தேனி - வீரபாண்டி கால்நடை மருத்துவக்கல்லூரி, ஆராய்ச்சி நிலையத்தில் கால்நடை பண்ணை வளாகம் மற்றும் தீவன உற்பத்தி மைய புதிய கட்டிடங்களை காணொளி காட்சி வாயிலாக தமிழ்நாடு முதலமைச்சர் திறந்து வைத்தார்
தமிழ்நாடு முதலமைச்சர் சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து, தேனி மாவட்டம். வீரபாண்டி கால்நடை அரசு மருத்துவக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் ரூ.454 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கால்நடை பண்ணை வளாகம் மற்றும் தீவன உற்பத்தி மைய கட்டிடத்தை இன்று (20.8.2024) காணொளி காட்சி வாயிலாக தமிழ்நாடு முதலமைச்சர் திறந்து வைத்தார்.
அதனைத்தொடர்ந்து மாவட்ட கலெக்டர் ஆர்.வி.ஷஜீவனா குத்துவிளக்கு ஏற்றி வைத்தார். அதன்பின்னர் கலெக்டர், தேனி பாராளுமன்ற உறுப்பினர் தங்கதமிழ்செல்வன், சட்டமன்ற உறுப்பினர்கள் ஆ.மகாராஜன் (ஆண்டிபட்டி), கே.எஸ்.சரவணக்குமார் (பெரியகுளம்), கால்நடை மருத்துவக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய முதல்வர் முனைவர் பி.என்.ரிச்சர்டு ஜெகதீசன் ஆகியோர் திறக்கப்பட்ட புதிய கட்டிடங்களை பார்வையிட்டனர்.
கால்நடை மருத்துவக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் உள்ள கால்நடை பண்ணை வளாகத்தில், குதிரை இலாயம், கறவை மாட்டுக்கொட்டகை மற்றும் உலர் தீவன உற்பத்தி சேமிப்பு கிடங்கு மற்றும் அடர் தீவன சேமிப்பு கிடங்கு அமைந்துள்ளது.
இக்கல்லூரியில், இளங்கலை கால்நடை மருத்துவ மாணவர்கள் கல்வி பயிலவும், செய்முறைப் பயிற்சி பெறவும், தேனி மாவட்டம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள விவசாயிகளுக்கு பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையமாக செயல்பட்டு. விவசாயிகளின் அறிவு மற்றும் செயல்திறனை மேம்படுத்தி புதுமையான தொழில்நுட்பத்தை கடைபிடித்து பொருளாதார வளர்ச்சியடைய மிகவும்
பயனுள்ளதாக அமையும்.
இந்நிகழ்வில் தேனி ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் ம.சக்கரவர்த்தி, வீரபாண்டி பேரூராட்சி தலைவர் கீதா சசி மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், அலுவலர்கள் கல்லூரி மாணவ, மாணவியர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
நாகராஜ், முதன்மை நிருபர்
Comments