Skip to main content

Posts

தேனியில் எல்.எஸ்.மில்ஸ் கூடைப்பந்தாட்ட கழகம் சார்பில் மாவட்ட அளவிலான கூடைப்பந்தாட்ட போட்டி

தேனி எல்.எஸ். மில்ஸ் கூடைப்பந்தாட்ட கழகம் சார்பில் 2-ம் ஆண்டு மாவட்ட அளவிலான கூடைப்பந்தாட்ட போட்டிகள் கடந்த 3 நாட்களாக தேனி நாடார் சரசுவதி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் நடைபெற்றது.  இந்த போட்டியில் மாவட்ட அளவில் இருந்து 20 அணிகள் கலந்து கொண்டன. நாக்-அவுட் மற்றும் லீக் சுற்று முறையில் நடைபெற்ற இப்போட்டியில் லீக் சுற்றுக்கு பெரியகுளம் சில்வர் ஜுபிலி அணி, பாப் அணி, தேனி எல்.எஸ்.மில்ஸ் அணி, கம்பம் பென்னிகுவிக் அணி தகுதி பெற்றது. இதில் லீக் சுற்றின் இறுதி ஆட்டத்தில்  பெரியகுளம் பாப் அணி, தேனி எல்.எஸ்.மில்ஸ் அணியை 95:90  என்ற புள்ளி கணக்கில் வென்று முதலிடத்தை பிடித்தது. அதனைத்தொடர்ந்து பரிசளிப்பு விழா நடைபெற்றது. இவ்விழாவிற்கு தேனி எல்.எஸ் மில்ஸ் நிர்வாக இயக்குநர் மணிவண்ணன் தலைமை தாங்கினார். தேனி மாவட்ட கூடைப்பந்தாட்ட கழக தலைவர் சிதம்பரசூரியவேலு, துணைத்தலைவர் டாக்டர் செல்வராஜ், தமிழ்நாடு கூடைப்பந்தாட்ட கழக பயிற்சியாளர் கமிட்டி மற்றும் தேர்வுக்குழு தலைவர் சுப்புராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். எல்.எஸ்.மில்ஸ் கூடைப்பந்தாட்ட கழக உபதலைவர் ராமராஜ் வரவேற்றார்.  விழாவில் தேன...

தேனியில் இதர பிற்படுத்தப்பட்ட சமுதாய உரிமைக்கான கூட்டமைப்பு சமுதாய நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

தேனியில் இதர பிற்படுத்தப்பட்ட ஓ.பி.சி) சமுதாய உரிமைக்கான கூட்டமைப்பு சமுதாய நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் பொம்மையகவுண்டன்பட்டியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.  கூட்டத்திற்கு ஓய்வு பெற்ற போலீஸ் சூப்பிரண்டு  ரத்தினசபாபதி தலைமை தாங்கினார். ஓய்வு பெற்ற மத்திய புலானய்வுதுறையை சேர்ந்த வெள்ளியங்கிரி, வீரசைவ பேரவை தலைவர் நாகரத்தினம், மத்திய மண்டல செயலாளர் சரவணதேவா ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டமைப்பின் தேனி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பிரகாஷ் வரவேற்றார். கூட்டத்தில் கள்ளர் பேரவை தலைவர் மூவேந்தர் செல்வராஜ், அகமுடையார் மாவட்ட தலைவர் குணசேகரன், நாயுடு ஒருங்கிணைப்பு குழு தலைவர் செல்லப்பாண்டியன், அனைத்து விஸ்வகர்மா சமுதாய மாவட்ட தலைவர் பாலமுருகன், கூட்டமைப்பின் பெண்கள் பாதுகாப்புக்குழு மாவட்ட செயலாளர் கிஷோர், கூட்டமைப்பின் இளைஞர் விழிப்புணர்வு தலைவர் தமிழ்ஆதி, குறும்ப கவுண்டர் சமுதாயம் சார்பில் கெப்புரெங்கன்பட்டி முருகன் மற்றும் கூட்டமைப்பை சேர்ந்த சமுதாய பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் அனைத்து சமுதாய தலைவர்களும் தங்களது கருத்துகளை தெரிவித்தனர். கூட்டத்தில் ...

