தேனியில் இதர பிற்படுத்தப்பட்ட ஓ.பி.சி) சமுதாய உரிமைக்கான கூட்டமைப்பு சமுதாய நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் பொம்மையகவுண்டன்பட்டியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு ஓய்வு பெற்ற போலீஸ் சூப்பிரண்டு ரத்தினசபாபதி தலைமை தாங்கினார். ஓய்வு பெற்ற மத்திய புலானய்வுதுறையை சேர்ந்த வெள்ளியங்கிரி, வீரசைவ பேரவை தலைவர் நாகரத்தினம், மத்திய மண்டல செயலாளர் சரவணதேவா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டமைப்பின் தேனி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பிரகாஷ் வரவேற்றார். கூட்டத்தில் கள்ளர் பேரவை தலைவர் மூவேந்தர் செல்வராஜ், அகமுடையார் மாவட்ட தலைவர் குணசேகரன், நாயுடு ஒருங்கிணைப்பு குழு தலைவர் செல்லப்பாண்டியன், அனைத்து விஸ்வகர்மா சமுதாய மாவட்ட தலைவர் பாலமுருகன், கூட்டமைப்பின் பெண்கள் பாதுகாப்புக்குழு மாவட்ட செயலாளர் கிஷோர், கூட்டமைப்பின் இளைஞர் விழிப்புணர்வு தலைவர் தமிழ்ஆதி, குறும்ப கவுண்டர் சமுதாயம் சார்பில் கெப்புரெங்கன்பட்டி முருகன் மற்றும் கூட்டமைப்பை சேர்ந்த சமுதாய பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் அனைத்து சமுதாய தலைவர்களும் தங்களது கருத்துகளை தெரிவித்தனர்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு- கூட்டமைப்பில் உள்ள ஒவ்வொரு சமுதாயத்திற்கும் 3 பேர் வீதம் மாவட்ட நிர்வாக குழு பொறுப்பாளர்களாக தேர்வு செய்யப்பட்டனர். பீகார், ஆந்திரா போன்ற மாநிலங்களில் சாதி வாரியாக கணக்கெடுப்பு நடத்தப்பட்டது போல தமிழக அரசு தானகவே முன்வந்து சாதி வாரியான கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
முடிவில் ஒக்கலிகர் சமூக மாவட்ட பொருளாளர் ஆசிரியர் மும்மூர்த்தி நன்றி கூறினார்.
பாண்டியன், உதவி ஆசிரியர்
.
Comments