Skip to main content

நாடார் சரஸ்வதி பொறியியல் கல்லூரியில் உலகளாவிய வேலைவாய்ப்பு பற்றிய கருத்தரங்கம்

தேனி நாடார் சரஸ்வதி பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் உலகளாவிய வேலைவாய்ப்பு பற்றிய கருத்தரங்கம் நடைபெற்றது இந்த கருத்தரங்கத்திற்கு கல்லூரியின் செயலாளர்கள் ராஜ்குமார், மகேஸ்வரன் ஆகியோர் தலைமை தாங்கினர். இணைச்செயலாளர் நவீன்ராம் முன்னிலை வகித்தார். 

கல்லூரியின் கணினிபொறி அறிவியல் துறையின் பேராசிரியர் சோலைராஜ் வரவேற்புரையாற்றினார். கல்லூரியின் முதல்வர் முனைவர் மதளைகந்தரம் மாணவர்களுக்கு இக்கருத்தரங்கத்தின் முக்கியத்துவத்தை பற்றி எடுத்துரைத்து வாழ்த்துரை வழங்கினார்.

இந்த கருத்தரங்கத்தில் ஜப்பான் டோக்கியோ மைக்ரோசாப்ட் கார்ப்பரேசன் மூத்த உற்பத்தி மேலாளர் (Senior Product Manager) விக்னேஷ் மிட்ஸ்மி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவர்களிடையே ஜப்பான் ஐரோப்பா. மற்றும் தெற்கு ஆசிய நாடுகளில் இந்திய பொறியாளர்களுக்கு வழங்கப்படும் வேலைவாய்ப்புகள், செயற்கை நுண்ணறிவு பிரிவு. தகவல் தொழில்நுட்பம். ஆட்டோ மொபைல் இன்டஸ்ட்ரி, நெட்வொர்க், டேட்டா சயின்ஸ் ஆகிய துறைகளில் வேலைவாய்ப்பு பெறுவது. பொறியியல் துறை மாணவர்கள் கல்லூரியில் படிக்கும் பொழுது ஜப்பான் தொழில்நுட்ப நிறுவனங்களில் பயிற்சி பெறுவது (Intenship) தொடர்பான ஆலோசனைகள் ஆகியவற்றை பற்றி எடுத்துரைத்தார். 

ஜப்பான் நிறுவனங்களில் பணிபுரிவதற்கான தொழில்நுட்ப அறிவு, மொழி அறிவு பற்றியும். ஜப்பான் கல்வி நிறுவனங்களில் உயர்கல்வி படிப்பதற்கான வழிமுறைகள். மைக்ரோ சாப்ட் AI எதிர்கால தொழில்நுட்பம், பெங்களூர் ரகுதன் ஜப்பான் நிறுவனத்தில் வேலை பெறுவதற்கான தகுதிகள் மற்றும் பொறியியல் துறைகளில் உள்ள வேலைவாய்ப்புகள் பற்றியும், மாணவர்களிடையே கலந்துரையாடினார். 

மேலும் இக்கருத்தரங்கில் பல்வேறு பொறியியல் துறைகளில் மாணவர்கள்
வேலைவாய்ப்பு பெறுவது தொடர்பான தகவல்களை பெற்று பயனடைந்தனர்.

கருத்தரங்கத்தில் தேனி மேலப்பேட்டை இந்து நாடார்கள் உறவின்முறையின் தலைவர் ராஜமோகன், உபதலைவர் கணேஷ், பொதுச்செயலாளர் ஆனந்தவேல், பொருளாளர் பழனியப்பன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

கருத்தரங்கத்திற்கான ஏற்பாடுகளை கல்லூரியின் துணை முதல்வர்கள் மாதவன், சத்யா, வேலைவாய்ப்பு அலுவலர் கார்த்திகேயன் மற்றும் பேராசிரியர்கள் செய்திருந்தனர். முடிவில் வேலைவாய்ப்பு துறை ஒருங்கிணைப்பாளர் சக்கரவர்த்தி சாமி துரை நன்றியுரை கூறினார்.

நாகராஜ், முதன்மை நிருபர் 

Comments