தேனி நகரில் அனுமதி இன்றி பிளக்ஸ் பேனர்கள் வைத்தால் ரூ.25 ஆயிரம் அபராதம்

தேனி அல்லிநகரம் நகராட்சி பகுதி மாவட்டத்தின் தலைநகரில் அமைந்துள்ளதால் இப்பகுதியில் அரசியல் கட்சிகளின் பிளக்ஸ் பேனர்கள், வணிக நிறுவனங்களின் பேனர்கள், கோவில் திருவிழா, திருமணம் மற்றும் பல்வேறு விழாகளுக்கான பிளக்ஸ் பேனர்கள் வைப்பது நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்த பேனர்கள் வைப்பதனால் நகரில் போக்குவரத்து நெரிசலும், வர்த்தக பாதிப்பும், சில நேரங்களில் விபத்துகளும் ஏற்பட்டு வருகிறது. இந்த பிளக்ஸ் பேனர்கள் வைப்பதை தடுப்பதற்காக நகராட்சி நிர்வாகம் குறிப்பிட்ட இடத்தில் தான் பேனர்கள் வைக்க வேண்டும். குறிப்பிட்ட நாட்களுக்கு மட்டுமே பேனர்கள் வைக்க வேண்டும் என பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்திருந்தாலும், அதனை பொருட்படுத்தாமல் பிளக்ஸ் பேனர்கள் வைப்பது தொடர் கதையாகி கொண்டு வருகிறது. இதனை தடுக்க வேண்டுமென பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் அவ்வப்போது நகராட்சி நிர்வாகம் மற்றும் மாவட்ட நிர்வாகத்திடம் புகார் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இன்று தேனி நகரில் அனுமதி இன்றி வைக்கப்பட்டுள்ள பிளக்ஸ் பேனர்கள் அகற்றும் பணி தேனி அல்லிநகரம் நகராட்சி நகர அமைப்பு ஆய்வாளர் சலீம் தலைமையில் நகராட்சி பணிய...

குள்ளபுரம் வேளாண்மை தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்களுக்கு அனுபவப்பாடம்.

கம்பம் அருகே உள்ள சுருளி தீர்த்தத்தில் குள்ளபுரம் வேளாண்மை தொழில்நுட்பக் கல்லூரி  மாணவர்களுக்கு அன்பு அறம் செய் சுருளிப்பட்டி அன்பு ராஜா தனது அனுபவப் பாடத்தை கற்றுத் தந்தார். நிகழ்வில் கல்லூரியின் பேராசிரியர் முனைவர். இணை பேராசிரியர் ஜெயலட்சுமி, உதவிப் பேராசிரியர் சரவணன், சுரேஷ், சோனியா கலந்துகொண்டு மாணவர்களுக்கான அனுபவ பாடத்தை கற்றுத் தந்தனர். பாடத்தில் கூறியது என். ஜி.ஓ.என்றால் என்ன? அதன் செயல்பாடுகள் என்ன? பேரிடர் என்றால் என்ன? இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி செயல்பாடுகள் என்ன? மரம் வளர்ப்பதன் அவசியம் என்ன? ஒருமுறை பயன்படுத்தும் நெகிழிப்பை தடுப்பது எப்படி என்ற பாடத்தை எடுத்துக் கூறி அவர்களுக்கு மஞ்சப் பையான துணிப்பை வழங்கியும், இன்றைய சிறப்பு தினமான ஜூன் 28 உலக மரங்கள் தினத்தைப் பற்றியும் மாணவர்களுக்கு எடுத்து கூறி சுருளிப்பட்டியில் இயங்கி வரும் சங்கமம் அறக்கட்டளை பொதுமக்களுக்கான சேவையை எவ்வாறு செய்கிறது என்பதை வருகை புரிந்த 150 மாணவர்களுக்கும் கற்றுக் கொடுத்து அவர்களின் கல்லூரி நோட்டில் எழுதப்பட்டது. பாண்டியன், உதவி ஆசிரியர் 

