழனியப்பன் தலைமை தாங்கினார். பள்ளியின் செயலாளர் நவமணி, இணைச்செயலாளர் அய்யன் மூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் பள்ளியின் நிர்வாகக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். 


விழாவின் போது வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் கே.ஜி. மழலையர்கள் கிருஷ்ணர், ராதை வேடம் அணிந்து கண்ணன் பாடலுக்கு நடனம் ஆடினர். இந்நிகழ்ச்சியில் பங்குபெற்ற குழந்தைகளுக்கு இனிப்புகளும், பரிசுகளும் வழங்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை பள்ளி முதல்வர் மற்றும் துணை முதல்வர்கள் செய்திருந்தனர்.


இதற்கிடையே தேனி மேலப்பேட்டை இந்து நாடார் உறவின்முறை வித்யாலயா மெட்ரிக் மேல்நிலை பள்ளியில் கடந்த 22, 23 ஆகிய தேதிகளில் 2 நாட்கள் மாவட்ட அளவிலான குறு வட்ட போட்டிகள் டென்னிகாய்ட்,  கேரம் ஆகிய விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது. இந்த போட்டிகளில் டென்னிகோட் போட்டியில் 8 பள்ளிகளும், கேரம் போட்டியில் 14 பள்ளிகளும் பங்கு பெற்றனர். 

நாகராஜ், முதன்மை நிருபர் 

Comments