Skip to main content

மாற்றுத்திறனாளி மாணவன் குடியிருப்பு வீட்டிற்கு அட்வான்ஸ் தொகைக்காக ரூ.10 ஆயிரம் நிதி உதவி

தேனி மாவட்டம், கம்பம் அருகே உள்ள சுருளிப்பட்டியில் மாற்றுத்திறனாளி மாணவன் முத்துப்பாண்டி என்பவர் 11-ம் வகுப்பு படித்து வருகிறாா். அந்த மாணவனுக்கு அம்மா, அப்பா இல்லை (இறந்து விட்டாா்கள்). எந்தவொரு ஆதரவு இல்லாமல் தனது வயதான பாட்டியுடன் வாழ்ந்து வருகிறாா். சொந்த வீடு மற்றும் நிலமோ எதுவும் இல்லை.

இதற்கு முன்பு குடியிருந்த குடியிருந்த வீட்டில் கரண்ட் வசதிகூட இல்லை. மேலும் வீட்டில் கேஸ் அடுப்போ, மண்ணெண்ணெய் அடுப்போ இல்லை.

இந்நிலையில் வயதான பாட்டிவிவசாய கூலி வேலைக்கு அல்லது 100-நாள் வேலைக்கு செல்கிறாா். (வயதாகிவிட்ட காரணத்தினால் ஒரு சில நேரங்களில் கூலி வேலைக்கு அழைத்துச் செல்ல மறுக்கிறாா்கள்)


இதற்கிடையே மாற்றுத்திறனாளி மாணவன் ஏற்கனவே குடியிருந்த வீட்டை, அந்த வீட்டின் உரிமையாளா் வேறொரு நபருக்கு விலைக்கு விற்ற காரணத்தினால், வேறு வீட்டிற்கு செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டு மிகவும் கஷ்டமாக வாழ்ந்து வரும் வயதான பாட்டி அவா்களுடன் மாற்றுத்திறனாளி மாணவன் முத்துப்பாண்டி முன்பு இருந்த வீட்டின் அருகிலேயே வேறு  வீடு பார்த்துள்ளார்.

அந்த வீட்டிற்கு அட்வான்ஸ் (முன் இருப்புத்தொகை) 10 ஆயிரம் ரூபாய், மாத வாடகை 1500 ரூபாய் கேட்டுள்ளார்கள். மாத வாடகை கூட தினந்தோறும் வேலைக்கு சென்று வாடகை கட்டிக் கொள்வதாகவும், அட்வான்ஸ் (முன் இருப்புத்தொகை) 10-ஆயிரம்  ரூபாய் வேண்டுமென தேனீக்கள் அறக்கட்டளை அமைப்பிடம் உதவி கேட்டிருந்தார்.

அதனடிப்படையில் தேனீக்கள் அறக்கட்டளை அமைப்பின் உறுப்பினர்கள் நேரில் சென்று விசாரித்து அனைத்து உறுப்பினர்களிடமும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

அதனைக்கேள்விப்பட்ட தேனீக்கள் அறக்கட்டளை ஒருங்கிணைப்பாளர், ஆசிரியை முத்துமாாி மாற்றுத்திறனாளி மாணவன் வீட்டிற்கான அட்வான்ஸ் 
முழுத்தொகையை நானே தருகிறேன் என்று கூறி 10 ஆயிரம் ரூபாய் நிதி உதவி வழங்கினார்.

மேலும் தேனீக்கள் அறக்கட்டளை சாா்பாக 25-கிலோ அரிசிப்பையும், மளிகை பொருட்களும் மாற்றுத்திறனாளி மாணவன் முத்துப்பாண்டி வீட்டிற்கு வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் ஆசிாியா் அழகேசன், ஆசிாியை முத்துமாாி, சுருளிப்பட்டி சந்தோஷ், போட்டோ பாண்டி ஆகியோா் கலந்து கொண்டனர்.

நாகராஜ், முதன்மை நிருபர் 

Comments