தேனி மாவட்டத்தில் 2-வது நாளாக நடந்த ஜமாபந்தியில் 1148 கோரிக்கை மனுக்கள்

  தேனி மாவட்டத்தில் உள்ள பெரியகுளம், ஆண்டிபட்டி, போடிநாயக்கனூர், உத்தமபாளையம், தேனி ஆகிய 5 தாலுகாக்களில் வருவாய் தீர்வாயம் என்னும் ஜமாபந்தி 2-வது நாளாக 28.6.2024 அன்று நடைபெற்றது. இதில் உத்தமபாளையம் தாலுகாவில் உள்ள தேவாரம், தேவாரம் மலை, தே.மீனாட்சிபுரம், பண்ணைப்புரம், பொட்டிபுரம்,  சங்கராபுரம் ஆகிய வருவாய் கிராமங்களுக்கு ஜமாபந்தி மாவட்ட கலெக்டர் ஆர்.வி. ஷஜீவனா தலைமையிலும், பெரியகுளம் தாலுகாவில் உள்ள ஜெயமங்கலம் பகுதி - 1, பகுதி - 2, குள்ளப்புரம், மேல்மங்கலம் பகுதி-1, பகுதி-2 கிராமங்களுக்கு மாவட்ட வருவாய் அலுவலர்  இரா.ஜெயபாரதி தலைமையிலும், தேனி தாலுகாவில் உள்ள கோட்டூர், சீலையம்பட்டி, கொடுவிலார்பட்டி, ஜங்கால்பட்டி, கிராமங்களுக்கு தேனி உதவி ஆணையர் (கலால்) ரவிச்சந்திரன் தலைமையிலும், ஆண்டிபட்டி தாலுகாவில் உள்ள புலிமான்கோம்பை, திம்மரசநாயக்கனூர் பகுதி -1, பகுதி -2 கிராமங்களுக்கு பெரியகுளம் வருவாய் கோட்டாட்சியர் முத்துமாதவன் தலைமையிலும்,          போடிநாயக்கனூர் தாலுகாவில் உள்ள போ.மீனாட்சிபுரம், பூதிப்புரம், கோடாங்கிபட்டி, உப்புக்கோட்டை ஆகிய கிராமங்களு...

தேனி மாவட்டத்தில் முதல் நாளில் நடந்த ஜமாபந்தியில் 1208 கோரிக்கை மனுக்கள்

தேனி மாவட்டத்தில் உள்ள தேனி, பெரியகுளம், ஆண்டிபட்டி, போடிநாயக்கனூர், உத்தமபாளையம் ஆகிய 5 தாலுகாக்களில் வருவாய் தீர்வாயம் என்னும் ஜமாபந்தி 27.6.2028 முதல் தொடங்கியது.  இந்த ஜமாபந்தி 27.6.2024 முதல் 5.7.2024  வரை (29.6.2024, 30.6.2024  மற்றும் 1.7.2024) ஆகிய நாட்கள் நீங்கலாக 1433 ஆம் பசலி ஆண்டிற்கான வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) நடத்த திட்டமிடப்பட்டது. இதில் உத்தமபாளையம் தாலுகா அலுவலகத்தில் உத்தமபாளையம் வட்டத்திற்குட்பட்ட பூலானந்தபுரம், சின்னமனூர், கருங்காட்டான்குளம், முத்துலாபுரம், சின்னஓவுலாபுரம்  ஆகிய வருவாய் கிராமங்களுக்கான வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) மாவட்ட கலெக்டர்  ஆர்.வி.ஷஜீவனா தலைமையில் நடைபெற்றது. அதுபோல  பெரியகுளம் வட்டத்தில் கெங்குவார்பட்டி பகுதி-1,  பகுதி -2, தேவதானப்பட்டி பகுதி- 1, பகுதி-2, தே.வாடிப்பட்டி, சில்வார்பட்டி கிராமங்களுக்கு மாவட்ட வருவாய் அலுவலர் இரா.ஜெயபாரதி தலைமையிலும், தேனி வட்டத்தில் ஊஞ்சாம்பட்டி, அல்லிநகரம், வீரபாண்டி, உப்பார்பட்டி ஆகிய கிராமங்களுக்கு தேனி உதவி ஆணையர் (கலால்) ரவிச்சந்திரன்  தலைமையிலும், ஆண்டிபட்டி வட்டத...

