Skip to main content

தேனியில் உலக பசி தினத்தை முன்னிட்டு அனிபா பிரியாணி சார்பில் உணவு வழங்கல்

உலக பசி தினத்தை முன்னிட்டு தேனி மாவட்டத்தில் ஆதரவற்றோர் 2500 பேருக்கு பசியாற பிரியாணி வழங்கிய நிகழ்ச்சி நடந்தது. 

பிரியாணிகளின் ராஜா அனிபா பிரியாணி உணவகம் நடத்திய இந்த நெகிழ்ச்சியான நிகழ்வில் KPY பாலா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ஆதரவற்றோருக்கு பிரியாணி வழங்கி மகிழ்ந்தார்.


ஆண்டுதோறும் மே 28-ம் தேதி உலக பசி தினம் அனுசரிக்கப்படுகிறது. உலகம் முழுவதும் பசியால் வாடும் மில்லியன் கணக்கான மக்கள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்த தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இந்த நாளில் ஆதரவற்றோருக்கு உணவு வழங்குவதை பல்வேறு நாடுகளில் கடைபிடித்து வருகின்றனர்.

இந்த ஆண்டு பசி தினத்தை முன்னிட்டு தேனியை தலைமையிடமாக கொண்டு வரும் பிரபல பிரியாணிகளின் உணவகமான அனிபா பிரியாணி ஆதரவற்ற ஆயிரம் பேருக்கு பிரியாணி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்காக உருவாக்கப்பட்ட பிரத்யேக இலவச உணவு வாகனம் தேனி மற்றும் சுற்றுப்புறங்களில் பயணித்து சாலையோரம் இருக்கும் ஆதரவற்றோர், ஆதரவற்றோர் இல்லங்களில் இருப்போர் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு பிரியாணி வழங்கப்பட்டது.


இந்த இலவச உணவு வாகனத்தை முன்னாள் எம்.பி., தங்க தமிழ்ச்செல்வன் ஆகியோர் முன்னிலையில் சமூக சேவகர் விஜய் டிவி கே.பி.ஒய் பாலா சிறப்பு விருந்தினராக பங்கேற்று தொடங்கி வைத்தார். 

அதனைத் தொடந்து ஆதரவற்றோருக்கு பிரியாணி பொட்டலங்களையும் அவர் வழங்கி நெகிழ்ச்சி அடைந்தார்.

இந்த நிகழ்ச்சியில் அனிபா பிரியாணி நிறுவனர் பாசித் ரஹ்மான் பேசுகையில், எங்களது அனிபா பிரியாணி உணவகம் தமிழ்நாடு முழுவதும் 25-க்கும் மேற்பட்ட கிளைகளுடன் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. ஆதரவற்றோருக்கு உதவும் நோக்கில் இன்று உலக பசி தினத்தை முன்னிட்டு இன்று தேனியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆதரவற்றோருக்கு பிரியாணி பொட்டலங்களை வழங்கியுள்ளோம். 

இதேபோல மற்ற கிளைகளில் பிரியாணி பொட்டலங்கள் வழங்கப்பட்டன. இன்று இந்நிகழ்ச்சி மூலம் மொத்தம் 2500-க்கும் அதிகமான பொட்டலங்கள் வழங்கப்பட்டுள்ளன என்று பேசினார்.

அனிஃபா பிரியாணி பற்றி:

முகமது அனிஃபா பிரியாணி தனது முதல் விற்பனை நிலையத்தை 2018 ஆம் ஆண்டில் திறந்து, தேனியில் 10 கிலோ பிரியாணியை விற்கும் ஒரு கடையில் இருந்து மற்ற சுவையான இந்திய உணவு வகைகளைத் தயாரிக்கும் 2 நவீன விற்பனை நிலையங்களாக வளர்ந்துள்ளது. முஹம்மது அனிஃபா பிரியாணி - பிரியாணியின் அரசன் திரு.பாசித் ரஹ்மான் அவர்களால் தொடங்கப்பட்டது, மேலும் கடுமையான உழைப்பு மற்றும் தரம் மற்றும் சேவையில் சமரசமற்ற மனப்பான்மை ஆகியவற்றின் மூலம், ராமநாதபுரத்தில் உள்ள மிகவும் பிரபலமான பிரியாணி உணவகங்களில் ஒன்றாக இந்த பிராண்ட் உருவாக்கப்பட்டுள்ளது. ஆரம்பத்திலிருந்தே, அவர் எப்போதும் சுவைக்கு முக்கியத்துவம் அளித்து, தனது உணவகத்தில் செய்யப்படும் பிரியாணி சுவையாகவும் தனித்துவமாகவும் இருப்பதை உறுதி செய்தார். 

தரமான மசாலாப் பொருட்களிலிருந்து தயாரிக்கப்பட்ட பொருட்கள் மற்றும் பிரியாணி சிறந்த தரமான அரிசியைப் பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட பொருட்களை உன்னிப்பாகத் தேர்ந்தெடுப்பதன் மூலம் இது அடையப்பட்டது மற்றும் இன்னும் உள்ளது. ஸ்ரீ.பாசித் ரஹ்மான், இந்தத் துறையில் 13 வருட அனுபவமுள்ள மிகவும் அனுபவம் வாய்ந்த பிரியாணி சமையல்காரர். அவரது பிரியாணி ராமநாதபுரத்தில் ஒரு சிறந்த பெயரைப் பெற்றது மற்றும் இந்த போட்டி சூழலில் வாடிக்கையாளர் திருப்திக்கு சேவை செய்வதன் மூலம் பிரியாணி வழங்குனரின் அடையாளமாக வளர்ந்தது. 

தற்போது இந்த பிராண்டின் கிளைகள் மதுரை, திருச்சி, கொடைக்கானல், பெரியகுளம், ராமநாதபுரம், தேனி, சென்னை, பாண்டிச்சேரி, திருவள்ளூர், வேளாங்கனி, தஞ்சாவூர், பட்லகுண்டு, கம்பம், கோவை, தூத்துக்குடி, சிவகாசி, போடிநாயக்கனூர், குமளி மற்றும் சிவகங்கை ஆகிய இடங்களில் உள்ளன.

அய்யன் குமார், சிறப்பு நிருபர் 

Comments