தேனி பழைய டி.வி.எஸ். ரோடு - சேல்ஸ் சொசைட்டி தெரு இடையே அமைந்துள்ள ஸ்ரீ கண்ணாத்தாள் அம்மன் கோவில் கும்பாபிஷேகம் 23.8.2024 அன்று நடைபெற்றது.
கும்பாபிஷேக்திற்கு கோவில் பரம்பரை அறங்காவலர் கோபால கிருஷ்ணராஜா தலைமை தாங்கினார். கோவில் ,பொருளாளர் கொண்டுராஜா என்ற தர்ம கிருஷ்ணராஜா, நிர்வாக தலைவர் மலைச்சாமி, செயலாளர் ஈஸ்வரன், இணைச்செயலாளர் சுரேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கும்பாபிஷேகத்தின் முக்கிய நிகழ்வாக ஹோமங்கள் செய்து, மங்கள இசையுடன் கும்பத்திற்கு புனித நீர் ஊற்றப்பட்டது. இந்த கும்பாபிஷேக நிகழ்ச்சியில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
கும்பாபிஷேக விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் அன்னதான கமிட்டி சுரேஷ், முருகன், அன்னபூரணி கேட்டரிங் பாலமுருகன் ஆகியோர் மேற்பார்வையில் அன்னதானம் நடைபெற்றது.
மேலும் ஸ்ரீ கண்ணாத்தாள் கோவிலில் அம்மனுக்கு 48 நாட்கள் பொங்கல் வைக்கலாம் என கோவில் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
நாகராஜ், முதன்மை நிருபர்
Comments