தேனியில் இந்து எழுச்சி முன்னணி சார்பில் 9-ம் ஆண்டு பண்பு பயிற்சி முகாம்

தேனி மாவட்ட இந்து எழுச்சி முன்னணி சார்பில் 9-ஆம் ஆண்டு ஒரு நாள் பண்பு பயிற்சி முகாம் 23.6.2024 அன்று அல்லிநகரம் மலைக்கோவில் செல்லும் பாதையில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது.  வேதபுரி பூஜ்ய ஸ்ரீ ஓங்காராநந்த மஹா சுவாமிகளின் சீடர் சுவாமி பூர்ணானந்தஸரஸ்வதி சுவாமிகள் திருவிளக்கு ஏற்றி வைத்து பயிற்சியை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியின் போது மாவட்ட பொருளாளர் ஜோதிட ரத்னா செந்தில்குமார் விநாயகர்துதி, தேசபக்தி பாடல் பாடினார். அதனைத்தொடர்ந்து இயக்கத்தின் வளர்ச்சியும் எதிர்காலம் திட்டங்கள் பற்றி அமைப்பின் நிறுவனர் பொன். இரவி, மாவட்ட தலைவர் இராமராஜ், மாவட்ட பொதுச்செயலாளர் மாய.லோகநாதன், தேனி நகர தலைவர் செல்வபாண்டி ஆகியோர் பேசினார்கள்.  இதனைத்தொடர்ந்து நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலும், தேசம் தற்போது பயணிக்கும் பாதையை பற்றி இந்து எழுச்சி முன்னணி பொறுப்பாளர்கள் பாலமுருகன், சோலைராஜன், முத்துராஜ், அய்யப்பன், சிவராம் ஆகியோர் பேசினார்கள். இதனை அடுத்து மேடை பேச்சாளர்களை உருவாக்குவது மற்றும் சமுதாயத்தில் இளைஞர்களின் பங்களிப்பும் பொறுப்பும் சம்பந்தமாக மாவட்ட அமைப்பாளர் கோவிந்தராஜ், மாவட்ட ...

தேனி பாராளுமன்ற தொகுதியில் திமுக வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வன் 2,78,825 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்

தேனி பாராளுமன்ற தொகுதியில் தபால் ஓட்டுகள் மற்றும் பதிவான வாக்குகள் என மொத்தம் 11,41,219. இவை 23 சுற்றுகள் மூலம் எண்ணப்பட்டு முடிவில் வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் விபரம்: திமுக - 5,71,493 அதிமுக - 1,55,587 அமமுக - 2,92668 நாதக - 76,834 நோட்டா - 11,336 வித்தியாசம் - 2,78,825 வாக்குகள் எனவே 2,78,825 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் தங்கதமிழ்ச்செல்வன் வெற்றி பெற்றார். இதனைத் தொடர்ந்து திமுக வேட்பாளர் தங்கதமிழ்ச்செல்வனிடம் வெற்றி பெற்றதற்கான சான்றிதழை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும், தேனி மாவட்ட கலெக்டருமான ஷஜீவனா வழங்கினார். அப்போது சட்டமன்ற உறுப்பினர்கள் கம்பம் ராமகிருஷ்ணன், ஆண்டிபட்டி மகாராஜன், பெரியகுளம் சரவணகுமார் மற்றும் திமுக நிர்வாகிகள் கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர். இதனை அடுத்து தேனி பாராளுமன்ற தொகுதியில் வெற்றி பெற்ற திமுக வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் உழைப்பை கண்டு செய்த திட்டங்கள் மற்றும் சாதனைகளுக்கு தமிழகம் முழுவதும் மக்கள் மாபெரும் வெற்றியை திமுக கூட்டணிக்கு அளித்துள்ளனர். தேனி த...

