வேதபுரி பூஜ்ய ஸ்ரீ ஓங்காராநந்த மஹா சுவாமிகளின் சீடர் சுவாமி பூர்ணானந்தஸரஸ்வதி சுவாமிகள் திருவிளக்கு ஏற்றி வைத்து பயிற்சியை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியின் போது மாவட்ட பொருளாளர் ஜோதிட ரத்னா செந்தில்குமார் விநாயகர்துதி, தேசபக்தி பாடல் பாடினார். அதனைத்தொடர்ந்து இயக்கத்தின் வளர்ச்சியும் எதிர்காலம் திட்டங்கள் பற்றி அமைப்பின் நிறுவனர் பொன். இரவி, மாவட்ட தலைவர் இராமராஜ், மாவட்ட பொதுச்செயலாளர் மாய.லோகநாதன், தேனி நகர தலைவர் செல்வபாண்டி ஆகியோர் பேசினார்கள்.
இதனைத்தொடர்ந்து நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலும், தேசம் தற்போது பயணிக்கும் பாதையை பற்றி இந்து எழுச்சி முன்னணி பொறுப்பாளர்கள் பாலமுருகன், சோலைராஜன், முத்துராஜ், அய்யப்பன், சிவராம் ஆகியோர் பேசினார்கள். இதனை அடுத்து மேடை பேச்சாளர்களை உருவாக்குவது மற்றும் சமுதாயத்தில் இளைஞர்களின் பங்களிப்பும் பொறுப்பும் சம்பந்தமாக மாவட்ட அமைப்பாளர் கோவிந்தராஜ், மாவட்ட செயலாளர் இராமமூர்த்தி மற்றும் கனகுபாண்டி, தினேஸ் இளம்பருதி ஆகியோர் பேசினார்கள்.
பயிற்சியின் போது வினாடி-வினா கலந்துரையாடல் நிகழ்ச்சியை செந்தில்குமார், ,சிவராமன், பொன்.இரவி, இராமராஜ், சக்திவேல் ஆகியோர் நடத்தினார்கள். இதனைத்தொடர்ந்து விளையாட்டு மற்றும் உடற்பயிற்சி கற்று தரப்பட்டடது. பயிற்சியில் 100-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் கலந்து கொண்டனர்.
பாண்டியன், உதவி ஆசிரியர்
Comments