Skip to main content

தேனியில் ஸ்ரீ கண்ணாத்தாள் அம்மன் கோவில் கும்பாபிஷேகம்

 


தேனி பழைய டி.வி.எஸ். ரோடு - சேல்ஸ் சொசைட்டி தெரு இடையே அமைந்துள்ள ஸ்ரீ கண்ணாத்தாள் அம்மன் கோவில் கும்பாபிஷேகம் 23.8.2024 அன்று நடைபெற்றது.  

கும்பாபிஷேக்திற்கு கோவில் பரம்பரை அறங்காவலர் கோபால கிருஷ்ணராஜா தலைமை தாங்கினார்.  கோவில் ,பொருளாளர் கொண்டுராஜா என்ற தர்ம கிருஷ்ணராஜா, நிர்வாக தலைவர் மலைச்சாமி, செயலாளர் ஈஸ்வரன், இணைச்செயலாளர் சுரேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 


முன்னதாக  திருவண்ணாமலை மாவட்டம், பழங்கோவில், நட்சத்திரகிரி செல்வமுத்து குமாரசாரியார் அன் பிரதர்ஸ், சென்னை சந்தன நல்லூர் நடராஜ சிவாச்சாரியார்கள் யாகசாலை, ஹோமங்கள் செய்து கும்பாபிஷேகத்தினை வயலின் மிருதங்க சக்ரவர்த்தி முதுமாமணி, நாகராஜ் ஓதுவார் மற்றும் திருப்பத்தூர் அக்ரஹாரம் பெருமாள் மலைக்கோயில் ஆஸ்தான நாதஸ்வர வித்வான் ரவிசங்கர் மங்கள இசையுடன் கும்பாபிஷேகம் நடைபெற்றது கோவில் வடிவமைப்பினை  .ஸ்ரீ வில்லிபுத்தூர் தியாகராஜன் ஸ்தபதி,வைரமுத்து, அம்மன் கல்சிலை வடிவமைப்பினை மல்லி சீனிவாசன் ஸ்தபதியும், கோபுரகலசம்,திருவாச்சியினை  வடிவமைப்பை தேனி தேனியை சேர்ந்த ஜெயசந்திர ஸ்தபதி, கோபி சிவரெங்க ராஜா ஸ்தபதி ஆகியோர்கள் செய்திருந்தனர். 

கும்பாபிஷேகத்தின் முக்கிய நிகழ்வாக ஹோமங்கள் செய்து, மங்கள இசையுடன் கும்பத்திற்கு புனித நீர் ஊற்றப்பட்டது. இந்த கும்பாபிஷேக நிகழ்ச்சியில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர். 

கும்பாபிஷேக விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் அன்னதான கமிட்டி சுரேஷ், முருகன், அன்னபூரணி கேட்டரிங் பாலமுருகன் ஆகியோர் மேற்பார்வையில் அன்னதானம் நடைபெற்றது.

மேலும் ஸ்ரீ கண்ணாத்தாள் கோவிலில் அம்மனுக்கு 48 நாட்கள் பொங்கல் வைக்கலாம் என கோவில் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

நாகராஜ், முதன்மை நிருபர் 


Comments