தேனியில் மாவட்ட அணிகளுக்கு இடையேயான தடகள போட்டி: தேனி USA அணி முதல் இடத்தை பிடித்தது

தேனி யு.எஸ்.ஏ., ஸ்போர்ட்ஸ் அகாடமி சார்பில் பல்வேறு மாவட்ட அழைப்பு அணிகளுக்கு இடையேயான தடகள போட்டி தேனி மாவட்ட விளையாட்டு மைதானத்தில் 29.5.2024 அன்று  நடைபெற்றது. இந்த போட்டிகள் 12 வயது, 14 வயது, 17 வயது, 19 வயது ஆகிய பிரிவினர்களிடையே நடத்தப்பட்டது. இதில் 100 மீட்டர், 200 மீட்டர், 400 மீட்டர், நீளம் தாண்டுதல், தொடர் ஓட்டம், தட்டு எறிதல் போன்ற போட்டிகள் நடந்தது. இந்த போட்டிகளில் தேனி, கன்னியாகுமரி, திண்டுக்கல், ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி ஆகிய பகுதிகளில் இருந்து வீரர்-வீராங்கனைகள் 400-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இதில் ஒட்டுமொத்த சேம்பியன் பட்டத்தை தேனி யு.எஸ்.ஏ., ஸ்போர்ட்ஸ் அகாடமி அணி 267 புள்ளிகள் பெற்று முதல் இடத்தையும், பரமக்குடி அணி 168 புள்ளிகள் பெற்று இரண்டாம் இடத்தை பிடித்தது. இதனைத்தொடர்ந்து விளையாட்டு போட்டிகளில் பெற்ற அணிகள் மற்றும் வீரர், வீராங்கனைகளுக்கு பரிசளிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு தேனி யு.எஸ்.ஏ., ஸ்போர்ட்ஸ் அகாடமி நிறுவனர் வக்கீல் செல்வம் தலைமை தாங்கினார். செயலாளர் சேரலாதன், ஒலிம்பிக் பிசியோ நந்தா, பயிற்சியாளர் பரமேஸ், அகாடமி சட்ட ஆலோசகர்...

தேனியில் உலக பசி தினத்தை முன்னிட்டு அனிபா பிரியாணி சார்பில் உணவு வழங்கல்

உலக பசி தினத்தை முன்னிட்டு தேனி மாவட்டத்தில் ஆதரவற்றோர் 2500 பேருக்கு பசியாற பிரியாணி வழங்கிய நிகழ்ச்சி நடந்தது.  பிரியாணிகளின் ராஜா அனிபா பிரியாணி உணவகம் நடத்திய இந்த நெகிழ்ச்சியான நிகழ்வில் KPY பாலா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ஆதரவற்றோருக்கு பிரியாணி வழங்கி மகிழ்ந்தார். ஆண்டுதோறும் மே 28-ம் தேதி உலக பசி தினம் அனுசரிக்கப்படுகிறது. உலகம் முழுவதும் பசியால் வாடும் மில்லியன் கணக்கான மக்கள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்த தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இந்த நாளில் ஆதரவற்றோருக்கு உணவு வழங்குவதை பல்வேறு நாடுகளில் கடைபிடித்து வருகின்றனர். இந்த ஆண்டு பசி தினத்தை முன்னிட்டு தேனியை தலைமையிடமாக கொண்டு வரும் பிரபல பிரியாணிகளின் உணவகமான அனிபா பிரியாணி ஆதரவற்ற ஆயிரம் பேருக்கு பிரியாணி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்காக உருவாக்கப்பட்ட பிரத்யேக இலவச உணவு வாகனம் தேனி மற்றும் சுற்றுப்புறங்களில் பயணித்து சாலையோரம் இருக்கும் ஆதரவற்றோர், ஆதரவற்றோர் இல்லங்களில் இருப்போர் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு பிரியாணி வழங்கப்பட்டது. இந்த இலவச உணவு வாகனத்தை முன்னாள் எம்.பி., தங்க ...