தேனி - கம்பம் சாலையில் 2 மாதங்களுக்கு முன்பு சாலையோரம் சுமார் 60 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஆதரவின்றி கிடந்தார்.
இது குறித்து தகவல் அறிந்த சமூக ஆர்வலரும் ம.சுப்புலாபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருந்தாளுநருமான ந.ரஞ்சித்குமார் காவல்துறையினர் உதவியுடன் அந்த மூதாட்டியை மீட்டு 108 ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் அவரை தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சேர்த்து விட்டார்.
அதன் பின்னர் மருத்துவமனையில் மருத்துவர்கள், செவிலியர்களின் முழு உதவியுடன் நலமடைந்த மூதாட்டியை மருத்துவமனை நிலைய அலுவலர்கள் மற்றும் க.விலக்கு காவல் துறை உதவியுடன் ம.சுப்புலாபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருந்தாளுனர் ரஞ்சித்குமார் உத்தமபாளையத்தில் உள்ள அரசு உதவி பெறும் ஆதரவற்றோர் முதியோர் இல்லத்தில் மூதாட்டியின் எதிர்கால நலன் கருதி சேர்த்து விட்டார்.
இந்த நிகழ்வு மருத்துவமனை வட்டாரத்தில் பாராட்டு பெற்றுள்ளது.
சதீஷ், இணை ஆசிரியர்
Comments