தேனி மேலப்பேட்டை இந்து நாடார்கள் உறவின்முறை நாடார் சரசுவதி கலை மற்றும் அறிவியல் (தன்னாட்சி) கல்லுரியில் "கல்வியோடு தன்திறனை மேம்படுத்திக் கொண்டு பல்வேறு துறைகளிலும் உங்களை தடம் பதியுங்கள்" என்பதை தாரக மந்திரமாக கொண்டு செயல்படும் வேலைவாய்ப்புத் துறையின் சார்பில் "UNSTOPPABLE YOU" என்ற தலைப்பில் பன்னாட்டு கருத்தரங்கம் காமராஜர் அரங்கத்தில் 21.8.2024 அன்று நடைபெற்றது.
கருத்தரங்கிற்கு தேனி மேலப்பேட்டை இந்து நாடார்கள் உறவின்முறை தலைவர் ராஜமோகன் தலைமை உரையாற்றினார். உபதலைவர் கணேஷ். பொதுச்செயலாளர் ஆனந்தவேல், பொருளாளர் பழனியப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கல்லூரியின் தேர்வு கட்டுப்பாட்டாளர்(CoE), துணை முதல்வர் மற்றும் வேலைவாய்ப்புத்துறை இயக்குநர் முனைவர் சரண்யா வரவேற்புரை வழங்கினார்.
கல்லூரி செயலாளர் காசிபிரபு துவக்க உரையாற்றினார். இணைச்செயலாளர்கள் அருண், செண்பகராஜன், கல்லூரி முதல்வர் முனைவர் சித்ரா. துணை முதல்வர்கள் முனைவர் கோமதி, சுசீலாசங்கர், முனைவர் உமாகாந்தி முனைவர் கிருஷ்ணவேணி ஆகியோர்
வாழ்த்துரை வழங்கினர்.
சிறப்பு விருந்தினராக P. சபீயா Associate (Developer),CTS ,Cannda அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில், உங்கள் அச்சங்கள் வரம்புகளிலிருந்து விடுபடுங்கள் மற்றும் உங்கள் உண்மையான திறனை அடையுங்கள். உங்களை நீங்களே நம்பினால் எதுவுமே சாத்தியம் என்பதை எடுத்துரைத்தார். நீங்கள் ஒவ்வொரு நாளும் விழித்தெழும் ஒரு வாழ்க்கையை கற்பனை செய்து பாருங்கள். நீங்கள் நம்பிக்கையுடனும், மதிப்புமிக்கதாகவும் தடுக்க முடியாததாகவும் உணர்கிறீர்கள்.
நீங்கள் கடந்த சந்தேகங்களை நகர்த்துவதையும் சவால்களை வலிமையுடன் ஏற்றுக் கொள்வதையும் நிறைவான மற்றும் மகிழ்ச்சியான வாழ்க்கையை நடத்துவதையும் கற்பனை செய்து பாருங்கள்.
எல்லோரும் வெற்றியை எதிர்பார்கிறார்கள் அதற்காக கடினமாக முயற்சி செய்கிறார்கள். ஆனால் அவர்கள் ஏன் தங்கள் இலக்குகளை அடைய மற்றும் அவர்களின் கனவுகளை நிறைவேற்ற தவறுகிறார்கள்.
இதற்கு காரணம் இவர்கள் விரும்பிய வெற்றியை அடைவதற்கான சரியான கருவிகள் நுட்பங்கள் மற்றும் நிரூபிக்கப்பட்ட உத்திகள் இல்லாததே ஆகும்.
வெற்றி என்பது ஒரு பயணம், இலக்கு அல்ல. அது நம் மனதின் தொடர்ச்சியான நிலை. எனவே நமது முயற்சிகள் விடாப்பிடியாக இருக்க வேண்டும். இங்கே குறிப்பிட்டுள்ள உத்திகள் மூலம் நீங்கள் வெற்றிப் பாதையில் தடுக்க முடியாதவர்களாக ஆகி விடுவீர்கள்.
ஒவ்வொரு காலையிலும் மில்லியன் கணக்கான பெண்கள் "நான் போதாது" என்ற நிலையான எண்ணத்துடன் உலகை எதிர் கொள்கின்றனர். இது அவர்களின் மனதில் ஒரு அமைதியான எதிரொலியாக இருக்கிறது. அவர்களின் நாட்கள் அவர்களின் தேர்வுகள் மற்றும் அவர்களின் கனவுகளை வடிவமைக்கிறது.
இலக்குகள் அமைத்தல், நேர மேலாண்மை, மைண்ட் புரோகிராமிங், மன அழுத்த மேலாண்மை, ஆளுமை மேம்பாடு, சுய முத்திரை, உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் உடல் மொழி வெற்றி மற்றும் மகிழ்ச்சி போன்றவைகளை உணர்கிறீர்கள். என்று பேசினார்.
கருத்தரங்கில் கல்லூரி கணிணி துறையை சார்ந்த இளங்கலை மூன்றாம் ஆண்டு மற்றும் முதுகலை இரண்டாம் ஆண்டு படிக்கும் 357 மாணவியர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்,
முடிவில் கல்லூரி வேலைவாய்ப்பு துறைத்தலைவர் அகிலா வைஷ்ணவி நன்றி கூறினார்.
நாகராஜ், முதன்மை நிருபர்
Comments